நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜனவரி 28, 2025

ஐயாற்றில் கோபூஜை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 22
செவ்வாய்க்கிழமை

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திரு ஐயாறு பூலோக கயிலாயமாகிய
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு சோம வார பிரதோஷ நாளாகிய
நேற்று காலை பத்து ம்ணியளவில் -

தருமபுர ஆதீனத்தின்  இருபத்தேழாவது   குரு மகாசந்நிதானம் அவர்களின் திருமுன்னர்  நூற்றெட்டு பசுக்களுக்கு கோபூஜை  நடைபெற்றது.. 

மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகாசந்நிதானம் அவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்..

எளியேனால் இவ்வைபவத்திற்குச் செல்ல இயலவில்லை..

ஒளிப்படங்களை வழங்கிய ஆதீன அன்பர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..



















வானவர் வணங்க வைத்தார் 
  வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார் 
  காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார் 
  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார் 
  ஐயன் ஐயாறனாரே.  4/38/5
-: திருநாவுக்கரசர் :- 

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. படங்கள் தெளிவாக, அழகாக இருக்கின்றன. 'கோ'க்களுக்குக் கொண்டாட்டம்தான், விருந்துதான்!

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    படங்கள் அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஐயாறப்பர் ஆலயத்தின் கோ பூசை கண்டு வணங்கினோம்.

    அனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டுவோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..