நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி
திங்கட்கிழமை
இன்று
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி...
தேவையானவை
சம்பா கோதுமை ரவை 200 கி
தேங்காய் ஒருமூடி
சின்ன வெங்காயம் 10
தக்காளிப்பழம் ஒன்று
கேரட் ஒன்று
பீன்ஸ் 10
பச்சைப் பட்டாணி 50
பச்சை மிளகாய் 2
பட்டை சிறியதாக 2 துண்டு
முந்திரி 10
அன்னாசிப்பூ ஒன்று
நெய் தேவைக்கு
மல்லித்தழை சிறிதளவு
கல் உப்பு தேவைக்கு
குறிப்பு ;-
சம்பா கோதுமை ரவையாக இருப்பதே நல்லது.. பச்சைப் பட்டாணி எனில் பிஞ்சாக உரித்து எடுக்கப்பட்டவை மட்டுமே.. உலர்ந்த பட்டாணியைத் தவிர்க்கவும்..
செய்முறை :
1)
ரவையை வெறும் வாணலியில் வறுத்தெடுத்துக் கொள்ளவும்...
2)
தக்காளியைக் கழுவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. பச்சை மிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்..
3)
சின்ன வெங்காயத்தை உரித்து - கழுவிக் கொள்ளவும்.. நறுக்க வேண்டாம்..கேரட் பீன்ஸ் இவற்றைச் சன்னமாக நறுக்கி பட்டாணியுடன் சேர்த்து எல்லாவற்றையும் இட்லி தட்டில் வைத்து அவித்துக் கொள்ளவும்...
4)
தேங்காயைத் துருவி கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்... (விருப்பம் எனில் திட்டமாக தண்ணீர் விட்டு அரைத்து விழுதாகவும் எடுத்துக் கொள்ளலாம்)...
5)
பாத்திரம் ஒன்றில் - ஒன்றுக்கு மூன்று (தேங்காய்ப் பால் எனில் ஒரு பங்குக்கு மூன்று பங்கு.. தேங்காய் விழுது எனில் ஒன்றுக்கு நான்கு..) என்ற கணக்கில் - தண்ணீர் ஊற்றி, அதில் அவித்த காய்களுடன் தக்காளியை சற்று வதக்கி
பச்சை மிளகாய், பட்டை, அன்னாசிப்பூ தாளித்து உப்பு சேர்த்து வேக வைக்கவும்..
6)
எல்லாம் அரை வேக்காடாக இருக்கின்ற நிலையில் தேங்காய்ப் பாலை ஊற்றி வறுதெடுத்த ரவை, முந்திரியைச் சேர்த்து.,
7)
ரவை கட்டியாகத் திரண்டு விடாமல் சற்று கவனத்துடன் கிளறி விட வேண்டும்..
8)
ரவை நன்றாக வெந்து மலர்ந்ததும், சிறிது நெய் விட்டு மல்லித் தழையைத் தூவி கிளறி விடவும் ..
9)
அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைத்து மிதமான சூட்டில் பரிமாறவும்..
அவ்ளோ தான்..
தேங்காய்ப் பால் ரவா கஞ்சி..
ஃ
வாழ்க நலம்
***

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குசுவையான சமையல் குறிப்பு. நன்றி.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்...