நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 03, 2026

திருப்புகழ்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
பங்குனி
 வெள்ளிக்கிழமை


முருகனடியார் பகர்கின்ற இசைக் காணொளி வாயிலாகக் கிடைத்த திருப்புகழ்
**

கச்சித் திருப்புகழ்

தத்தத் தனதான தத்தத் ... தனதான
தத்தத் தனதான தத்தத் ... தனதானா

அற்றைக் கிரைதேடி அத்தத் ... திலுமாசை
     பற்றித் தவியாத பற்றைப் ... பெறுவேனோ..

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ... தொளைசீலா
     கற்றுற் றுணர்போதா கச்சிப் ... பெருமாளே..

அன்றைக்கு வேண்டிய உணவைத் தேடுவதோடு
 அந்தந்தப் பொருட்கள் மீதும் ஆசையினை வைத்துக் கொண்டு தவிக்கின்ற நான்
அதற்கு மேலான தன்மையினைப் பெறுதற்கு இயலுமோ?..

 வெற்றியே விளங்கும் கதிர் வேலினை உடையவனே,
 கிரெளஞ்சமலையைத் தொளைத்த பெருமானே,
 கற்று தியானித்து உணரத்தக்க
ஞானஸ்வரூபனே.
 கச்சிப் பதியில் அமர்ந்த பெருமாளே...
-: அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா முருகா
***

4 கருத்துகள்:

  1. முத்தான முத்துக்குமரா சிந்தை மகிழ வா வா வா

    பதிலளிநீக்கு
  2. பாடல் கண்டு கொண்டோம்.

    லீவில் நேற்றிலிருந்து முருகன் கோவில் வாசல் வீட்டில் இருக்கின்றோம். அவனருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.

    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு வருகையும் மேல் விவரங்களும் மகிழ்ச்சி...

      நன்றியம்மா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..