நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 01, 2020

மார்கழி தரிசனம் 16

தமிழமுதம்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.. (007) 
***

அனைவருக்கும் அன்பின் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 16


நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்போனே கொடிதோன்றும் தோரண
வாயில் காப்போனே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதேநீ
நேயநிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்!.. 
***

ஆழ்வார் அமுதம் 


திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமுங் கண்டேன் செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று.. (2282)
-: பேயாழ்வார் :-

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திரு வாஞ்சியம்
யமதர்மராஜன் வழிபட்ட திருத்தலம்

ஸ்ரீ வாஞ்சிநாதப் பெருமான் 

கையிலங்கு மறியேந்துவர் காந்தளம் மெல்விரல்
தையல் பாகமுடையார் அடையார் புரஞ்செற்றவர்
செய்ய மேனி கரியமிடற்றார் திருவாஞ்சியத்து
ஐயர் பாதமடையார்க்கு அடையாவரு நோய்களே..(2/7)
-: திருஞானசம்பந்தர் :-
***

திரு ஆதிரை நாளைப்
பத்தாம் நாளாகக் கொண்டு இன்றிலிருந்து 
ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை 



ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்... 1

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்... 2 
***

தேவி தரிசனம்


நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. (050) 
-: அபிராமிபட்டர் :- 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

21 கருத்துகள்:

  1. இனிய மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் துரை அண்ணன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் பசும்பொன் வருகைக்கு மகிழ்ச்சி..

      புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. படித்தேன், ரசித்தேன்.

    தரிசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கும் இனிய
      புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. அருமை ஐயா...

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கும் இனிய
      புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. அன்பு துரை திருவெம்பாவைப் பாடல்களை
    பதிவிடவில்லையே என்று கேட்க நினைத்தேன். புது வருடப் பரிசாய்க் கொடுத்து விட்டீர்கள்.

    ஈசனுக்கும் அன்னைக்கும் தெரியும் எப்பொழுது வரவேண்டும் என்று.
    உங்கக் குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள் துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      திருவாதிரையைக் கணக்கில் கொண்டு திருவெம்பாவை பாராயணம் நிகழும்... இன்று சிதம்பரத்தில் திருக்கொடியேற்றம் ஆகியுள்ளது...

      தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. தரிசனம் நன்று
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  7. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி! உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      தங்களுக்கும் இனிய
      புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்
    புத்தாண்டில் அருமையான தரிசனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..
      தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகளுடன் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் பணி நிலைமையில் மேன்மை அடையப் பிரார்த்தனைகள். அருமையான பதிவு. ஆரம்பத்தில் நம்ம ஆளு ஜம்முனு உட்கார்ந்திருக்கார். அம்மாவோடும், தம்பியோடும் இருப்பதும் அழகு! திருவெம்பாவைப் பாடல்களுக்கும் நன்றி. பத்து வருடங்கள் முன்னர் எழுதிய என்னுடைய திருவெம்பாவை விளக்கம் நண்பர் ஒருவரது முயற்சியால் oreindia மின்னிதழில் வெளி வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா..
      பதிவைப் பற்றிக் குறித்ததற்கு நன்றி..

      திருவெம்பாவையின் விளக்கவுரை வெளிவருவது குறித்து மகிழ்ச்சி...

      சென்று வாசிக்கிறேன்...

      அன்பின் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
      வாழ்க நலம்..

      நீக்கு
  10. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்  வாழ்த்துக்கள். வாழிய நலம். கோவில் தரிசனம் நன்று. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள் துரை செல்வராஜூ ஜி!

    இனிமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..