நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 21, 2013

அம்மன் தரிசனம் - 01

அன்னை புற்றுருவாக புன்னை வனத்தினுள் எழுந்த திருத்தலம்.

வேண்டி நின்ற மன்னனுக்காக  - தான் இருக்கும் இடத்தைத் தானே - ஒரு சிறுமியின் வடிவாக வந்து காட்டியருளிய திருத்தலம்.


அம்மையினால் பாதிக்கப்பட்டு பார்வையிழந்த  - இளவரசியின் விழிகள் மீண்டும் கிடைக்கப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் திருக்கரங்களால் - ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்யப் பெற்ற திருத்தலம்.

ஸ்ரீ பைரவஉபாசகரான மகான் பாடகச்சேரி சுவாமிகள் பலகாலம் தங்கி இருந்த திருத்தலம். 

அவர் திருக்கரங்களால்  நிறைவான அன்ன தானங்கள் வழங்கப்பட்ட திருத்தலம். நோயுற்ற மக்களுக்கு- ஸ்ரீபாடகச்சேரி மகான் செய்த நன்மைகளை நினைவு கூரும் வகையில் அவர் தம்  திருவடிவம் விளங்கும் திருத்தலம். 

 ஸ்ரீ முத்துமாரியம்மனுடன் - ஸ்ரீ விஷ்ணுதுர்கையும் ஸ்ரீ காளியம்மனும் விளங்கும் தலம்.


மூர்த்தி தலம் தீர்த்தம் - எனும் மூன்றினாலும் சிறப்புற்று விளங்கும் திருத்தலம்.

அம்மை நோய் கண்டவர்கள்  பெருமளவில் வந்து தங்கி பிரார்த்தனை செய்து குணமடையப் பெறும் திருத்தலம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 48 நாட்கள் - செய்யப்படும் தைலக்காப்பின் போது உக்ர ஸ்வரூபிணியாக விளங்கி  - அம்பாள் -  தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் திருத்தலம்.

கோடையில்- அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்துமுத்தாக  வியர்வைத் துளிகள் பூக்கும் திருத்தலம்.

ஆறடி உயரத்தில் எழில் தவழும் திருமுகத்துடன் - அம்பாள் அருள் பொழியும் திருத்தலம்.


சோழ வளநாட்டின் திருத்தலங்களுள் சிறப்பிடம் பெற்று விளங்கும் திருத் தலம். 

அந்தத் திருத்தலம் தான் - தஞ்சை  புன்னைநல்லூர்.

அங்கே - குடிகொண்டு விளங்குபவள்,

தாய் மகமாயி ஸ்ரீ முத்து மாரியம்மன்!..

வல்வினையின் வசப்பட்டு  - வாடி வந்தோர்க்கும்
தொல்வினையால்  துயருற்றுத் - தேடி வந்தோர்க்கும் 
அல்லலுற்று அவதியுற்று  - நாடி வந்தோர்க்கும்
உற்றதுணை ஏதுமின்றி  - ஓடி வந்தோர்க்கும் 

வற்றாது தான்சுரக்கும் கருணையின் ஊற்று!..
வழியென்று ஒளிகூட்டும் வெண்ணிலவின் கீற்று!.. 

அவள் -


குடி கெடுக்கும் பகை கெடுத்தாள் 
கூட வரும் பழி கெடுத்தாள்
வினை கெடுத்தாள் நோய் கெடுத்தாள் 
வழி மறிக்கும் தடை கெடுத்தாள்!..

கரு கொடுத்தாள்  உரு கொடுத்தாள்  
ஒளி கொடுத்தாள்  மொழி கொடுத்தாள் 
மணங்கொடுத்தாள் குணம் கொடுத்தாள் 
தனங்கொடுத்தாள் தவம் கொடுத்தாள்

கோடி கோடி நலம் கொடுத்தாள் 
குன்றாத வளங் கொடுத்தாள்
சொல் கொடுத்தாள் பொருள் கொடுத்தாள்  
பொன்றாத புகழ் கொடுத்தாள்

அருள் கொடுத்தாள்  பொருள் கொடுத்தாள்  
ஆயுளையும் தான் கொடுத்தாள்
நெல் கொடுத்தாள்  நீர் கொடுத்தாள்  
நீள்விசும்பில் இடம் கொடுத்தாள்!..

மீண்டும் நான் பிறவி கொண்டால் - 

மகிழ்ந்தெனக்கு மடி கொடுப்பாள் -   மார்மீது சேர்த்தெடுப்பாள்!..
''மகனே நீ வாழ்க!..'' என்று - வாஞ்சையுடன் வார்த்தெடுப்பாள்!..

தொடர்புடைய பதிவு :

6 கருத்துகள்:

  1. வரிகளும் சிறப்பு ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!... அம்மன் அருள் பெற்று எல்லாரும் வளமுடன் வாழவேண்டும்!..

      நீக்கு
  2. புன்னை நல்லூரின் புகழினை
    புவியெங்கும் பரவச் செய்யும்
    அருமையான பதிவு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி!... அம்மன் அருள் பெற்று எல்லாரும் வளமுடன் வாழவேண்டும்!..

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!.. பாடச் சொன்னாள்.. அன்னை .. பாடுகின்றேன்!...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..