நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
இரண்டாம் திங்கள்
புண்ணிய புரட்டாசியின் திங்கள் தோறும் உண்டதும் உவந்ததுமான நிவேதனங்களைப் பற்றிக் குறித்திட நினைத்து இறையருளால் கை கூடி வந்துள்ளது..
எல்லாருக்கும் தெரிந்தவை தான்...
அந்த வகையில்
மிளகுப் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி 300 gr
பாசி பருப்பு 150 gr
மிளகு 2 tbsp
இஞ்சி சிறு துண்டு
நெய் தேவையான அளவு
சீரகம் 1 tbsp
முந்திரிப் பருப்பு 15
பெருங்காயத்தூள் சிறிது
கறிவேப்பிலை இரண்டு இணுக்குகள்
செய்முறை:
இளஞ்சூட்டில் நெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து வைத்துக் கொள்ளவும்..
வசதியான பாத்திரம் ஒன்றில் பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து சற்றே குழையும்படி வேக வைத்துக் கொள்ளவும்...
தாளிப்பு கரண்டியில் தரமான நெய் விட்டு சீரகம், இடித்த மிளகு, பொடியாக நறுக்கப்பட்ட இஞ்சி, முந்திரிப் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து -
செய்து வைத்திருக்கும் பொங்கலுடன் சேர்த்து நன்றாகக் கலந்து கிளறி விடவும்..
தேவையெனில் பொங்கலில் மேலும் சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும்.
பாரம்பரிய மிளகுப் பொங்கல்..
ஓம் ஹரி ஓம்
**