நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி
புதன் கிழமை
இன்று
அன்பில்
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில் தரிசனம்..
காவிரி தீரத்தில்
பெருமாள் பள்ளி கொண்டு விளங்குகின்ற தலங்களில் அன்பில் திவ்ய தேசமும் ஒன்று..
திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட திருக்கோலம். பெருமாள் தாரக விமானத்தின் கீழ் கிழக்கு முகமாக சயனத் திருக் கோலம் கொண்டுள்ளார்..
மூலவர் ஸ்ரீ சுந்தரராஜப்பெருமாள்
தாயார் அழகிய வல்லி
உற்சவர் வடிவழகிய நம்பி
மண்டூக தீர்த்தம்
தல விருட்சம் தாழம்பூ
மண்டூக மகரிஷியின் சாபம் தீர்ந்த தலம்..
திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்..
மஹாளய பட்ச அமாவாசையன்று தரிசனம் செய்தோம்.
தஞ்சையிலிருந்து எங்கள் வழித்தடம் : தஞ்சை - திருக்காட்டுப்பள்ளி - அன்பில் ..
ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
**
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..