நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஆகஸ்ட் 08, 2019

இது எந்த வகை?..



இல்லறமல்லது நல்லறம் அன்று!..

ஔவையார் நமக்குக் கூறுகின்ற அறம் அது...


காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்ட இன்பம் கூட
அடுத்து அடுத்து வருகின்ற நாட்களில் கடுத்து விடுகின்றது..

விளைவு?..

மண வாழ்க்கையின் முறிவு...

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட
சூறைக்காற்றில் சிக்குண்ட சீந்தில் கொடியாக சிதைந்து போகின்றன...

கையும் காலும் கண்ணும் கருத்தும்
நன்றாக இருக்கும்போதே கணவனும் மனைவியும்
ஒருவருக்கொருவர் கசந்து போகின்றனர் - இன்றைய நாட்களில்...

கல்யாணம் ஆகி மனம் ஒத்த தம்பதிகளாக
ஐம்பது ஆண்டுகள்... அறுபது ஆண்டுகள் என்ற சிறப்புகள் எல்லாம்
நமது கலாச்சாரத்திலேயே மறைந்து போய் விட்டன...

இந்த நிலையில்
இன்றைய பதிவின் காணொளியைக் காணுங்கள்...

வழக்கம்போல வெள்ளிக்கிழமைக்கான பதிவினை
ஒழுங்கு செய்திருந்த நிலையில் -

நேற்று இரவு இந்தக் காணொளி
எனது மைத்துனர் மூலமாக WhatsApp ல்கிடைத்தது...

நள்ளிரவில் எழுந்து
இந்தக் காணொளியுடன் புதிய பதிவை ஒழுங்கு செய்து
இதோ.. தங்கள் முன்பாக வழங்கியிருக்கின்றேன்!...

இது என்ன வகையான அன்பு?..
இது என்ன வகையான அறம்?..


காலம் பகைத்தாலும்
கணவர் பணி செய்து
காதல் உறவாடும்
இந்தக் காரிகையைக்
கடவுள் காத்தருளட்டும்...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது..(045)
ஃஃஃ 

15 கருத்துகள்:

  1. காணொளி கண்டு மனம் கனத்து விட்டது ஜி.

    இந்தப்பெண்ணுக்கு எத்தனை நெஞ்சுரம் இருக்கவேண்டும் வாழ்க வளமுடன் இறையருளால்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. காணொளி - எத்தனை காதல் அந்தப் பெண்ணுக்கும் இளைஞனுக்கும்.

    கில்லர்ஜி சொல்வது போல நிறைய நெஞ்சுரம் வேண்டும். வாழ்க வளமுடன்.

    மனம் தொட்ட பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இது தான் அன்பு...
    இதுவே தான் அறம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. காணொளி கண்டு மனம் நெகிழ்ந்து விட்டது.
    அவர்கள் அன்பு வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் ஒத்து அவர்கள் வாழட்டும் பல்லாண்டு..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இல்லறம்... சிலருக்கு இல் அறம். இல்ல அறம். சிலருக்கு இல்லை அறம்!!

    வணக்கம். அப்டேட் ஆகவில்லை காலையில் எனத்தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. காணொளி கண்டு மகிழ்ந்தேன். கைகால்கள் நன்றாய் இருப்பவர்கள் கைவலி, கால்வலி என்று இருக்க, இந்நிலையிலும் எந்தக் குறையும் இல்லாமல், எந்தக் குறைவும் இல்லாமல் வாழும் இவர்கள் வாழ்க பல்லாண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்களது வாழ்த்துரை போல் வாழட்டும் பல்லாண்டு.
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நீண்ட நெடுங்காலம் இதே அன்புடனும், மகிழ்வுடனும் வாழட்டும். கண்ணீர் வருகிறது பார்க்கும்போதே! இதை அவசரப்பட்டுக்கொண்டு விவாகரத்துச் செய்யும் பெண்களும், ஆண்களும் பார்த்தால் ஒருவேளை மனம் மாறலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியக்கா..
      அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  8. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..