நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019

முயற்சி எனும் திருவினை..

இன்றைய பதிவில்
WhatsApp வழியாக வந்த இரண்டு காணொளிகள்....

இப்போது தான் முதன்முறையாக இவற்றைப் பார்க்கிறேன்...

என் மகள் மருமகன், மகன் இவர்களுடன் ஒரு குழுவும்
மைத்துனர் - அவர்தம் குடும்பத்தினர் தம்முடன் ஒரு குழுவும்..

அவ்வளவுதான்!..

முதல் காணொளி நகைச்சுவை...

போ..போ!... போய்க்கிட்டே இரு!...
இனியொரு தரம் உன்னையப் பார்த்தேன்!.. அவ்வளவுதான்!...

நீ.. என்னய்யா?... உனக்குத் தனியா ஒரு தரம் சொல்லணுமா?...
இளவரசிகள் வர்ற நேரம்... போ.. போ.. பின்னாலே போ!...

ம்.. நீங்க வாங்கம்மா கண்ணுங்களா!...


இரண்டாவது காணொளி நம்மைப் பரபரப்புக்கு உள்ளாக்குகிறது...

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்!.. 

அப்படி... ன்னு
பாட்டுப் பாடிக்கிட்டு வந்த குட்டியப்பன் ஒருவன்
தண்ணீர்த் தொட்டிக்குள் மல்லாக்க விழுந்து வைக்கிறான்...

தாயோ குட்டியைக் காப்பாற்ற வகையறியாமல் பதற்றமாகிறது...
அத்துடன் மற்ற யானைகளையும் பரபரப்புக்குள்ளாக்குகிறது..

புத்திசாலியான ஒன்று - தாயை
போ.. அந்தப் பக்கம் !.. - என்று விரட்டி விட -
மற்றவை குட்டியப்பனைக் காப்பாற்றுவதற்கு முனைகின்றன...

போங்கடா தடியன்களா!.. 
உங்களால் குட்டியைக் காப்பாற்ற முடியாது..
எப்படியும் எங்களுக்குத்தான்!..
- என்று,மற்றொரு பக்கம்ஆவலுடன் பந்திக்குக் காத்திருக்கின்றன - சோம்பேறிச் சிங்கங்கள்..

யானைகள் ஒரு கட்டத்தில் அலுத்துப் போய்
தங்கள் முயற்சியைக் கை விட நினைக்கும்போது தான்

திருப்பம் ஒன்று நிகழ்கின்றது...

அது என்னவென கண்டு மகிழுங்கள்..


முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்..(616)

வாழ்க நலம்
ஃஃஃ

17 கருத்துகள்:

  1. இரண்டாவது காணொளி மனதை நெகிழ்ச்சியாக்கி விட்டது ஜி

    தாய்ப்பாசம் எல்லா உயிர்களுக்கும் உயர்வே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கு நல்வரவு....

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. குட்மார்னிங். இரண்டுமே ஏற்கெனவே கண்டு மகிழ்ந்த காணொளிகள். இருப்பினும் யானையார்சம்பந்தப்பட்டது என்பதால் மறுபடி பார்த்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      கல்யாண கோலாகலம் எல்லாம் இறையருளால் நல்லபடியாக நடந்து இருக்கும்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. யானைகள் சம்பந்தப்பட்ட காணொளிகள் நிறைய யூடியூபில் தேடித்தேடிப் பார்த்திருக்கிறேன். இது போன்ற அவர்களின் பாதையில் குறுக்கிடும் பயணிகளை விரட்டும் யானைகளும் உண்டு. யாசிப்பது போல வழியில் நின்று வாங்கித் தின்கும் யானைகளும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      வழியில் நின்று கொண்டு சாப்பிடக் கேட்கும் காணொளியும் என்னிடத்தில் உள்ளது...

      அதைப் பகிர்வதற்கு மனமில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. அப்போ உங்களிடம் யானையார் காரை ஆசனமாக்கி அமர முயற்சிக்கும் காணொளியும் இருக்கும் என்று சொல்லுங்கள்!!

      நீக்கு
    3. ஆமாம்...
      காரை அப்பளமாக நொறுக்கும் காணொளி ..

      பார்த்திருக்கிறேன்... ஆனால் காணொளி எங்கே என்று தேடிக் கண்டு பிடிக்க வேணும்...

      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  4. மனதை நெகிழச் செய்யும் காணொலி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. இரண்டு காணொளிகளையும் பார்த்து உள்ளேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. முதலாவது நிறையப் பார்த்திருக்கேன். இரண்டாவது முற்றிலும் புதிது. அருமையா இருக்கு. நிறையக் காணொளிகள் ஆனை பற்றிப்பார்த்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அக்கா தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கடைசி வரை விடாது போராடி வெற்றி கண்ட யானை சிறப்பான எடுத்துக் காட்டு...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. முயற்சி செய்து குட்டியை காப்பாற்றியது மனதை நெகிழ வைத்த காணொளி.
    இரண்டு காணொளியும் கண்டேன் இர்ண்டாவது மனதை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  8. இரண்டு காணொளிகளும் முன்னரே பார்த்திருக்கிறேன். இரண்டாவது மனதைத் தொட்ட காணொளி. மீண்டும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..