நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 22, 2017

மார்கழிக் கோலம் 07

தமிழமுதம்

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு..(020)
***
அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த
திருப்பாவை
திருப்பாடல் 07

ஸ்ரீ கள்ளழகர் - அழகர்மலை
கீசுகீசு என்றெங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாசநறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவங் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்!..  

தித்திக்கும் திருப்பாசுரம்

ஸ்ரீமந் நாராயணன் - மேல்கோட்டை
குன்றனைய குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு..(2122)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம்
***

நல்லதோர் வீணை


சிவ தரிசனம்

திருத்தலம்
திருஐயாறு


இறைவன்
ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர்
அருள்மிகு ஐயாறப்பர்..

அம்பிகை
ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி 



தல விருட்சம் - வில்வம்
தீர்த்தம் - காவிரி 
***

ஸ்ரீ திருஞானசம்பந்தர் அருளிய
திருக்கடைக் காப்பு


கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை
பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி
செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருஐயாறே!..(1/130) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் 07  


அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
என்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. இனிய வெள்ளி...வியாழன் உறங்கிற்று வெள்ளி விடிந்தது!!!வணக்கம் சகோ!

    அருமையான 7 ஆம் நாள் மார்கழி...கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் இப்போதெல்லாம் பேசும் பேச்சரவம் கேட்பதில்லையே!! அப்படி ஒரு பறவை அக்காலத்தில் இருந்தது போலும்!

    நல்ல தரிசனம்!!இனிய காலைப்பொழுதில்....

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆண்டாள் திருப்பாவை தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா!

    தேனினிய பாசுரங்கள்! திவ்யத் திருக்காட்சி!
    வானிறங்கி வந்தவர மாம்!

    உள்ளமும் உணர்வும் அருள்மழையில் நனைந்தது!
    பகிர்வினுக்கு மிக்க நன்றி ஐயா!

    வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  4. இரண்டாவது படம் ரொம்பவே அழகு.

    நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..