நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 24, 2017

முருக தரிசனம் 2

தஞ்சை மாநகருக்குள் இலங்கும் முருகன் திருக்கோயில்களைப் பற்றி முந்தைய பதிவில் - குறித்திருந்தேன்..
அவற்றுள் -
மேல அலங்கம் மற்றும் குறிச்சித் தெரு கோயில்களை
நேற்றைய பதிவினில் கண்டோம்..

இன்றைய பதிவிலும் இரண்டு திருக்கோயில்கள்...

ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஸ்வாமி திருக்கோயில்..
அரிசிக்காரத் தெரு - மகர்நோன்புச் சாவடி..









இத் திருக்கோயில் மேற்கு நோக்கியது..
முருகன் தண்டாயுதம் தாங்கித் திகழ்கின்றான்..

இத்திருக்கோயிலில்
முருகனுக்கு யானை வாகனம் பொலிகின்றது..

மற்ற கோயில்களைப் போலவே இங்கும்
திருச்சுற்றில் சிவ சந்நிதிகள் திகழ்கின்றன..

ஸ்ரீ பாலதண்டாயுத ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில்..
ஆட்டு மந்தைத் தெரு - கீழவாசல்..




இத் திருக்கோயிலும் மேற்கு நோக்கி விளங்குகின்றது..
முருகன் தண்டாயுதம் தாங்கித் திகழ்கின்றான்..


பங்குனி உத்திரம்
பெருஞ்சிறப்புடன் நிகழும்..
கந்தசஷ்டிக்கு அடுத்தநாள்
திருக்கல்யாண வைபவம்,,

மற்ற கோயில்களைப் போலவே இங்கும்
திருச்சுற்றில் சிவ சந்நிதிகள் திகழ்கின்றன..

தஞ்சை கீழவாசல் மார்க்கெட்டுக்கு அடுத்துள்ளது
இத்திருக்கோயில்..

பழைய பேருந்து நிலயத்திலிருந்து
நடந்தே வந்து விடலாம்..

தஞ்சாவூர் திரு. ஞானசேகரன் அவர்கள் - ..
Fb வழியாக வழங்கிய படங்கள்
இன்றைய பதிவினை அலங்கரிக்கின்றன..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி..
***
கீழுள்ள படங்கள்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
வழங்கியவை..

அவர் தமக்கும் மனமார்ந்த நன்றி..

திருப்பரங்குன்றம்
திருஅண்ணாமலை
சிக்கல் சிங்காரவேலன் 
ஸ்வாமிநாத ஸ்வாமி - சுவாமிமலை
வயலூர்
வைத்தீஸ்வரன்கோயில்
நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த
கோளென் செயும் கொடுங் கூற்றுஎன் செயும் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே..(38)
-: கந்தர் அலங்காரம் :-

முருகா சரணம்.. முதல்வா சரணம்..
முத்துக் குமரா சரணம்.. சரணம்!.. 
* * * 

11 கருத்துகள்:

  1. கும்பகோணத்தில் கோவில்களுக்குப் பஞ்சமே இல்லை அவை பற்றி பதிவெழுதும்போது அள்ள அள்ளக் குறையாத செய்திகள் வரும்

    பதிலளிநீக்கு
  2. நல்தரிசனம்...

    ஆறுபடை உனது
    ஏறுமயில் அழகு
    தேடாத மனம் என்ன மனமோ..

    ஆறுபடை உனது
    ஏறுமயில் அழகு
    தேடாத மனம் என்ன மனமோ

    பதிலளிநீக்கு
  3. கண்ணார தரிசனம். வைத்தீஸ்வரன் கோவிலில் மீசையுடனா இருக்கிறார் முருகன்?

    பதிலளிநீக்கு
  4. நல்ல தரிசனம் கண்டேன். 'நாளென் செய்யும்'-அருமை. அவன் முன்னே வந்து தோன்றாவிட்டாலும் நம் எண்ணத்தில் ஒளிர்ந்திருந்தாலே போதுமே... 'நாள்தான் என்ன செய்யும் கோள்தான் என்ன செய்யும்'

    பதிலளிநீக்கு
  5. அன்பின் ஜி
    முருக தரிசனம் இரண்டாம் நாளும் கண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம், மீசையுடன் இருப்பது முருகன் அல்ல.
    மீசையுடன் இருக்கும் வீரபாகு மேல் இருப்பவர் தான் முருகர்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான தரிசனம் சஷ்டி விழாவில்.
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. படங்களுடன் பகிர்வு அருமை...
    எங்கெங்கு திரும்பினாலும் வலையுலகில் முருகன் தரிசனமாகவே இருக்கிறது...
    சஷ்டி சிறப்பாக பயணிக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. படங்களுடன் பதிவு அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  10. முருக தரிசனம் 2 வதும் அருமை. அறியாத கோயில்கள் பல...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..