நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 20, 2017

இயற்கைச் சங்கிலி

சில தினங்களுக்கு முன் எனது மருமகன் -
தனக்கு வந்த பதிவு ஒன்றினை எனக்கு Fbல் அனுப்பி வைத்திருந்தார்...

அந்தப் பதிவினை வழங்கிய திரு. விஜய் பாஸ்கர் விஜய் அவர்களுக்கு நன்றி..

திரு. விஜய் பாஸ்கர் விஜய் அவர்கள் வழங்கியிருந்த செய்திகள்
சற்றே வடிவமைக்கப்பட்டு இன்றைய பதிவில்!..

ஓநாய்களின் வரவால் உயிர்த்தெழுந்த வனம்!..


வேட்டைக்காரர்களின் கைவரிசையால் -
1926 ஆம் ஆண்டிலிருந்து ஓநாய்கள் இல்லாமல் போய்விட்டன.
அதன் பிறகு கனடாவில் இருந்து பதினான்கு ஓநாய்களைப் பிடித்து வந்து
1995 ஆம் ஆண்டு யெல்லோ ஸ்டோன் பார்க்கில் விடுகிறார்கள்.
ஓநாய்கள் வந்த பின்பு அந்தக் காட்டில் பற்பல மாறுதல்கள் ஏற்பட்டன..

என்னென்ன அவையெல்லாம்?..

தொடர்ந்து படியுங்கள்!..
1.
70 வருடங்களாக ஓநாய்கள் இல்லாத காரணத்தால் அங்கு மான்கள் பெருத்து விட்டன. மனிதர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் மான்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஆனால் ஓநாய்களைப் பிடித்து வந்து விட்டதால் அவற்றின் பசிக்கு இரையாகின.. மான் கூட்டம் கட்டுக்குள் வந்தது...
2.
மான்கள் குறைந்தபோது அங்குள்ள மரங்கள் நன்கு வளர்ந்தன. அதுவரைக்கும் மரம் வளரும் போதே மான்கள் அவைகளை மேய்ந்து விடும். ஒநாய்களை விட்டதும் ஆறு வருடங்களுக்குள்ளாக அங்கிருந்த மரங்கள் நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்து வளர்ந்தன..
3.
ஓநாய்களின் இருப்பிடங்களுக்கு (பள்ளத்தாக்கு) மான்கள் வருவதே இல்லை. ஆகையால் அங்குள்ள செடி கொடிகள் இன்னும் செழித்து வளர்ந்தன.
4.
மரங்கள் அதிகமாக வளர்ந்ததும் அங்கே பற்பல பறவைகள் வந்தன. பாடும் பறவைகள் , கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகள் - என, அனைத்தும் மரங்களைத் தேடி வந்தன..
5.
நீர் நாய்கள் அங்கே பாயும் ஆற்றங்கரைக்கு வந்தன.. நீர் நாய்கள் ஆற்றங்கரை யோரம் சிறு சிறு சுரங்கப் பாதைகள், குடில், குகைகளை அமைத்தன.. கரை ஓரத்தில் சில இடங்களில் ஆற்றின் வேகம் குறைந்து குளங்கள் உண்டாகின.. அதனால் அங்கே வாத்துகளும் பெரிய எலிகளும் வந்தன..
6.
மீன்கள், ஊர்வன அனைத்தும் பெருகின..
7.
Coyotes எனப்படும் சிறிய வகை ஓநாய்களை, இந்த பெரிய வகை ஓநாய்கள் கொல்வதால் சிறிய ஓநாய்கள் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கே சிறிய ஓநாய்கள் குறைந்ததால் முயலும் எலியும் மறுபடியும் பெருக ஆரம்பிக்கின்றன.
8.
முயலும், எலியும் பெருகுவதால் அங்கே நிறைய கழுகுகளும், குள்ள நரிகளும் அவைகளை வேட்டையாட வந்தன...
9.
ஓநாய் உண்ட மிச்சத்தை உண்பதற்கு வல்லூறுகளும், காக்கைகளும் வந்தன.
10.
காட்டில் மான்களின் மேய்ச்சல் குறைவால் அங்கே நிறைய பெர்ரி செடிகள் வளர்கின்றன.. பெர்ரி பழங்களை பறித்து உண்பதற்கு நிறைய கரடிகள் வருகின்றன.. மேலும் கரடிகள் ஓநாய்களோடு சேர்ந்து மான்களை வேட்டையாடுவதால் செடிகள் மரங்கள் காப்பாற்றப்படுகின்றன...
11.
இவை அனைத்தையும் விட இந்த ஓநாய்கள் இருப்பதால் ஏற்பட்ட மிக நல்ல விளைவு என்னவென்றால் அங்கே ஓடும் ஆற்றின் வடிவம் மாறியது தான்.
12.
அதுவரை ஆற்றின் கரையின் மரங்கள் இல்லாத காரணத்தினால், ஆறு விரிந்து கொண்டே போனது... அதிக மண் அரிப்பு ஏற்பட்டது... ஆறு ஆழத்தை இழந்து தட்டையாகிக் கொண்டே போனது... ஆற்றின் பாதையில் குழப்பம் ஏற்பட்டது...
13.
ஆனால், ஓநாய்களின் வரவால், மரங்கள் இருகரைகளிலும் அடர்ந்து வளர்ந்தன.. ஆறும் தனது பழைய வடிவத்தைப் பெற்றது... இயற்கையில் அனைத்து உயிர்களும் ஒன்றை ஒன்று ஒட்டி வாழ்கின்றன என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இது...
14.
இதை ஆங்கிலத்தில் Tropical Cascade என்கிறார்கள்...
15.
இதுதான் இயற்கை வகுத்துள்ள உணவுச் சங்கிலி...
பொதுவாக உணவுச் சங்கிலி என்பது கீழிருந்து மேல்..
இந்த Tropical Cascade மேலிருந்து கீழ் என்று வருகிறது... 
எப்படி உணவுக்காக கீழிருந்து மேல் என்று வருகிறதோ,
அதுபோல மற்ற விஷயங்களில் மேலிருந்து கீழும் உயிரினங்கள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன என்பதே இதன் அம்சம்...
***
இனி - நமது கை வண்ணம்..
படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து..
Yellow Stone National Park


1872 மார்ச் முதல் நாளன்று அறிவிக்கப்பட்ட - 
உலகின் முதல் தேசிய பூங்கா..
இந்தப் பூங்கா அமெரிக்காவின் Wyoming, Montana and Idaho 
- எனும் மூன்று மாநிலங்களில் பரந்து விரிந்திருப்பது..





Geyser in Yellow Stone Park


Yellow Stone பூங்காவைப் பற்றித் தெரிந்து கொள்ள இணைப்பு கீழே!...


மேலுள்ள காணொளி simplecapacity.com 
- எனும் தளத்திலிருந்து பெறப்பட்டது..
***

இயற்கையின் இணைப்புகள் ஒவ்வொன்றிலும் 
இயற்கையாக நிகழும் அனைத்தும் 
இயற்கை வாழ்வதற்காகவே!..
இந்த உலகின் இயற்கைச் சங்கிலிக்குள் 
நாமும் ஒரு சிறு இணைப்பு தான்!..

இயற்கை வாழட்டும்..
இயற்கையாகவே வாழட்டும்!..  
***

16 கருத்துகள்:


  1. இயற்கை வாழட்டும் ...

    இயற்கையாகவே வாழட்டும் ....


    சிறப்பான பகிர்வு ...அருமையான வரிகள் ஐயா ..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி திரு. விஜய் பாஸ்கர் விஜய் அவர்களின் அற்புதமான தொகுப்போடு தங்களது விடயத்தையும் அழகிய புகைப்படங்களோடு தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. இயற்கை வாழட்டும்
    இயற்கையாகவே வாழட்டும்.
    பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இயற்கை வாழட்டும் ஐயா
    இயற்கையை மனிதர்கள்தான் வாழ விட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்
      மனிதர்கள் தான் அதைச் செய்வதில்லையே..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. மிக அருமையான பகிர்வு ஐயா ..ஒவ்வொரு ஜீவராசியும் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருப்பது இயற்கையின் நியதி ..மனிதன் குள்ளநரித்தனத்தால் பல அழிவுகள் நேரிடுகின்றன .இயன்ற வரை இயற்கையை மனிதன் சீண்டாதிருத்தல் நலம் உலகம் செழிக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சரியாகச் சொன்னீர்கள்..
      இயற்கையை மனிதன் சீண்டாது இருத்தலே நல்லது

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அடுத்தமுறை வயோமிங் செல்லும்போது பார்க்கவேண்டும் இந்த யெல்லோஸ்டோன் பூங்காவை. உங்கள் கட்டுரை ஆர்வத்தைப் பெருக்கிவிட்டது.
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அவசியம் சென்று பார்த்துவிட்டு இனிய பதிவு ஒன்றினை வழங்குங்கள்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அன்புடையீர்
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. இதுதான் இயற்கை நியதி. இவ்விஉலகில் படைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு காரணம் உண்டு. ஆனால் 6 அறிவு என்று சொல்லி நாம் பல அழிவுகளை ஏற்படுத்துகிறோம். இயற்கை அதன் நியதியில் இருந்தால் எல்லாமே நன்றாக இயங்கும். மனிதன் இயற்கையோடு ஒத்து வாழ்ந்தால் நல்லது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      ஆறறிவு என்று சொல்லிக் கொண்டு அழிவைத் தான் விதைத்தோம்..
      விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஒவ்வொரு உயிரினமும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நிச்சயமாக ஒன்றையொன்று சார்ந்து தான் இருக்கின்றன..
      துஷ்டர்கள் இதனை உணர்ந்தார்களில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..