நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 21, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
வெள்ளிக்கிழமை


 அப்பர் ஸ்வாமிகள்
திருமறைக்காட்டில்அடைத்துக் கிடந்த
திருக்கோயிற் கதவங்கள் திறந்து கொள்ளப் பாடியருளிய திருப்பதிகத்தின் முதல் பாடல்

பண்ணின் நேர்மொழியாள் உமை பங்கரோ
மண்ணினார் வலஞ் செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் 
செய்ம்மினே.. 5/10/1

பண் போன்ற மொழி உடையவளாகிய உமாதேவியை ஒருபங்கிற் கொண்டு மண்ணுலகத்தவர் வலம் செய்து வணங்குகின்ற திருமறைக்காட்டில் உறையும் பெருமானே.. 

உமது திருக்கோயிலின் கதவுகள் வேதங்களால் அடைக்கப் பெற்றிருக்கின்றன..

அடியேன் எனது கண்களால் உமது திருக்கோலத்தினைக் கண்டு மகிழுமாறு,  இக்கதவுகளைத் திண்ணமாகத் திறந்து அருள் செய்வீராக....

ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..