நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 17, 2026

சப்த ஸ்தானம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

இன்று
வைகாசி
 ஞாயிற்றுக்கிழமை


இரு வாரங்களுக்கு முன்பு திரு ஐயாறு ஏழூர் பல்லக்கு விழா தொடர்பான பதிவில் ஏனைய தலங்களைப் பற்றி ஏதும் சொல்லவில்லை.. 

மனதிற்கு குறையாக இருந்தது...

அதற்கென இப்பதிவு... படங்கள் சென்ற ஆண்டில் எடுக்கப்பட்டவை...


திரு ஐயாற்றில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றதும்

சித்ரா பௌர்ணமிக்கு அடுத்த நாள் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி எழுந்தருளியுள்ள
கண்ணாடிப் பல்லக்கும்

நந்தீசன் சுயசாம்பிகை எழுந்தருளியுள்ள
வெட்டி வேர் பல்லக்கும் திருக்கோயிலில் இருந்து அதிகாலை ஆறு மணிக்குப் புறப்பட்டு நகர் வலம் வந்த பின் திருப்பழனம் செல்கின்றன...



அங்கே
ஆபத்சகாயேஸ்வரர்
பெரியநாயகி அம்பாள்  
எதிர்கொள்வர்.. வரவேற்பிற்குப் பிறகு மூன்று பல்லக்குகளும்  அங்கிருந்து காவிரி குடமுருட்டி  ஆறுகளைக் கடந்து திருச்சோற்றுத்துறைக்கு செல்கின்றன..

அங்கே
ஓதவனேசர் அன்னபூர்ணி எதிர் கொண்டு வரவேற்க நான்கு பல்லக்குகளும்  திரு வேதிகுடிக்குச் செல்லும்..

அங்கே
வேதபுரீஸ்வரர் மங்கையர்க்கரசி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஐந்து பல்லக்குகளும் அங்கிருந்து
 திருக்கண்டியூருக்கு வருகின்றன

இங்கே
வீரட்டானேஸ்வரர்
மங்களநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஆறு பல்லக்குகளும்  திருப்பூந்துருத்திக்கு வருகின்றன

இங்கு
புஷ்பவனேஸ்வரர்
சௌந்தரநாயகி அம்பாள் எதிர் கொண்டு வரவேற்க ஏழு பல்லக்குகளும்  அங்கிருந்து
திருநெய்த்தானம் எனப்படும் தில்லைஸ்தானத்திற்கு செல்கின்றன..

தில்லைஸ்தானத்தில்
நெய்யாடியப்பர் பாலாம்பிகை எதிர் கொண்டு வரவேற்க எட்டு பல்லக்குகளும்  குடமுருட்டி, காவிரி ஆறு களைக் கடந்து திரு ஐயாற்றுக்கு வருகின்றன..

திரு ஐயாற்றில் கோலாகல கொண்டாட்டம்...  பதுமை மாலையிட்ட பின் மகா ஆரத்திக்குப் பின் பல்லக்குகள் அந்தந்த கோயில்களுக்குத் திரும்புகின்றன...

திரு நெய்த்தானம் திரு ஐயாறு திருப்பழனம் மூன்று தலங்களும் காவிரியின்  வடகரை.. ஏனைய நான்கும் காவிரியின்  தென்கரைத் தலங்கள்...


ஒவ்வொரு ஊரிலும் வரவேற்பு நிகழ்வுக்கும் பல்லக்குகளை  ஏற்றி இறக்குவதற்கும் நேரம் ஆனாலும் ஈசன் அருளால்
இரண்டு நாட்களில்  ஏழு ஊர்களைச் சுற்றி விட்டு ( ஏறத்தாழ 21 கிமீ)
சப்த ஸ்தான விழா நிறைவிற்கு வருகின்றது..

ஓம் நம சிவாய
***

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..