நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 27, 2024

ஸ்ரீராம ராம..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 13
சனிக்கிழமை


என் நாதன் தேவிக்கு  அன்று இன்பப்பூ ஈயாதாள்
தன் நாதன் காணவே  தண்பூ மரத்தினை
வன் நாதப் புள்ளால்  வலியப் பறித்திட்ட
என் நாதன் வன்மையைப் பாடிப் பற
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.. 307

என் வில் வலி கண்டு போ என்று எதிர்வந்தான்
தன் வில்லினோடும்  தவத்தை எதிர்வாங்கி
முன் வில் வலித்து  முதுபெண் உயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற
தாசரதி தன்மையைப் பாடிப் பற... 308

உருப்பிணி நங்கையைத்  தேர் ஏற்றிக் கொண்டு
விருப்புற்று அங்கு ஏக  விரைந்து எதிர் வந்து
செருக்கு உற்றான் வீரம் சிதையத் தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற
தேவகி சிங்கத்தைப் பாடிப் பற.. 309


மாற்றுத்தாய் சென்று  வனம்போகே என்றிட
ஈற்றுத்தாய் பின்தொடர்ந்து  எம்பிரான் என்று அழ
கூற்றுத் தாய் சொல்லக்  கொடிய வனம் போன
சீற்றம் இலாதானைப் பாடிப் பற
சீதை மணாளனைப் பாடிப் பற.. 310


பஞ்சவர் தூதனாய்ப்  பாரதம் கைசெய்து
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு
அஞ்சப் பணத்தின்மேல்  பாய்ந்திட்டு அருள்செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப் பற
அசோதைதன் சிங்கத்தைப் பாடிப் பற..311


முடி ஒன்றி  மூவுலகங்களும் ஆண்டு  உன்
அடியேற்கு அருள் என்று  அவன்பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற.. 312

காளியன் பொய்கை  கலங்கப் பாய்ந்திட்டவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு  அருள்செய்த வித்தகன்
தோள் வலி வீரமே பாடிப் பற
தூ மணிவண்ணனைப் பாடிப் பற..313


தார்க்கு இளந்தம்பிக்கு  அரசு ஈந்து தண்டகம்
நூற்றவள்  சொற்கொண்டு போகி  நுடங்கு இடைச்
சூர்ப்பணகாவைச்  செவியொடு மூக்கு அவள்
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.. 314

மாயச் சகடம் உதைத்து  மருது இறுத்து
ஆயர்களோடு போய்  ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி  வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.. 315


காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி  ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆராவமுதனைப் பாடிப் பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.. 316


நந்தன் மதலையைக்  காகுத்தனை நவின்று 
உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென்புதுவை  விட்ணு சித்தன்சொல்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு அல்லல் இல்லையே.. 317
-: பெரியாழ்வார் :-

நன்றி
-: நாலாயிரத் திவ்ய ப்ரபந்தம் :-

ஸ்ரீ ராம ராம
ஜெய ராம ராம
ஸ்ரீ கிருஷ்ண க்ருஷ்ண
ஜெய க்ருஷ்ண க்ருஷ்ண
***

6 கருத்துகள்:

  1. ஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்... ஸ்ரீராமஜெயம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல ஸ்ரீராம தரிசனங்கள். பாடல்கள் அ அருமை. ஸ்ரீராமரும், ஸ்ரீ கிருஷ்ணருமாக நம்மை காக்க வந்த ஸ்ரீமன்நாராயணனை போற்றி அவர் அடிபற்றி தொழுவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. ஜெய் ஸ்ரீராம். நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  4. பிரபந்த பாடலை பாடி வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  5. ராம்..ராம் . பாடல் பாடி வணங்கினோம்.
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..