நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை
பனம்பழம்..
நுங்கு பனம்பழத்தின் மற்றொரு பெயர்.
இயற்கையின் அருகொடைகளுள் ஒன்று..
தேவாரத்தில் பனம்பழம் என்றே பயின்று வருகின்றது..
நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது...
வெயிலால் ஏற்படும் வேர்க்குரு, கொப்புளங்கள் போன்ற தோல் நோய்களுக்கு நுங்கு மிகச்சிறந்த நிவாரணம்...
நுங்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
நுங்கின் துவர்ப்பான தோலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் B மற்றும் வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, எனவே தோலுடன் சேர்த்து சாப்பிடுவது தான் நல்லது.
பதநீரைப் போலவே எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...
ஒரு பழம் என்பது மூன்று பழங்களின் கூட்டமைவு.. ஒரு பூத்திரள் கனி வகையைச் சேர்ந்தது..
பனம்பழம் முற்றி இறுகியதும் அதனுள்ளிருந்து புதிய கன்று முளை வருகின்றது..
புதிய கன்று பனங்கிழங்கு எனப்படுகின்றது..
பதநீர், நுங்கினைப் போலவே பனங்கிழங்கும் எண்ணற்ற நலன்களைத் தன்னகத்தே கொண்டது...
இந்த வருடம் திருச்செந்தூர் திருநெல்வேலி ரயில் நிலையங்களில் பனங்கிழங்கு மாவு விற்கக் கண்டோம்...
நெல்லை சந்திப்பில் இருந்த பனைப் பொருள் கூட்டுறவு சங்கத்தின் விற்பனை நிலையத்தில் ஒன்று மட்டும் வாங்கினோம்.. நன்றாகவே இருக்கின்றது..
திருப்பனந்தாள் திருப்பனையூர்
மேலப்பெரும்பள்ளம்
இன்னும் சில, சிவ ஆலயங்களின் தல விருட்சம் - பனை..
இங்கே சிறை காத்த ஐயனார் கோயிலில் பனையடி வீரனார்...
மதுரைக்குச் செல்லும் வழியில் பொற்பனையான் சாமி
தெற்கே பனையடி மாடசாமி., பனையடி கருப்பசாமி என்றெல்லாம்
மக்களின் காவல் தெய்வங்கள்...
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சிறப்பான தகவல்கள். நுங்குக்குள் இருக்கும் நீர் மிகச்சிறிதளவே இருப்பதும், பெரும்பாலும் என் போன்றவகர்களுக்கு குடிக்கக் கிடைக்காததும் வருத்தம். ஏனென்றால் பனம்பழம் திறந்து அதில் விரல்களால் துளையிட்டு அப்படியே வாயில் கவிழ்து கொள்ளும் கலை கைவராதவன் நான்!
பதிலளிநீக்குவிரலால் நோண்டித் தின்ற காலங்கள் இனி வராது...
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
இளநீரைவிட சற்றே சுவை குறைந்த நீர் நுங்கிளநீர்.
பதிலளிநீக்குஆனாலும் ஜில்!
இளநீர் ச்மயத்தில் உப்புச் சுவையுடன் இருக்கும்..
நீக்குநுங்கின் சுவையே தனி..
பலசமயம் தோலுடனே சாப்பிட்டாலும் சுஐலசாம்யம் தோல் நீக்கி பளபளப்பான நுங்கை சுவைப்பது உண்டு. அதுவும் சுவையற்றது.
பதிலளிநீக்குநுங்கின் துவர்ப்புச் சுவையே சிறப்பு
நீக்குஆனாலும் இறைவன் நமக்களித்த பெரும் கொடைகளில் தன்னை இளநீர், நுங்கு எல்லாம் அற்புதங்கள்.
பதிலளிநீக்குஉண்மை தான்
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நுங்கு எனக்கு மிக மிகப் பிடித்தமானது. இப்போ சீசன் வர ஆரம்பித்துவிட்டது ஆனால் ஒரு காய் (3 நுங்கு) 50 ரூபாய்க்கும் மேல். பதநீர் எனக்குப் பிடிப்பதில்லை, சுண்ணாம்பு வாசனை வருவதால்
பதிலளிநீக்குதிவ்ய தேச தரிசனம் நல்லபடியாக நடந்ததா...
நீக்குதங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நெல்லை அவர்களுக்கு நன்றி
நுங்கு படம் அருமை.
பதிலளிநீக்குநுங்கு கடைத்தெரு பக்கம் போனால் தான் கிடைக்கும்.
நுங்கு வெயிலுக்கு உகந்தது.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
சாப்பிட்டுள்ளனர். அம்மம்மா சீவித்தந்து நிறையச் சாப்பிட்டுள்ளோம்.
பதிலளிநீக்குஇப்போது கிடைப்பதில்லை.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி