நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 15
திங்கட்கிழமை
அன்பின் ஸ்ரீராம் அவர்களது விருப்பத்திற்காக பதநீர் நுங்கு பற்றிய பதிவுகள்..
பதநீர் என்பது பனையின் பூம்பாளை நுனியை பதமாக சீவி விட்டால் அதிலிருந்து வடிகின்ற இனிப்புச் சுவையுடைய நீராகும்..
மாலைப் பொழுதில் பூம்பாளையை சீவித் தட்டி விட்டு மெலிதாக சுண்ணாம்பு தடவப்பட்ட கலயத்தைக் கட்டி விட்டு
இரவு நேரத்தில்
கலயத்தில் சேகரமாகின்ற நீரை விடியற்காலையில் வடித்தெடுத்து சூரிய உதயத்திற்கு முன்பாக அருந்த வேண்டும்...
இது தான் பதநீர்..
நெற்றி மட்டத்துக்கு மேல் சூரியன் எழுந்த பிறகு பதநீர் குடிப்பதற்கு சிவனே என்று இருக்கலாம்..
திருச்செந்தூரில் விடியற்காலை பதநீர் கிடைக்கும்..
கோடையில் மட்டுமே
கிடைக்கக்கூடிய அற்புதம் பதநீர்..
உடல் மெலிந்தவர்களுக்கு சிறந்த ஊட்டம் தருவது பதநீர்..
எலும்புத் தேய்மானம் மற்றும் தொடர்புடைய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது பதநீர்..
உடலுக்கு குளிர்ச்சி அளித்து, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் நீர்க்கடுப்பைத் தடுக்கின்றது பதநீர்..
பதநீர் உடலுக்கு நன்மை அளித்து, பல நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது என்று நமது முன்னோர் சொல்லி வைத்ததையே -
பதநீரில் புரதம், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோபிளேவின், அஸ்கார்பிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன என்று விக்கி சொல்கின்றது...
பதநீருக்கு Palm Water என்று பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது...
Palm என்றால் அவ்விடத்தில் உள்ளங்கை..
இவ்விடத்தில் பனை..
இதற்கு மேல் வெள்ளையன் தான் நமக்குத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தான் - என்று இங்கே சொல்வார்கள்..
பனையின் துணைப் பொருட்கள் சிறப்புடையவை..
பனையின் பெருமையை அளவிட முடியாது..
பனை மரங்கள் சமீப காலங்களில் சாலை நலனை முன்னிட்டு தாமே முன் வந்து தியாகம் செய்து கொண்டன..
மேலும்
தம்மை வளர்த்தவர்களது பணத் தேவைக்காக மிகக் குறைந்த தொகைக்கு விலையாகி செங்கல் சூளைகளில் எரிந்து சாம்பலாகி விட்டன...
தென் மாவட்டங்களில் பனையை வாழ்வாதாரமாகக் கொண்ட மரபினோர் மட்டுமே சில ஆயிரங்கள் என்ற அளவில் பனை மரங்களைப் பராமரிக்கின்றனர்..
இதர மாவட்டங்களில் பனை சற்றேறக்குறைய அழிந்து விட்டது..
இத்தனைக்கும் பனை தமிழ் நாட்டின் மரபு சார்ந்த மரம்...
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ஏற்கெனவே வந்து விட்ட எலும்புத் தேய்மானத்தை இது சரியாகாது இல்லையா? இதில் கலப்படம், போலி என்றால் என்ன செய்வார்கள்? நீரூற்றி பெருக்கி விடுவார்களா?
பதிலளிநீக்குஎலும்புத் தேய்மானம் மற்றும் தொடர்புடைய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கின்றது என்பதே குறிப்பு..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
முன்பெல்லாம் அதன் ஒரு வகை மணத்தால் குடிக்காமல் இருந்தேன். சமீபத்தில் குடித்தபோது நன்றாக இருந்தாலும், அருகில் நின்ற பெண்மணி அதை முகர்ந்து பார்த்து விட்டு நிராகரித்துச் சென்றதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது!
பதிலளிநீக்கு
விசித்திரப் பிறவிகளைப் பற்றிய கவலை நமக்கு எதற்கு??...
நீக்குஅன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
நுங்கைப் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் என்கிற ஆவல் வரும். சாப்பிடும்போது ஒன்றுமே இல்லாதது போல இருக்கும்!
பதிலளிநீக்கு
நீக்குஉண்மை தான்
தங்கள் அன்பின்
வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
பதநீர் அருந்தி இருக்கிறோம். இத்துடன் மாங்காயும் கொத்திப் போட்டு அருந்த சுவையாக இருக்கும்..
பதிலளிநீக்குஇதில் கஞ்சியும் செய்திருக்கிறோம்.
தங்கள் அன்பின்
நீக்குவருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி