நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 13
சனிக்கிழமை
இன்று
இராமாயணக் காட்சிகள்
ஞான சம்பந்தப் பெருமான் அருளிய
தேவாரத் திருப்பதிகம்
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே.. 3/10/2
சீதா தேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னன் இராவணனின் மாலை சூடிய பத்துத் தலைகளையும் அறுத்துத் தள்ளி அவனை வீழ்த்திய பழி நீங்குமாறு கணையைச் செலுத்திய வில்லை உடைய இராம பிரான் வழிபட்ட இராமேச்சுரத்தை இடைவிடாது சிந்திப்பவர்களின் வினையானது அழிந்தே போகும்..
அணையலை சூழ் கடல் அன்றடைத்து வழி செய்தவன்
பணையிலங் கும்முடி பத்திறுத்த பழி போக்கிய
இணையிலி என்றுமி ருந்தகோ யில் இரா மேச்சுரம்
துணையிலி தூமலர்ப் பாதமேத் தத்துயர் நீங்குமே..6
அலை கடலில் அணையைக் கட்டி கடலைக் கடப்பதற்கு வழி செய்த இராமபிரான், இராவணனின் பருத்த தலைகள் பத்தினையும் தொலைத்ததால் ஏற்பட்ட பழியைப் போக்கிய இறைவன் வீற்றிருந்தருளும் கோயில் இராமேச்சுரம்.. தனக்கு ஒப்பாக எவருமில்லாத அப்பெருமானின் திருவடிகளில் தூமலர் தூவித்
துதித்து வணங்குபவர்களின் துன்பம் நீங்குமே..
ஸ்ரீ ராம ராம
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
ராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராமராம
பதிலளிநீக்குஸ்ரீராம ராம
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
இந்த தேவார திருப்பதிகத்தை என் மாமனார் மகபேறு சமயத்தில் படிக்க சொல்வார்கள். மகபேறு இல்லை என வருந்தோவரையும் படிக்க சொல்வார்கள்.
பதிலளிநீக்குபதிகத்தை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
பதிலளிநீக்குமேல் விவரங்களும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா
ஓம் இராமநாதசுவாமி சரணம்.
பதிலளிநீக்குஇராம ராம ராம்.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
நீக்குமகிழ்ச்சி..
நன்றி மாதேவி