நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 20, 2025

கோடை

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 7 
ஞாயிற்றுக்கிழமை


புத்தாண்டின் முதல் ஞாயிறு..

சூரிய பகவானின் கோயிலைப் பற்றி சிறியதொரு சுருள் காணொளி..





கோடை ஆரம்பம் ஆகி விட்டது...

இக்காலத்தில் நா வறட்சி பொது..

இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சாறு ஆகிய இயற்கை பானங்கள அருந்தலாம்.. 


தர்பூசணி பழமும் முலாம் பழமும்  கவனத்தில் கொள்ளத் தக்கவை.. 

இவற்றினோடு பானகம் எனும் அருமருந்தையும் அவ்வப்போது   அருந்தலாம்.

புளியைத் தண்ணீரில்  கரைத்துக் கொண்டு
அல்லது எலுமிச்சம் பழத்தை நறுக்கி தண்ணீரில்  பிழிந்து கருப்பட்டியை அதனோடு நன்கு கலக்க வேண்டும். இக் கரைசலை வேறொரு பாத்திரத்தில்  வடிகட்ட வேண்டும். சுக்குப் பொடியும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். இதுவே பானகம்..

இந்தப் பானகம் மிகவும் உயர்வானது..

கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும்.

பழரசங்களை விட மிகவும் நல்லது  பானகம்.

இரும்புச்சத்து அமினோ அமிலங்கள் பனை வெல்லத்தில் இருந்து அபரிமிதமாகக் கிடைக்கின்றன..

இவற்றால்
 உணவுக் குழாயில் ஏற்படும் பிரச்னைகள் சரியாகும்..

தயாரிப்பதும் எளிது.

கோடையில் செய்வதற்கான அறச் செயல்கள் பல உள்ளன...

குளிர்ந்த நீர், நீர் மோர், பானகம் வழங்குதல்....

ஏழைகளில் சிலருக்காவது ஓலை விசிறி, செருப்பு , குடை 
வழங்குதல்...

மணலைக் குவித்து வைத்து அதன் மீது புதிய பானை ஒன்றில் தண்ணீர் வைத்து விட்டால் அது மிகப் பெரிய அறம்..

இயன்றவரை 
விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வழங்கி செடி கொடி மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டால் பெரிய புண்ணியம்..
 
மோர் வழங்குவது எனில் வீட்டிலேயே தயாரித்து வழங்கவும்..

அப்படி இயலாது என்றால் - 
நல்ல தயாரிப்பாகப்  பார்த்து வாங்கி வழங்கவும்...

சில தயாரிப்புகள் எல்லாருக்கும் ஒத்துக் கொள்வதில்லை.. 

ஒரு இளநீர்  ஐம்பது அறுபது ரூபாய் என்றாகி விட்டது.. உப்புச் சுவை எனில் ஒன்றும் செய்ய இயலாது..
 

எது எப்படியோ, , தேவையான அளவு நல்ல தண்ணீர் குடிக்க வேண்டும்.. வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்..

செயற்கை நிறமிகள் இரசாயனங்கள் இவற்றுடன் காற்று அடைக்கப்பட்டவைகளிடம் எச்சரிக்கை தேவை..

செயற்கை பானங்களைத் தயாரித்தவர்களும் விற்பனை செய்தவர்களும்  ஆதாயம் அடைந்திருக்க - அவற்றை வாங்கிக் குடித்தவர்களுக்கு வியாதியும் வேதனையும் தான் மிச்சம்.

கோடை முடியும் வரை கவனமாக இருங்கள் ...

வாழ்க நலம்
நமது நலம்
நமது கையில்..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

12 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டில் வெல்லத்தண்ணீரில் பானகம் கரைப்பார்கள்.  பிரதோஷம் அன்றெல்லாம் வீட்டில் பானகம் உண்டு!

    பதிலளிநீக்கு
  2. இன்று ஒரு இளநீர் குடித்தேன்.  ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வந்த இளநீர்.  அளவு கம்மியாக இருந்தாலும் சுவை.  ஜில்லென்று இருந்தது.  வழுக்கையை எடுக்க வெட்டதான் முடியவில்லை.  60 ரூபாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளநீர் விளைகின்ற மாவட்டத்தில் அறுபது ரூபாய்..

      மகிழ்ச்சி..

      நீக்கு
  3. சமயங்களில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் - ஏப்ரல் 2020 முதல் வெந்நீர்தான் - தாகம் அடங்காது.  இது மாதிரி சமயங்களில் எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுவைப்பேன்.  இல்லாவிட்டால் நீர்மோர் உப்பு போட்டு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் மேல் விவரங்களும்
      கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  4. கொஞ்சம் கொஞ்சமாக வெந்நீரை விட்டு அவ்வப்போது பச்சைத் தண்ணீரும், ஜில் மோரும் குடித்து பழகி வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. கோடைக்கு ஏற்ற பதிவு. ப்டங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  6. கோடைக்கு ஏற்ற நலன் தரும் பானகங்கள் பற்றி நல்ல பல தகவல்களுடன் தந்துள்ளீர்கள்.

    நலன் தரும் பானகங்களை அருந்தி கோடையை கடப்போம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..