நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2020

வெள்ளி மணி 4

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
நான்காவது வெள்ளிக்கிழமை..
***
இன்றைய பதிவில்
அபிராமி பட்டர் அருளிச் செய்த
திருப்பாடல்கள்
ஸ்ரீ வடபத்ரகாளி - தஞ்சை.. 

கண்ணியது உன்புகழ் கற்பது உன்நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன்னிரு பாதாம் புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே..

ஸ்ரீ பகளாமுகி அம்மன் - தஞ்சை..

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் 
காத்தவளே பின் கரந்தவளே கறைக் கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர்  தெய்வம் வந்திப்பதே..

நாயகி நான்முகி நாரயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு 
வாயகி மாலினி வராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரன் நமக்கே..
***
சிக்கல்
ஸ்ரீ பத்ர காளியம்மன்
திருநடனக் காட்சி


நலமெலாம் தருவாய்
தாயே பராசக்தி..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களுக்கு நல்வரவு.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. ஓம் பராசக்தி உலகை காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  3. பராசக்தி நடனம் காணொளி நன்றாக இருக்கிறது.

    நலமெல்லாம் தருவாய் தாயே பராசக்தி!//

    துளசிதரன்

    பராசக்தி தாய் எல்லோருக்கும் நலம் அருள வேண்டும். இயற்கைச் சீற்றம் கூடியிருக்கிறதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்/ கீதா..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      இயற்கையின் சீற்றம் கூடியிருக்கிறது தான்... ஆயினும் அன்னை அவள் அறிவாள் அனைத்தும்...

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  4. உலகை அரசாளும் அன்னை அனைவரையும் காக்கப் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      அன்னையின் நல்லருளை நாடி நிற்போம்..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  5. காளி ஆட்டம் அருமை. கும்பகோணத்திலும் பார்த்திருக்கேன். அவங்க கிட்டே நெருங்க முடியாது! அவ்வளவு உக்கிரமாக இருப்பாங்க. இன்றைய பதிவும் அழகான படங்களுடன் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நான் தஞ்சாவூர் பாபநாசத்தில் காளியாட்டம் பார்த்திருக்கிறேன்...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றியக்கா...

      நீக்கு
  6. இன்றைய அம்மன் தரிசனம் மிக அருமை.
    காளி ஆட்டம் நன்றாக இருக்கிறது. ஆடி வெள்ளிக்கிழமை பச்சைக்காளி, பவளக்காளி என்று ஆடிக் கொண்டு வருவார்கள். அம்மன் திருவீதி உலாவில் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      கடுமையான விரதம் இருப்பார்கள் காளியாட்டக்காரர்கள்...

      தஞ்சை கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் காளியாட்டம் பிரசித்தம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      ஓம் சக்தி ஓம்..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அன்னை பராசக்தியின் படங்கள் அனைத்துமே அழகாக இருக்கின்றன.தலை சாய்த்து அருள் பாலிக்கும் அன்னை வடபத்ரகாளியம்மன் அவ்வளவு அழகு. தேவியை உலக நன்மைக்காக மனமாற பிரார்த்தித்து தரிசித்துக் கொண்டேன்.

    சிக்கல் பத்ரகாளியம்மன் திருநடன காட்சி காணொளி அற்புதம். கண்டு மனங்குளிர ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      தஞ்சை ஸ்ரீ வடபத்ரகாளி ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவள்...

      ராஜராஜ சோழனின் பெரும் பாட்டன் விஜயாலய சோழரால் நிர்மாணிக்கப்பட்டவள்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. அம்மா முகத்தைப் பார்த்தால் சமயபுரம் அம்மன்
      மாதிரி இருக்கிறது. பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
      அபிராமி அன்னையும் எல்லா தாயார்களும் மனம் வைத்து நம்மைக்
      காக்க வேண்டும். நனி அன்பு துரை.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..