நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 15, 2016

மங்கலம் பொங்குக

அனைவருக்கும்
அன்பின் இனிய 
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!.. 
***

இன்று மங்கலங்கள் நிறைந்த - தை மாதத்தின் முதல் நாள்.

தேவர்களுக்கு பகல் பொழுதாகிய உத்ராயண புண்ய காலத்தின் முதல் நாள்.

மரபு வழுவாத தமிழர் தம் மனைகளில் எல்லாம் மங்கலத் திருநாள்..

இன்றைய நாள் - பொங்கல் திருநாள்..

உலகோர்க்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் திருநாள்..

நன்றியறிதலை முதற்கண்ணாகக் கொண்டு கொண்டாடப்படும் நன்னாள்.. 
தம்மை வாழ வைத்த இயற்கையைப் போற்றி வணங்கி மகிழும் பொன்னாள்..


சூரியன் - தை முதல் நாளன்று மகர ராசிக்குள் பிரவேசிக்கின்றான். 

காலகதியில் பத்தாவது மாதமாக விளங்குவது - தை . 

அதனால் தான் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள்.

தை முதல் நாளிலிருந்து  ஆனி மாதம் முடிய உள்ள ஆறு மாதங்களும் சுப காரியங்களுக்கு உகந்தவையாகக் கருதப்படுகின்றன. 

தை மாதத்தில் - இல்லங்கள் தோறும் மங்கல நிகழ்வுகளும் ஊர்கள் தோறும் திருவிழா வைபவங்களும் பொலிந்து விளங்குகின்றன.


நல்ல மழை பொழிந்ததற்கும் நாடு செழித்ததற்கும் நன்றி கூறும் திருநாளே - பொங்கல் திருநாள்.


தமிழர்கள் - உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அங்கெல்லாம் பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ மறப்பதேயில்லை

அத்தகைய பெருமைக்கு உரிய பொங்கல் திருநாள் - 
தமிழகத்தின் பாரம்பரியத் திருநாள்...

மார்கழியின் கடைசி நாளை - 
போகி என அனுசரித்து பழையனவற்றை விலக்கி - 
பயன்படும் பொருள்களை புதிதெனத் துலக்கி,
உள்ளமும் இல்லமும் தூய்மை கொண்டு விளங்க - 
பொங்கல் திருநாளின் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன. 


தை முதல் நாளில் குறிக்கப்பட்ட நல்ல நேரத்தில் - 
அவரவர் குடும்ப மரபுப்படி புது அரிசி கொண்டு - 
புதுப்பானையில் சர்க்கரைப் பொங்கலிடுவதும், 

புத்தரிசி பொங்கியதும் பொங்கல் பானைக்கு திருநீறு சந்தனம் குங்குமம் இட்டு இஞ்சி மஞ்சள் கொத்துகளைக் கட்டி பல வகையான கனிகளுடன் கரும்பு என - சூரியனுக்கு சமர்ப்பித்து வணங்குவதும் -

தமிழ் மண்ணை விட்டு நீங்காத பழக்க வழக்கங்கள்.. 


உண்மையான பொங்கல் வழிபாடு - 
மண் மாறாத வகையில் கிராமங்களில் தான் நிகழ்கின்றன..
    
மக்களின் கடும் உழைப்பைக் கண்டு நிலமகள் உவந்தளித்த 
விளைபொருட்கள் அனைத்தையும் இயற்கையின் தலைமகனான சூரியனுக்கு நிவேதனம் செய்வர். 

புத்தரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள், இஞ்சி இவற்றோடு சர்க்கரைவல்லி, சேனை, மற்றும் கருணைக் கிழங்கு ஆகியவைகளும் அவரை, பீர்க்கு, பறங்கி, பூசனி என தோட்டப் பயிர்களும் இயற்கைக்குக் காணிக்கையாகின்றன.

கழனி செழிக்க பொங்கி வரும் காவிரி
எரு அடித்த பின் உழவு
சுழன்றும் ஏர் பின்னது உலகம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் - காளைகள்
முளை விடும் செந்நெல்
நாற்றங்காலில் இருந்து நாற்று பறித்தல்
குலவையிட்டு வணங்கிய பின் நாற்று நடவு
களை எடுத்தபின் மீண்டும் உரம்
பசும்பட்டு விரித்தாற் போல வயற்காடு
தழைத்திருக்கும் பசுங்கதிர்கள்
அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்கள்
மண் மகிழ மனம் மகிழ கதிர்கள் அறுவடை
களம் நோக்கிச் செல்லும் கதிர்கட்டுகள்
காற்றில் தூற்றி பதர்களை நீக்குதல்
களம் கண்ட நெல் மூட்டைகள்..
வீடு நோக்கிச்செல்லும் புது நெல்
முத்து முத்தாகப் பச்சரிசி
சீர் தரும் வாழை
சிறப்பினில் செங்கரும்பு
மங்கலமாய் மஞ்சள்
செல்லம்.. நமக்குப் பொங்கல் நாளைக்கு!..
தங்கள் உயிரோடும் உணர்வோடும் ஒட்டி உறவாடும் உறவு முறைகள், 
இன்பத்திலும் துன்பத்திலும் தோள் கொடுத்து நின்ற தோழமைகள், 
இன்முகம் காட்டி உடன் வந்த நன்முகங்கள் - என, 

அனைவருடனும் கலந்து மகிழும் திருநாள் - பொங்கல் திருநாள். 


தொன்று தொட்டு வரும் பாரம்பர்ய பண்பாட்டிற்கு  - மேல் விளக்கங்கள் கற்பித்து எத்தனை எத்தனையோ புதிய தகவல்கள் - காணக் கிடைக்கின்றன.

பொங்கலிடும் போது - 

இந்த மந்திரத்தைச் சொல்லவேண்டும். அந்த ஸ்லோகத்தைக் கூற வேண்டும் - என்றெல்லாம் புதியனவற்றைக் கற்பிக்கின்றன - இன்றைய ஆன்மீக ஏடுகள்...

அவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்.
முற்றத்தின் விறகு அடுப்பில் மூண்டெழுந்த அக்னி
சமையலறை தனில்வாயு அடுப்பினிலே தழைக்கட்டும்!..
மண்பானை அதற்குள் பொங்கிவந்த பொங்கல் - 
குறைவின்றி குக்கருக்குள் கொதித்துக் குழையட்டும்!.. 


எல்லாவற்றுக்கும் மேலாக - 
மனிதநேயம் எனும் பொற்பானையில் அன்பையும் பண்பையும் நிறைத்து ஆனந்தப் பொங்கல் வைத்து சுற்றம் சூழ - கூடிக் குளிர்ந்திருந்து, 
பொங்கலோ பொங்கல்!..
பொங்கலோ பொங்கல்!..
பொங்கலோ பொங்கல்!..    

- எனக் கூவிக் குதுகலித்து - கோடி நலன் பெற்று மகிழ்ந்திருப்போமாக!..


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர். (1033) 

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் 
நன்னாளாகிய தைப்பொங்கல் நாளில்

நீர்வளமும்  நிலவளமும் நிறைய வேண்டும்.
நமது வாழ்வும் வளமும் தழைக்க வேண்டும். 
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்!..

அனைவருக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
* * *

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்பின் ஜி அழகிய விளக்கவும் புகைப்படங்களும் அழகு பழைய நினைவுகளை மீட்டிச்சென்றது
    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    படங்கள் அழகு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நல்ல தொகுப்பு அழகிய படங்கள், உங்கள் பதிவுகளில் பார்க்கும் படங்களை நான் எங்கேயும் பார்த்ததில்லை, என் தாமதமான வாழ்த்துக்கள்,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      பதிவில் உள்ள படங்கள் எல்லாம் இணையத்தில் பெற்றவை..
      நானே எடுத்து வழங்க வேண்டும் என்ற ஆவலும் உண்டு..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..