இன்று வைகாசி மூலம்..
திருஞானசம்பந்தப் பெருமானின்
குருபூஜை நாள்..
தமிழ் கூறும் நல்லுலகம்
ஞானசம்பந்த மூர்த்தியை
ஆளுடைய பிள்ளை என்று
கொண்டாடுகின்றது..
ஐயன் நிகழ்த்திய
அருஞ்செயல்கள் பலவாகும்..
ஐயனின் அருள் வாக்கினில் பிறந்த
மங்கலங்கள் பற்பலவாகும்..
மதுரையம்பதியில்
சைவ சமயத்தை மீட்டெடுத்தபோது
அருளிச் செய்த
திருப்பதிகத்தின் முதற்பாடல்
இன்றைய காலகட்டத்தில்
மிகவும் அவசியமானதாகின்றது..
அன்னை பராசக்தியின்
அருட்பால் அருந்திய
ஞானக்குழந்தையின் திருவாக்கு
நமக்கு என்றென்றும்
உற்ற துணையாக விளங்கட்டும்...
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே...
ஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

