நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 23, 2019

முத்துப் பல்லக்கு

வைகாசி மூல நட்சத்திரத்தில்
ஞானசம்பந்தப் பெருமானின்  குருபூஜையை அனுசரித்து தஞ்சை மாநகரில் நிகழ்வது
முத்துப் பல்லக்கு வைபவம்...

பெருமான் - சிவதரிசனம் பெற்றதாக
நகரிலுள்ள அனைத்து விநாயகர் கோயில்கள் மற்றும் முருகன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பல்லக்குகளில் எழுந்தருள -

மேல ராஜவீதியின் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சிறப்பான ஆராதனைகள் நிகழும்..

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஞான சம்பந்தப்பெருமானின் பழைமையான சித்திரம் திருவீதி எழுந்தருளல் நிகழும்...

அந்தவகையில் -
நேற்று மாலையில் தஞ்சை நகரின் ராஜவீதிகளில் முத்துப் பல்லக்கு வைபவம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது...

பதினைந்திற்கும் மேற்பட்ட பல்லக்குகளுடன். நேற்று இரவு முழுதும் நடைபெற்ற இந்த வைபவத்தின் காட்சிகள் இன்றைய பதிவில்..

படங்களை வழங்கிய
தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி....











அடுத்ததாக - தஞ்சையில்
வைகாசி திருவோண நட்சத்திரத்தில்
திருமங்கை ஆழ்வாருக்கு - ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கருட வாகனராக காட்சியளித்த
வைபவம் 24 கருட சேவையாக நிகழ உள்ளது...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
 ஃஃஃ