நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 6
வியாழக்கிழமை
தேவியுடன்
ஸ்ரீ கல்யாணசுந்தரர்..
இந்தப்பக்கம் தோழியும்
அந்தப் பக்கம் திருமாலவனும்...
இந்தச் சிற்பத் தொகுதி கண்டெடுக்கப்பட்ட இடம் திருவெண்காடு.. காலம் பதினொன்றாம் நூற்றாண்டு..
கடற்படை நடத்தி மாபெரும் கோயிலை எழுப்பிய மாமன்னர் ராஜராஜ சோழரது பொற்காலத்திலோ அல்லது அதற்கும் முற்பட்ட காலத்திலோ விக்ரகங்கள்
வடிவமைக்கப்பட்டதாக இருக்கலாம்.. அதனை நாம் யூகிக்கலாம்... அவ்வளவே...
ஆயினும் தேவியின் தோழியாக நிற்கும் இளம் பெண்ணின் ஆடை வடிவமைப்பு கவனிக்கத் தக்கது..
கொள்ளையிட வந்தவர்களால் தான் இந்த நாடு கல்வியறிவு பெற்றது என்று புலம்புகின்றவர்களுக்கு இது புரியாது!?..
























































