நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 24, 2026

தமிழமுது

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி
இரண்டாம் வெள்ளி


இன்று
திருஞானசம்பந்தர்
அருளிச்செய்த திருக்கடைக்காப்பு

தலம் 
திருக்கோலக்கா

மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக் காவுளான்
சடையும் பிறையும் சாம்பற் பூச்சும் கீள்
உடையுங் கொண்ட உருவம் என்கொலோ.. 1/23/1

மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாய்வதும்
பெண்கள் தம் கரங்களால் குடைந்து நீராடுவதும் ஆன பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் -  

சடைமுடியும்,  பிறையும், திருமேனி முழுதும் திருநீறும் இடையில்  கீள் எனப்படும்  உடையும் கொண்டு விளங்கும் இறைவனின் திருக்கோலம் தான்  என்னவோ?..

 நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் நம சிவாய
***

2 கருத்துகள்:

  1. இறைவனின் திருக்கோலத்தை மனக் கண்களால் பருகி அவன் தாள் பணிவோம்.

    ஓம் நமச்சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..