நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
திங்கட்கிழமை
தினை கூட்டாஞ்சோறு
தேவையானவை:
தினை அரிசி - 300 கி
பெரிய வெங்காயம்,
கேரட், குடமிளகாய் - ஒவ்வொன்றும்
நடுத்தரமாக ஒன்று,
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்,
மஞ்சள் தூள் சிறிது, கறிவேப்பிலை,
கொத்தமல்லி தழை சிறிதளவு,
நல்ல நெய்,
கல் உப்பு - தேவையான அளவு...
செய்முறை:
பச்சைப் பட்டாணி புதிதாக உரித்தெடுக்கப்பட்டதாக இருத்தல் நலம்..
வெங்காயம், கேரட், குடமிளகாய் இவற்றை சுத்தம் செய்து மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்
.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை,
காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து - வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கப்பட்ட கேரட், குடமிளகாயை சேர்க்கவும்.
அடுத்து -
சரிக்கு சரியாக தண்ணீர் விட்டு
தினை அரிசியை
சற்று நேரம் வைக்கவும்..
இதனை வடித்து விட்டு -
ஒரு பங்கு தினைக்கு இரு பங்கு தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வேக வைக்கவும்.. 10 நிமிடங்கள் கழித்து தினை அரிசி வெந்ததும் வதக்கியவற்றைச் சேர்த்துக் கிளறி,
மல்லித் தழை கிள்ளிப் போட்டு இறக்கி பரிமாறவும்...
கூட்டாஞ்சோறு ஆக்குவதில் வீட்டுக்கு வீடு வேறுபாடு இருக்கக் கூடும்..
வாழ்க நலம்
***

கூட்டாஞ்சோறு செய்முறை எளிதாக இருக்கிறது. நான் தினை அரிசி எல்லாம் வாங்கியதே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குநாம் விரும்பினால் வேறு சில காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்தானே?
பதிலளிநீக்குகுழந்தைகள் கூட்டாஞ்சோறு செய்து விளையாடுவது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்கு