நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி
வெள்ளிக்கிழமை
திருநாவுக்கரசர்
தேவாரம்
தலம்
திருப்பேரெயில்
முன்னை யார்மயில்
ஊர்தி முருகவேள்
தன்னை யாரெனில்
தானோர் தலைமகன்
என்னை யாளும்
இறையவன் எம்பிரான்
பின்னை யாரவர்
பேரெயி லாளரே.. 5/16/7
**
ஏ மனமே...
பேரெயில் தலத்துள் திகழ்கின்ற பெருமான்
முன்னே முதற் பொருளாகத் தோன்றியதோடு - மயிலை வாகனமாகக் கொண்ட முருகப் பெருமானின் தந்தையாகிய தனிப்பெரும் தலைமகன்..
என்னையாளுகின்ற இறைவனும் எம்பிரானும் அவரே. முன்னைக்குப் பின் தோன்றிய புதியவரும் அவரே ..
நன்றி
பன்னிரு திருமுறை
தஞ்சையம்பதி
ஓம் நம சிவாய
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..