நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆனி
வெள்ளிக்கிழமை
இன்று
ஞானசம்பந்தர் தேவாரம்
தலம்
திரு அண்ணாமலை
எனைத்தோர் ஊழி அடியார் ஏத்த
இமையோர் பெருமானார்
நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும்
நிமலர் உறை கோயில்
கனைத்த மேதி காணாது ஆயன்
கைமேல் குழல்ஊத
அனைத்தும் சென்று
திரளும் சாரல் அண்ணாமலையாரே.. 1/69/6
ஊழிகள் தோறும் அடியார்களால் வணங்கப் பெற்ற தேவ தேவன் ...
நினைப்பவர் தம் பாவங்களைக் களைகின்ற சிவபெருமான்..
தான் உறைகின்ற திருக்கோயில்
கனைத்துக் குரல் எழுப்பியபடி மேய்ந்து கொண்டிருந்த எருமையைக் காணாத ஆயன் தன் கையிலிருக்கும் குழலை ஊதியதும் எருமைகள் அனைத்தும்
ஓடி வந்து சேர்கின்ற அண்ணாமலைச் சாரலே...
ஓம் நம சிவாய
***
.jpg)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..