நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், மே 06, 2025

சிறுகதை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 23
செவ்வாய்க்கிழமை

இன்றைய பதிவில் பழங்கதை ஒன்று - ஒரு சில வார்த்தை திருத்தங்களுடன்.

அன்பின் ஸ்ரீராம் அவர்களது எங்கள் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிடப்பட்டிருக்கின்றது..

அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளுடன் எழுதப் பெற்ற கதை இது..

எத்தனை பேர் தலையில் அடித்துக் கொண்டார்களோ!..

தரிசனம்


" நடை திறந்ததும் கற்பகாம்பாள தரிசனம் செய்துட்டு புறப்படறோம்.. "
 
அபயாம்பிகா டிராவல்ஸின் அட்டெண்டர் வைத்திநாதன் விவரிக்க ஆரம்பித்தான்..

அந்தப் பக்கம் கணினியுடன் ஒரு இளம் பெண்.. வேலையா விளையாட்டா.. தெரிய வில்லை..

" ஷார்ப்பா ஆறு மணி நேரத்துல பெரம்பலூர் அரியலூர் வழியா திருவையாறு போயிடலாம்...
நைட் கல்யாண சத்திரத்தில தங்கி.. "

அம்பி எனப்படும் வைத்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியின் இடைமறிப்பு..

" ஏன்.. லாட்ஜ் ஏதும் கிடைக்கலையா?.. "

" இது பட்ஜெட் டூர்.. சர்வீஸ் காசு கம்மி.. கல்யாண சத்திரந்தான்.. சத்திரமே தான்..  மாமி இப்பவே நன்னா கேட்டுக்கோங்க..  அங்க வந்து ப்ரச்னை பண்ணக் கூடாது!.. "

" இல்லேடா அம்பி.. நீ மேல சொல்லு!.. "

" சத்ரத்தில நன்னா தூங்கிட்டு காலைல ஸ்நானம் முடிஞ்சதும்.. "

" எங்கே காவேரி..லயா!.. "

" மாமி..  நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க.. காவேரி காஞ்சு போய் ரெண்டு மாசம் ஆகறது.. "

 " அப்போ புரோக்ஷணம்  கூட செஞ்சுக்க முடியாதா?.. "

" ம்.. ஹூம்.. "

" எல்லாம் கலியாயிடுத்து.. மேல சொல்லு... "

" கறந்த பால் காஃபியோட காலை டிபன்.. நேரா ஐயாறப்பர் கோயில்.. அங்கே ஆயிரக் கணக்..ல ஜனங்க கூடியிருப்பாங்க.. ஸ்வாமி பல்லாக்கு நந்தி பல்லாக்கு ரெண்டும்  புஷ்ய மண்டபத்துக்குப் புறப்பட்டு போனதுக்கப்புறம் தான் கோயிலுக்குள்ள போய் ஸ்வாமி தரிசனம் செய்ய. முடியும்.. "

" நீங்க தானே அழச்சிண்டுப் போவேள்?.. "

" மூலஸ்தானத்தில் சேவிக்கறது எல்லாம் அவ்வளவு ஈஸி இல்லை.. உச்சிக் காலம் ஆயிடும்.. நாம திருப்பழனம் வேற போயாகணும்.. அவா அவாளும் சாமார்த்தியம் பண்ணி ஸ்வாமி பார்த்துட்டு ராஜ கோபுரத்தாண்ட வந்துடணும்!.. இங்கே புறப்படறச்சே ஒரு பேட்ஜ் கொடுத்துடுவோம்.. அத கழுத்துல மாட்டிக்கிடணும்.. அதுல எல்லா டீடெய்ல்ஸூம் இருக்கு.. மிஸ்ஸிங் பார்ட்டி
டிராவல்ஸ் நம்பருக்கு மெசேஜ் பண்ணா நாங்க வந்து அழச்சுக்குவோம்.. அதுக்காக நந்தியாண்ட வந்து நின்னுக்கிட்டு வழி தெரியலைன்னு புலம்பக் கூடாது.. வடக்கு எது தெக்கு எதுன்னு கேக்கப்படாது!.. "

" நெஜத்துல டாம்பீகமா வர்றா. வடக்கு எது.. தெக்கு எதுன்னு கேட்டா சொல்லத் தெரியலை!.
நேக்கு நெஜமாலுமே திருவையாத்து கோயில்ல வடக்கு தெக்கு தெரியாதுடா அம்பி!.. "

" அதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல.. கூட மாமா வருவார் தானே... அவாரோட கைய மட்டும் விடாம புடிச்சுக்கோங்க.. எல்லாம் சரியாய்டும்!.. "

"  சரி.. பகவான் பார்த்துப்பார்.. திருப்பழனம் போறது.. ன்னாயே.. மேல சொல்லு!.. "

" கோபி அண்ணாவோட தம்பி அங்கே டிராவல்ஸ் நடத்றார்.. திருவையாறு ல இருந்து திருப்பழனத்துக்கு  ஏசி வேன் ஏற்பாடு ஆகியிருக்கு.. அது  தான் அங்கே சரியா வரும்... "

" அதுக்கெல்லாம் எக்ஸ்ட்ரா சார்ஜ் பண்ணுவாளே!.. "

" அப்படியெல்லாம் இல்லை.. அதுக்கான சார்ஜ் இந்தப் பேக்கேஜ்லயே வந்துடுது.. கவலப்படாதேள்!.. " - வைத்தி சிரித்தான்..

" சரி.. அதுக்கு அப்புறம் எந்த ஊர்?.. "

" திருப்பழனம் பார்த்துட்டு திரும்பி திருவையாறு வந்து கண்டியூர் வழியா திருச் சோற்றுத்துறை.. திருவேதிக்குடி.. "

" ஏன் அப்படி?.. "

" அதுதான் வழி.. குறுக்கால ரெண்டு ஆறு.. காவேரி, இன்னொன்னு குடமுருட்டி..
ரெண்டுக்குமே பாலம் இல்ல..
ஆத்துல இறங்கி நடக்கணும்.. இல்லேன்னா ஊர சுத்திண்டு தான் வரணும்.. ரூரல் ஏரியா.. புஷ் பேக் எல்லாம் ஊருக்கு உள்ளே போக முடியாது.. "

" அது சரி.. நாழியாயிடுத்து ன்னு கோயில் நடை அடைச்சுட மாட்டாளா... "

" பல்லாக்கு வந்துட்டுப் போறது வரைக்கும் அந்தந்தக் கோயிலும் தெறந்தே தான் இருக்கும்..இப்படியே மத்த மூணு கோயிலும் சேவிச்சுட்டு.. "

இன்னும் ஏதேதோ கேள்விகள் மாமியிடம் இருந்து வந்தன.. எல்லாவற்றுக்கும் தெளிவான பதில்கள் இருந்தன
வைத்தியிடம் ..

" ஏண்டா அம்பி.. இவ்ளோ தூரம் கூட்டிண்டு போறாய்..  ரெண்டு ராப்பொழுது தங்கணும்.. ன்றாய்!..  சாப்பாடு  வசதி எல்லாம் எப்டி?.. அங்கே ஏதோ அன்ன தானம் போடுவாள்.. ன்னு சொல்றாளே!..  அதுல கொண்டு போய் ஒக்கார்த்தி வெச்சுட மாட்டியே!.. "

மினுமினுக்கிய கண்ணாடியை சுட்டு விரலால் ஏற்றி விட்டுக் கொண்ட மாமியிடம் இருந்து மறுபடியும் கேள்வி..

அம்பியாகிய வைத்தி ஏறிட்டு நோக்கினான்..

மாமியின் கூர்மையான விழிகள் இவன் என்ன சொல்லப் போகின்றான் என்ற ஆவலுடன் இருந்தன..

" அந்த அன்னதானம் எல்லாம் சாப்பிடறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும் மாமி.. வர்றதில அம்பாள் யார்.. ஐயாறப்பன் யார்.. ன்னு யாருக்கும் தெரியாது.. முப்பத்து முக்கோடி தேவர்களும் எண்ணாயிரம் ரிஷிமார்களும் ஏதாவது ஒரு ரூபத்துல வந்து தரிசனம் பண்றதா ஐதீகம்!.. நீங்க என்னடான்னா... "

 " இல்லேடா அம்பி.. மாமாவுக்கு ஃபுட் பாய்சன் ஆனதில இருந்து எங்கேயும் கை நனைக்கிறது இல்லே!.. அதுக்காகத்தான் கேட்டேன்.. "

" தர்மசம்வர்த்தனி எதுக்கு இருக்கறா?.. தைரியமா வாங்கோ.. அவ பார்த்துப்பா!..  "

" நன்னாத் தான் பேசறே!... "

" தேங்க் யூ மாமி.. ஸீட் புக் பண்ணிடலாமா?.. "

" சித்த நாழி பொறு.. இன்னொரு ரிக்வெஸ்ட்..."

" சொல்லுங்கோ.. "

" இவ்ளோ தூரம் திருவையாறு வரைக்கும் போறமே.. அங்கேருந்து இருபது நிமிஷம் தஞ்சாவூர்.. "

" தஞ்சாவூர் ல யாரப் பார்க்கணும்?.. "

" என்னடா இப்படிக் கேட்டுட்டே... அங்க தான காமாக்ஷி இருக்கா!.. "

" யார்.. உங்க சித்தி பொண்ணா?.. " வைத்தியின் வார்த்தைகளில் குறும்பு..

" லோக மாதா.. ஷாட்சாத் காஞ்சி காமாக்ஷி அம்பா!.. அவளத் தெரிஞ்சுக்காம என்ன டூர் நடத்தறே நீ?.. "

" ஓ!.. அந்த கோயிலுக்கும் எக்ஸ்டெண்ட் பண்ணச் சொல்றேளா!.. "

" ஆமா!.. "

" நேக்குத் தெரியாது.. அதெல்லாம் ஆர்கனைசர் கிட்ட பேசிக்கோங்க.. " 
கையை விரித்தான் வைத்தி..

" எங்கே அவர்!.. "

" அவர் திருப்பதி போயிருக்கார்.. ரெண்டு நாளாகும் வர்றதுக்கு.. "

" மே மாசம் டுவல்த்  திருவையாறு சப்தஸ்தானம.. லெவன்த் எர்லி மானிங் இங்கே இருந்து புறப்படறோம்.. மார்ச் லேருந்து புக்கிங்... நடந்துண்டு இருக்கு..  இப்போ வந்து தஞ்சாவூர்க்கும்  போறோம்.. இன்னுங் கொஞ்சம் அமௌண்ட் ஜாஸ்தியாகும் ன்னு சொல்ல முடியுமா?.. இல்லே உங்களுக்குத் தான் சிங்கிள் சார்ஜ் பண்ணிட்டு திருவையாத்துல இறக்கி விட்டுட்டு வர முடியுமா?.. அதெல்லாம் சரியா வராது மாமி.. "

" சரி.. நான் எங்க குரூப் மெம்பர்ஸ் கிட்ட சொல்லிடறேன்.. " மாமியின் கண்கள் கைத்தொலை பேசியில் பதிந்தன..

" இவ்ளோ நாள் டூர் போட்ருக்கோம்.. இந்த மாதிரியான.. "

வைத்தி சொல்லிக் கொண்டிருந்த போது தொலைபேசி கிணுகிணுத்தது..

" ஒரு நிமிஷம்.. ஆர்கனைசர்  பேசறார்.. ' - என்ற வைத்தி - 
" ம்ம்.. ம்ம்.. அப்படியா!.. ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா..  ஆகா.. அப்படியா!.. ம்ம்.. ம்ம்.. உங்க குல தெய்வம் எங்கே இருக்கு?.. தஞ்சாவூர்.. ல யா!..  சரி.. சரி.. வாங்க... வந்து பேசிக்கலாம்.. சரிங்க ண்ணா!.. " 
-  முகம் மலர்ந்த புன்னகையுடன் எழுந்து நின்று மாமியை நமஸ்கரித்தான்..

" க்ஷேமமா இருடா அம்பி.. எதுக்கு இந்த நமஸ்காரம்!.. " - மாமிக்கு வியப்பு..

" உங்கள அழச்சுட்டு வரச் சொல்லி அந்த அம்பாளே சொல்லிட்டா.. திருவையாறு பேக்கேஜ் ல வர்ற எல்லாருக்கும் தஞ்சாவூர் டிரிப்  போனஸ்!.. ஆர்கனைசரையே சொல்ல வச்சிட்டா!.. " 

" ஏன்.. என்ன ஆச்சு?.. ஆர்கனைசர் என்ன சொன்னார்!?... " - மாமியிடம் பரபரப்பு..

" பெஸ்ட் டிராவல் சர்வீஸ்... அப்டி.. ன்னு எங்களுக்கு சர்க்கார்ல இருந்து சர்ட்டிபிகேட்.. அத்தோட ஒரு லட்ச ரூபாய் கேஷ் அவார்டும் கிடைச்சிருக்கு.. அதைத்தான் ஆர்கனைசர் திருப்பதியில இருந்து சொன்னார்.. "

" அப்படியா!.. ரொம்ப சந்தோஷம்.. " - மாமியிடமும் மகிழ்ச்சி..

 " அத்தோட திருப்பதி ல இருந்து திரும்பி வந்ததும் இந்த திருவையாறு பேக்கேஜ் கெஸ்ட்களோட தஞ்சாவூர்  குலதெய்வம் கோயிலுக்குப் போய்ட்டு வரப் போறதாகவும் சொன்னார்!.. "

" காமாக்ஷி!.. " - மாமியின் கண்கள் கலங்கின..

" தஞ்சாவூர் ல  மாரியம்மன் கோயிலுக்குப் போறார்... அவங்க குல தெய்வம்...
நீங்க கூட கேட்டீங்களே.. தஞ்சாவூர் போகணும்.. ன்னு.. சிக்ஸர் அடிச்சுட்டேள்.. சக்சஸ் ஆயிடுத்து மாமி.. நல்ல மனசு தெய்வாம்சம்.. அதான் உங்கள நமஸ்காரம் பண்ணினேன்.. "

" பங்காரு காமாக்ஷி ய பார்க்கனும்..ன்னு  ஆசைப்பட்டேன்.. வர்றது தான் 
வர்றே..  இங்கேயும் வந்து பார் டி.. ன்னு  மகமாயி
கூப்பிட்டுட்டா!.. "
மாமியின் குரலில் நெகிழ்ச்சி..

" பிரஹந்நாயகி ய விட்டுட்டீங்களே.. மாமி!.. "

" பிரஹந்நாயகி வராஹி.. கொங்கணேச ஞானாம்பிகா.. இவாள எல்லாம் மறக்க முடியுமாடா அம்பி.. "

கண்ணாடியைக் கழற்றி விட்டு கண்களைத் துடைத்துக் கொண்ட மாமியின் குரல் தொலைபேசியில் தீர்க்கமாக இருந்தது.. 

" ஆமாம்..  நமக்கு போனஸ்.. ன்னு அவர் சொல்லிட்டாலும்.. தஞ்சாவூர் போய்ட்டு வர்ற அமௌண்டை நாம  அப்படியே அன்னதான நிதிக்கு கொடுத்துடுவோம்!.. 
" அதுதான் நியாயம்!.. "

வைத்தி உற்சாகமானான்..

" மாமி.. உங்க பேர் சொல்லுங்கோ.. சீட் ரிசர்வ் பண்ணிடறேன்.. "

மாமி சொன்னாள்..
" கற்பகாம்பாள் சந்திரசேகர்!.. "
***

எதிர் வருகின்ற 
சித்திரை 29 (12/5) திங்களன்று சப்தஸ்தான உலா..
திரு ஐயாற்றில் இருந்து  பல்லக்குகள் புறப்படுகின்றன..

சப்தஸ்தானம் காண்பதற்கு வருக வருக..

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. அப்போதே நெகிழ வைத்த கதை.  அருமை.  எண்ணிய எண்ணியாங்கெய்துப ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் நிறைவு

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. சொல்ல வந்த விஷயத்தை நோக்கி நகர்த்தும் உரையாடல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல கதை ஏற்கனவே எபி யில் படித்த நினைவு உள்ளது. அன்னை கற்பகாம்பாள் தன் பெயருடைய தன் பக்தையின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டார். பங்காரு காமாக்ஷியை தரிசிக்கும் பாக்கியம் தானாகவே கிடைத்து விட்டது மெய்சிலிர்க்க வைத்தது. கதையைப் படித்து முன்பு நெகிழ்ந்ததும் நினைவுக்குள் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    /எதிர் வருகின்ற
    சித்திரை 29 (12/5) திங்களன்று சப்தஸ்தான உலா..
    திரு ஐயாற்றில் இருந்து பல்லக்குகள் புறப்படுகின்றன./

    நல்லதொரு தகவல்களுக்கும் மிக்க நன்றி .

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல் பகிர்வு 32 அறங்களில் ஒன்றாகும்..

      தங்கள் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  4. மாமியும், அம்பி வைத்தியும் உரையாடுவது அருமை.
    மாமியின் கோரிக்கையை அம்மாள் பூர்த்தி செய்து விட்டாள்.
    நல்ல மனசு தெய்வாம்சம் என்று வைத்தி சொல்வதும், பாங்காரு காமாட்சியை பார்க்க ஆசைபட்டேன், மகமாயி என்னையும் பார் என்று கூப்பிட்டுட்டா என்று மாமி நெகிழவதும் அருமை.
    நல்ல மனங்கள் வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மனங்கள் வாழ்க

      தங்கள் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  5. நல்ல கதைப் பகிர்வு.
    மாமியின் எண்ணத்தை ஈடேற்றிவைக்கும் அம்பாள் நெகிழவைக்கும் கதை.

    திரு ஐயாறு பல்லக்குகள் உலா வர இருப்பது சிறப்பான தகவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..