நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜூன் 06, 2018

திருவீதியுலா 2

கடந்த திங்களன்று (4/5) தஞ்சையில் நடைபெற்ற
24 கருடசேவை மகோத்சவத்தின் திருக்காட்சிகள்
இன்றைய பதிவிலும் தொடர்கின்றன...


நிகழ்ச்சியின் முதல்நாளாகிய ஞாயிறன்று
திவ்ய தேச மங்களாசாசன வைபவங்கள் நிறைவேறிய பின்,

திங்கட்கிழமை (4/5) காலையில் -
திருமங்கையாழ்வர் அன்னவாகனத்தில் எழுந்தருளி முன்னே சென்றார்..

ஆழ்வாரைத் தொடர்ந்து - திவ்யதேச மூர்த்திகளாகிய,
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளுடன் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும்
ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாளும் ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளும்

கருடவாகனத்தில் ஆரோகணித்து -
தஞ்சை நகரின் ஈசான்ய மூலையாகிய கொடிமரத்து மூலையில்
எழுந்தருளினர்...

தொடர்ந்து
நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்மூர்த்திகள் எழுந்தருள -
நகரின் ராஜவீதிகள் நான்கிலும் கருடசேவை வைபவம் நடைபெற்றது..

இவ்வைபவத்தைத் தரிசிப்பதற்கு வெளியூர்களிலிருந்தும்
பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர்...


கடந்த ஆண்டுவரை 23 கருடசேவை என்றிருந்த வைபவம்
இந்த ஆண்டு கீழவாசல் கொள்ளுப்பேட்டைத் தெருவின் 
ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி திருக்கோயிலில் இருந்தும்
கருடசேவை புறப்பாடாகியதால்
இந்த ஆண்டு 24 கருடசேவை என்றாகியிருக்கின்றது...

நாட்டின் எந்தப் பகுதியிலும் 
இப்படியான கருடசேவை வைபவம் நிகழ்வதில்லை!...
- என்று பெருமை கொண்டாலும்,

இந்தக் கோயில்கள் அனைத்துமே
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி இருப்பவை 
என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்...



கருடசேவை புறப்பாடாகிய திருக்கோயில்களின் விவரம்..

1) ஸ்ரீ நீலமேக பெருமாள் - ஸ்ரீ ஆண்டாள்
2) ஸ்ரீ வீர நரசிம்ஹ பெருமாள்
3) ஸ்ரீ மணிக்குன்ற பெருமாள்
4) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - வேளூர்
5) ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள் - வெண்ணாற்றங்கரை


6) ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி - பள்ளி அக்ரஹாரம்
7) ஸ்ரீ லக்ஷ்மிநாராயண பெருமாள் - சுங்காந்திடல்
8) ஸ்ரீ யாதவ கண்ணன் - கரந்தை
9) ஸ்ரீ வெங்கடேச பெருமாள், கரந்தை
10) ஸ்ரீ யோகநரசிம்ஹ பெருமாள் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்


11) ஸ்ரீ கோதண்டராமர் - கொண்டிராஜபாளையம், கீழவாசல்.
12) ஸ்ரீ வரதராஜ பெருமாள் - கீழராஜவீதி
13) ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள், தெற்கு ராஜவீதி
14) ஸ்ரீ ராமஸ்வாமி, ஐயங்கடைத்தெரு (பஜார்)
15) ஸ்ரீ ஜனார்த்தன பெருமாள் - எல்லையம்மன் கோயில் தெரு



16) ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் - கோட்டை
17) ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் - கோட்டை
18) ஸ்ரீ ரங்கநாத பெருமாள் - மேல அலங்கம்
19) ஸ்ரீ விஜயராமஸ்வாமி - மேல ராஜவீதி
20) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மேல ராஜவீதி


21) ஸ்ரீ பூலோககிருஷ்ணன் - சகாநாயக்கன் தெரு
22) ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் - மானம்புச்சாவடி
23) ஸ்ரீ பிரசன்னவெங்கடேச பெருமாள் - மானம்புச்சாவடி
24) ஸ்ரீ வேணுகோபாலஸ்வாமி - கொள்ளுபேட்டைத் தெரு, கீழவாசல்


கடந்த திங்கட்கிழமை (4/5) நடைபெற்ற
கருடசேவை வைபவத்தினைத் தொடர்ந்து
நேற்று செவ்வாய்க்கிழமை (5/6) காலையில்
நவநீத சேவை எனப்படும் - வெண்ணெய்த்தாழி உற்சவம்
நடைபெற்றது...




இந்நிகழ்வில் - மாநகரிலுள்ள 15 திருக்கோயில்களிலிருந்து
வெண்ணெய்த்தாழி பல்லக்குகள் புறப்பாடாகின..




நான்கு ராஜவீதிகளிலும் பெருந்திரளான பக்தர்கள் கூடிநின்று
பெருமாளைத் தரிசித்து இன்புற்றனர்...


இன்று வெண்ணாற்றங்கரையிலுள்ள
திவ்யதேசத் திருக்கோயில்களில்
தீர்த்தவாரி நடைபெறுவதுடன்
கருடசேவைத் திருவிழா இனிதே நிறைவடைகின்றது...

வைபவத்தின் நிகழ்வுகளை
அழகிய படங்களாக காணொளியாக வழங்கிய
திரு.தஞ்சை ஞானசேகரன் அவர்களுக்கு
மனமார்ந்த நன்றி...
***


குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெரிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா எனும் நாமம்.. (0956)
-: திருமங்கை ஆழ்வார் :- 

ஓம் 
நமோ நாராயணாய.. 
ஃஃஃ

28 கருத்துகள்:

  1. குட்மார்னிங். கருடசேவை மகோத்சவ காட்சிகளைத் தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
  2. துரை செல்வராஜூ ஸார்...

    http://www.dinamalar.com/news_detail.asp?id=2035028

    இந்தச் செய்தியை வாசித்தீர்களா? மன்னன் வருகைக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அப்படிச் சொல்லிவிடுவார்களே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      இப்படி ஏதாவது கிளப்பி விடுவார்களோ... என்று நானும் யோசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்...

      நீக்கு
  3. அன்பின் ஜி
    விளக்கங்களும், படங்களும் வழக்கம்போல் அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
  4. பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பக்தர்களும், கோயில் ஊழியர்களும் கருடசேவையை எப்படியோ நடத்தி வருகின்றனர். எளிமையும், அழகும் பொருந்திய திருவிழா. எல்லாப் படங்களும் அருமை.

    ஸ்ரீராம் கொடுத்த சுட்டியைக் காப்பி செய்து பார்க்க முடியலை. உங்க பக்கத்திலும் கில்லர்ஜி பக்கத்திலும் இந்த ஆப்ஷன் இல்லை! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா அக்கா... எங்கள் தளத்தின் பின்னூட்டத்திலும் (இந்டட்ரைய பதிவு) இதே சுட்டி, இதே கேள்வி இருக்கிறது!

      நீக்கு
    2. /// பக்தி ஒன்றையே பிரதானமாகக் கொண்டு.... - கீதா S..///

      உண்மை தான் அம்மா...
      ஒருவேளை பூஜைக்கும் தவிக்கின்ற கோயில்கள் பல உள்ளன...

      மனமும் பணமும் உடையவர்கள்
      இயன்ற அளவுக்கு உதவினர் ஆயின்
      புண்ணியர் ஆவர்....

      அந்தப் பெருமாளே இதற்கு அருள் புரிதல் வேண்டும்...

      நீக்கு
  5. பெருவுடையார் கோயிலில் இடி விழுந்து முகப்பு கோபுரத்தின் சிற்பம் உடைந்தது குறித்தே இங்கே கவலைப்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்.. தங்களுக்கு நல்வரவு...
      இதற்கு முன்னும் இப்படியெல்லாம் நடந்திருக்கின்றன...
      வீண் கவலை தவிர்த்து இறைவனைப் பணிந்திருப்போம்...

      நீக்கு
  6. சிறப்பான தரிசனம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. கருடசேவை கண்டு அங்கு கொடுத்த நீர் மோர் பருகி , சடாரி பெற்று ஆனந்தம் அடைந்தேன்.

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  9. படங்கள் மிக அழகு.மூன்றுகோவில்கள் சேர்ந்து ஒரே தலம் வெண்ணாற்று கரையில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      திவ்யதேசத் திருக்கோயில்கள் மூன்றும் அருகருகே அமைந்துள்ளன..

      இப்போது மூன்று கோயில்களிலும் மாலை வேளைகளில் பட்டாச்சார்யார்கள் சேவார்த்திகளுக்காக இருக்கின்றார்கள்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. மாட்டு வண்டியிலே வீதி உலா கண்ணைக் கவருது... அழகான சோடினைகள்.

    பதிலளிநீக்கு
  11. என்ன அழ்கான வீதி உலா. கண்ணைக்கவரும் படங்கள், இனிய விவரணங்கள் மிக்க நன்றி ஐயா..

    கீதா: அண்ணா நேற்று வர முடியாமல் போய்விட்டது. காலையில் தளம் திறக்கவில்லை அப்புறம் வந்து பார்க்க முடியாமல் போய்விட்டது...துளசி அனுப்பிய கமென்டையும் போட முடியாமல் இப்பத்தான் போட்டிருக்கேன்..

    எல்லா படங்களும் அருமை....எங்கள் ஊர் சித்திரைத் திருவிழா 10 நாட்களில் 5 ஆம் நாள் கருட சேவையை நினைவூட்டுகிறது. அலங்காரம் செமையா இருக்கும்...சிறிய ஊர் தான் இருந்தாலும் அன்று மட்டும் இரவு 2 மணியாகிடும் வீதி உலா வந்து மீண்டும் கோயிலுள் சென்றிட...ஒவ்வொரு இடத்திலும் நிறைய நேரம் நின்று நாதஸ்வர இசைக்கலைஞர்கள் கிருதிக்ளை விஸ்தாரமாக வாசித்திட....என்று அருமையா இருக்கும் அன்று மட்டும் ஸ்பெஷல் நாதஸ்வர கலைஞர் வாசித்தல் இருக்கும்...

    தகவலும் படங்களும் அருமை...வெண்ணைத் தாழி பல்லாக்கு எங்கள் ஊரில் ஏழாம் திருநாள்...மாட்டுவண்டி ஆஹா...அனைத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  12. வீதி உலா தரிசனம் கண்டு வணங்கினேன்....எப்படி இருக்கிறீர்கள் ஐயா...நிறைய நாட்கள் ஆகி விட்டன...

    பதிலளிநீக்கு
  13. சென்ற வருடம் சென்றேன். இந்த வருடம் போகாத குறையை உங்கள் பதிவு நிறைவு செய்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  14. கருடசேவையைத் தரிசனம் செய்துகொண்டேன். வெண்ணெய்த்தாழி உற்சவமும் சிறப்பு. பகிர்வுக்கு நன்றி.

    'பெற்ற தாயினும் ஆயின செய்யும் சொல் நாராயணா என்ற மந்திரம்' அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..