நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், செப்டம்பர் 29, 2015

உணவின் கண் உயிர்

உணவின் கண் உயிர்!..

கண் எனும்போது - இடம் என்றும் பொருள் கொள்ளலாம்..

அதன் முழுப் பொருளை -

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)

- என்ற குறள் விளக்கும்..

அதன்படி - உண்ணத் தக்க பொருள்களிடத்தில் உயிர் விளங்குகின்றது..

இன்று -

உலக இதய நாள்!..


எண் சாண் உடலில் எத்தனை எத்தனையோ உறுப்புகள் சிறந்து விளங்குகின்றன..  சொல்லித் தெரியவேண்டியதில்லை..

அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படுபவை - இதயமும் கண்களும்..

ஒவ்வாதவற்றால் கலங்குபவை - இதயமும் கண்களும்!..

கண்கள் சிறந்து விளங்கினால் - அகமும் புறமும் சிறந்து விளங்கும்..

அதே போலத்தான் - இதயத்திற்கும்!..

புகழ்ச்சியான - மகிழ்ச்சியான வேளைகளில் -

இதயம் திறந்தது!.. - என்றும்

கண்கள் திறந்தன!.. என்றும் உரைப்பது உலகியல்..

வாழும் உலகினில் நம் வசப்படும் பொருள்களைக் கண் கொண்டு நோக்கினால் இதயம் வசப்படும்.. வளப்படும்..

எண்ணங்களின் பிறப்பிடம் - மூளை!..

ஆனாலும், காலகாலமாகக் குறிப்பது இதயத்தையே!..

அந்த இதயமும் - கண்மூடித் திறக்கும் பொழுதிற்குள் தன் செயலை நிறுத்திக் கொண்டு அமைதியில் ஆழ்ந்து விடுகின்றது..

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தனம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே!..
(திருமந்திரம்)

விருப்பமானவற்றை சமைக்கச் சொன்னார்.. விரும்பியவாறே உண்டு மகிழ்ந்தார்.. மனையாளொடும் கூடியிருந்தார்.. இடப் பக்கம் இதயம் வலிக்கின்றதே.. என்று துடித்தார்.. சற்றே படுப்போம் என்று தலை சாய்த்தார்.. சாய்த்த தலையை நிமிர்க்காமல் போய்ச் சேர்ந்தே விட்டார்..

இது திருமூலர் காட்டும் வாழ்க்கை நிலையாமை..

நூற்றுக்கு நூறு மாரடைப்பு!..

என்ன நடந்தது.. எப்படி இருக்கின்றது!.. - கேட்டுத் தெரிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விடுகின்றது..

இப்படித் தடாலடியாய் வரும் முடிவையும் அப்பால் நிறுத்தி வைக்க முடியும்!.. - என்பது இன்றைய நவீன மருத்துவம்..

ஆனால் -

இதற்கெல்லாம் வேலையே இல்லாமல் செய்யலாம்..
நாம் மேற்கொள்ளும் சரியான உணவு பழக்கத்தால்!..

மரணத்தை வெல்ல யாராலும் முடியாது தான்!..

ஆனால், நோயை வெல்ல முடியும் .. குறைபாடுகளைக் கடக்க முடியும்..

இன்றைக்கு,  எல்லாமே - அவசரமாக முடிய வேண்டும்.. அல்லது முடிக்க வேண்டும்.. - என்ற நிலையில் தான் அணுகப்படுகின்றன..

இந்த மனோபாவம் முற்றிலும் தவறு..

இதுவே - இதயம் பலவீனமாவதன் முதற்படி..

பதறாத காரியம் சிதறாது!.. - என்பதும்,

பொறுத்தார் பூமி ஆள்வார்!.. - என்பதும் , நாம் நமது பதற்றத்தைக் கைவிட வேண்டும் என்பதற்காகத்தான்..

இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்னும் பதற்றமே - பாதாளத்தில் தள்ளுகின்றது..

நாளும் யோகா, தியானம் அமைதியான இறைவழிபாடு இவைகளால் பதற்றத்திலிருந்து இதயத்தை மீட்டெடுக்கலாம்..

நவீனமான நாகரிக உலகத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு உழைப்பு - என்பதே அற்றுப் போனது..

குளுகுளு அறையில் அமர்ந்து கொண்டு தளுக்காக செய்யும் வேலைகள் உடல் உழைப்பே அல்ல..

மாரடைப்பு வருவதற்கான காரணிகளுள் முக்கியமானது - ஒரே இடத்தில் பலமணி நேரம் அமர்ந்து பணி புரிவது..

ஆனாலும் - அப்படிப்பட்ட வாழ்க்கை முறைதான் அமைந்து விடுகின்றது..

பேருந்தின் நடத்துனரை விடவும் - மாரடைப்பினால் பாதிக்கப்படுபவர் - ஓட்டுனரே!..

இதற்குக் கண் முன்னே - சாட்சிகளும் காட்சிகளும் ஏராளம்..

நாள் தோறும் - காலாற நடப்பது, எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, ஓடியாடி விளையாடுவது - இவையெல்லாம் உடலுக்கும் இதயத்திற்கும் நன்மை தரக் கூடியவை என்கின்றனர் மருத்துவர்கள்..

சைக்கிள் ஓட்டுவதும் நீந்திக் குளிப்பதும் சிறந்த உடற்பயிற்சிகள்..

இதய நோயின் இணையற்ற கூட்டாளிகள் - மதுவும் புகையும்..

ஆரோக்கியம் வேண்டுவோர் - இவற்றிலிருந்து ஒதுங்குவது மிக மிக அவசியம்..

குடும்பத்தின் பாரம்பர்யத்தில் மாரடைப்பு வரக்கூடும் என்றாலும் - அதனை வெல்வது எளிதே!..

அடுத்தபடியாக - உணவுப் பழக்க வழக்கம்!..

இதில் நம்மவர்களை அடித்துக் கொள்ளமுடியாது..

கண்ட நேரத்திலும் கண்டவற்றை தின்று தீர்ப்பதில் வல்லவர்கள்..

ஒரு காட்சி..

நெடுஞ்சாலைகளில் - இரவுப் பயணம் செல்லும்போது வழக்கமாக குறிப்பிட்ட இடத்தில் உணவுக்காக - பேருந்துகளை நிறுத்துவார்கள்..

பகலில் அந்த இடத்தைப் பார்த்தால் மூன்று நாட்களுக்குச் சோறு செல்லாது..

இரவுப் பயணமாக செல்லும் போது நள்ளிரவுப் பொழுதில் பரோட்டாவையும் மட்டரகமான புலால் உணவையும் -

காணததைக் கண்ட மாதிரி தின்று மகிழ்பவர் பல நூறு பேர்.. ஆனால்,

பொழுது விடியும் முன் - ஊருக்குச் சென்று சேரும் முன்பாகவே அவர்கள் படும் அவதி சொல்லி மாளாது..

ஏனிந்த அவலம்!..

நாக்கிற்கு அடிமையானது தான்!..

நாக்கை நம் வசப்படுத்தினால் - நானிலத்தையே வசப்படுத்தலாம்!..

துரித உணவு எனும் பேரில் - இன்று விற்கப்படும் எல்லாமே ஆபத்தானவை..

சமீபத்தில் நூடுல்ஸ்களுக்கு எதிராக பிரச்னை!..

அளவுக்கு அதிகமாக வேதிப் பொருட்கள் இருக்கின்றன!.. - என்று கூறியதற்கு -

அளவுக்கு அதிகமாக வேதிப் பொருட்கள் இல்லை!.. - என்று தயாரிப்பாளரின் தரப்பில் மறுத்திருக்கின்றார்கள்..

அதிகமாக இல்லை என்றுதான் கூறுகின்றார்களே -  தவிர,

வேதிப்பொருட்களே இல்லை!.. - என அவர்கள் கூறவில்லை..

ஏனெனில் - வேதிப்பொருட்களின் சேர்க்கை இல்லை எனில் நூடுல்ஸ்களும் இல்லை..


இதைப் போன்றே பலமாதங்கள் வைத்திருந்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு இரசாயனங்களின் சேர்க்கையுடன் தான் பலவகையான பொருட்கள் தயாராகி சந்தைக்கு வருகின்றன..

பிஸ்ஸா (Pizza), ஹாம்பர்கர் (Hamburger), சாசேஜஸ் (Sausages) , நூடுல்ஸ் (Noodles)
எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு ( Finger Fries) சாக்லேட், பிஸ்கட், இனிப்பு வகைகள், குளிர்பானங்கள் மற்றும் செயற்கை பழச்சாறுகள்

- என, எல்லா வகை ஆயத்த உணவு வகைகளும்,

உண்பவரை மெல்ல மெல்ல நோயாளியாக்குவதில் போட்டி போடுகின்றன..


White Flour, White Butter, White Sugar - ஆகியன தவிர்க்கப்பட வேண்டியவை..

சுவையூட்டிகள், நிறமூட்டிகள், மணமூட்டிகள், திடப்படுத்திகள் - எல்லாமே வேதிப்பொருட்கள்..

இவைகள் நிறைந்திருக்கும் உணவு வகைகள் - நாளாவட்டத்தில் மனிதனை மரணத்தின் எல்லைக்குக் கொண்டு செல்கின்றன என்பது மேலை நாட்டிலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது..

Monosodium Glutamate (MSG)

Monosodium glutamate (MSG) is a flavor enhancer commonly added to Chinese food, canned vegetables, soups and processed meats. The Food and Drug Administration (FDA) has classified MSG as a food ingredient that's "generally recognized as safe," but its use remains controversial. For this reason, when MSG is added to food, the FDA requires that it be listed on the label.
MSG has been used as a food additive for decades. Over the years, the FDA has received many anecdotal reports of adverse reactions to foods containing MSG. These reactions — known as MSG symptom complex — include:
  • Headache
  • Flushing
  • Sweating
  • Facial pressure or tightness
  • Numbness, tingling or burning in the face, neck and other areas
  • Rapid, fluttering heartbeats (heart palpitations)
  • Chest pain
  • Nausea
  • Weakness
However, researchers have found no definitive evidence of a link between MSG and these symptoms. Researchers acknowledge, though, that a small percentage of people may have short-term reactions to MSG. Symptoms are usually mild and don't require treatment.

The only way to prevent a reaction is to avoid foods containing MSG.
Thanks To:  http://www.mayoclinic.org/

இதை சொன்னாலும் நம்மவர்கள் புரிந்து கொள்வதில்லை..

நமக்கொன்றும் வராது!.. - என்பதுதான் அலட்சியமான பதில்..

தக்காளி, காரட், வெங்காயம், பூண்டு - போன்றவற்றை Dehydration முறையில் உலர்த்தி பலவகையான உணவுப் பொருட்களிலும் சேர்க்கின்றார்கள்..

அப்படி சேர்க்கும் போது - More Vitamins and Minerals Enriched - இயற்கையான சுவையுடன்!.. -  என்று விளம்பரம் செய்கின்றார்கள்..

அந்த பொருளிற்கு, ஆடல் பாடல் - என கூடுதல் விளம்பர அம்சங்கள்!..

செயற்கை பானங்களில் வெள்ளைச் சர்க்கரை அளவு
அதிகமான வைட்டமின்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று இவர்கள் சொல்லும் போதே -

இயற்கை நிறைத்துத் தருகின்ற சத்துக்களை ஏன் அழிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா!..

நம்நாட்டு உணவு வகைகளே - நமக்கு ஏற்றவை!..

ஆனாலும்,

அரிசி ஆபத்தானதா!.. - என்று காலையிலேயே பீதியைக் கிளப்புகின்றது வார இதழ் ஒன்று..

இரு வாரங்களுக்குப் பின் அதே இதழில் -

அரிசியில் நிறைந்திருக்கும் அற்புதம்!.. - என்று ஆரவாரம்!..

காசு கொடுத்து அந்த இதழினை வாங்கிப் படிப்பவன் பைத்தியக்காரன் ஆகிவிடுகின்றான்..

ஆண்மைக்கு ஆப்பிரிகாட்!.. பெண்மைக்கு அவகாடோ!..
சிவப்பழகுக்கு செர்ரி!.. சிகையழகுக்கு ஸ்ட்ராபெர்ரி!..
அதிலே இது இருக்கின்றது!.. இதிலே அது இருக்கின்றது!..

என்றெல்லாம் - நம்மைப் பார்த்துக் கதறிக் கண்ணீர் வடிக்கின்றார்கள்..

நாம் நலமுடன் வாழ்வதற்காக என்று - முதலைக் கண்ணீர்!..

நம்மிடம் இருக்கும் காசை - வார, மாத இதழ்களின் மூலம் கறக்கின்றார்கள்..

நமக்கு நாமே தெளிவு பெற வேண்டும்..

விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல் -
பாரம்பர்ய உணவு வகைகளை மீறாமல் -
நம் உடல் நலனை நாமே காத்துக் கொள்ளவேண்டும்!..

கூடுமானவரை - வெளியில் உண்பதைத் தவிர்த்தல் நலம்..

சில வருடங்களுக்கு முன், இயற்கையானது - நலமானது என்று சொல்லி
மாலை வேளைகளில் மூலிகைச் சாற்றின் விற்பனை ஆரம்பமானது..

மக்களும் விரும்பி வாங்கிக் குடித்தார்கள்..

இப்போது, அதிலும் கலப்படக்காரர்கள் கைவரிசையைக் காட்டி விட்டார்கள்..

ஆகையினால் - நம் வீட்டு உணவுகள் தான் நமக்குப் பாதுகாப்பானவை..


பசுமை நிறைந்த காய்களாகட்டும் வகைவகையான பழங்களாகட்டும் - நம் நாட்டில் ஏராளமாக கிடைக்கின்றன..

தற்போது ரசாயனங்கள் இல்லாமல் - இயற்கை வேளாண் முறையில் பயிர்களை விளைவிக்கின்றனர்..

அரிசி என்றைக்குமே ஆபத்தானது அல்ல!..

வீணில் உண்டு களித்திருப்பவருக்கு எல்லாவகை உணவுகளுமே ஆபத்து தான்!..

கைக்குத்தல் அரிசியும் - சிறு தானியங்களும் மீண்டு வருகின்றன..

கம்பும் கேழ்வரகும் சோளமும் பச்சைப் பயறும் உளுந்தும் காராமணியும்
நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவை..

இளநீரும் பதநீரும் கரும்புச்சாறும் - எல்லா வயதினருக்கும் உகந்தவை..

கருப்பட்டியும் சர்க்கரையும் என்றும் இனியவை..
தேங்காய்ப்பாலுக்கு இணை ஏதாவது உண்டா!..

இவற்றை ஒதுக்கி வாழ முற்படவேண்டாம்!..

நாம் இவற்றை ஆதரித்தால் - நம்மவர்களின் மனம் குளிரும்..
விவசாயிகளின் வாழ்வாதாரமும் உயரும்..


தாயின் அன்பைப் போல தயாரானது!.. - என்று விளம்பரம் செய்கின்றான்..

தாயின் அன்பைப் போல சமைப்பதற்கு இவன் யார்?..
அன்பைப் பொழிவதற்குத் தாயால் தான் இயலும்!..

அவளுக்கு அடுத்து அன்புக்குரிய மனையாள்!..
இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை - என்பது வேத வாக்கு!..

இதோ - பழந்தமிழரின் இனிய இல்லறம்..
கூடலூர்க் கிழார் இயற்றிய குறுந்தொகைப் பாடல்..

முளிதயிர் பிசைந்த காந்தள்மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந்து இட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே..
(நன்றி - முனைவர் மகேஸ்வரி பாலசந்திரன்)

நன்றாக உறைந்திருக்கும் தயிரைக் - காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரல்களால் பிசைந்தாள்.. அந்த விரல்களைக் கழுவ வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை அவளுக்கு..

உடுத்தியிருக்கும் சேலையிலேயே துடைத்துக் கொண்டாள்.. கண் நிறைந்த கணவனுக்கு சீக்கிரமாக பரிமாற வேண்டுமே - என்ற அவசரம்!..

குவளை மலரைப் போலும் நீல நிற விழிகள்.. அவற்றில் மை வேறு அப்பிக் கிடக்கின்றது..

அந்த விழிகள் கூட - அடுப்பினில் இருந்து எழுந்த புகையால் கலங்கித் தவிக்கின்றன..

மையேந்திய விழியாள் - மலரேந்திய நறுங்குழலை வாரி முடிந்து கொண்டு - அப்படியும் இப்படியுமாகத் துழாவி ஒருவழியாக புளிக்குழம்பைச் செய்து விட்டாள்..

பணி முடித்து வந்த கணவனின் மனம் மகிழும்படி - தலை வாழை இலை விரித்து அதில் அன்புடன் குழைத்து வைத்த அடிசிலையும் புளிக்குழம்பையும் இட்டாள்..

மழலையின் சிறு கை அளாவிய கூழே தித்தித்திருக்கும் போது - 
மங்கை நல்லாள் ஆக்கி அளித்த அடிசில் - அமுதம் போல இனித்திருக்காதா!..

அப்படித்தான் இருந்தது - அவனுக்கும்!..

தகைகொண்ட அணங்கு தன்னிலையில் இட்ட அடிசிலென்று அகம் மகிழ்ந்தான்..

இனிது.. இனிது!.. - என்று முகம் மலர்ந்தான். முறுவலுடன் உண்டான்..

அவனது அகமும் புறமும் மலர்வதை குறிப்பால் உணர்ந்து மகிழ்ந்தாள் -நுண்ணியலாள் ஆன பெண்ணின் நல்லாள்..

இப்படி,

தீம்புளிப்பாகர் செய்தளித்த சேயிழையின் செந்தளிர்க்கரங்களுக்கு, வைர வளையும் முத்து வளையும் அணிவித்து ஆரத்தழுவி மகிழ்ந்தான் - என்பது வேறு கதை..

இனிய உறவுகள் இளமைக்கு நலம்!..
இனிய உணவுகள் இதயத்திற்கு நலம்!.. 

உலக இதய நாளின் குறிக்கோள் - வருமுன் காப்போம்!. - என்பதே..

அவ்வண்ணம் பேணி - வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்!..
நம்மைச் சேர்ந்தவர்களையும் நலமுடன் வாழ வைப்போம்!..

வாழ்க நலம்!.. 
* * *

உணவின் கண் உயிர் 
- எனும் இப்பதிவு, வலைப்பதிவர் சந்திப்பு 2015 
நடத்தும் மின்னிலக்கியப் போட்டிக்காக எழுதப்பட்டது..

வகை - 2
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு
(நம்மையும் காத்து நம்மைச் சேர்ந்தவரையும் காத்தல்)

இக்கட்டுரை எனது சொந்தக் கற்பனையே..
இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல..
போட்டி முடிவு வெளியாகும் வரை வேறெங்கும் வெளிவராது..
- என்று, இதன் மூலம் உறுதியளிக்கின்றேன்..

அன்புடன்,
துரை செல்வராஜூ..  
* * *

21 கருத்துகள்:

  1. தாயின் அன்பை எதற்கெல்லாம் கம்பேர் செய்கிறாங்க :(வியாபாரத்துக்கு எதையும் செய்வார்கள்..அருமையான விழிப்புணர்வு கட்டுரை அண்ணா .போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      அன்பின் இனிய வாழ்த்துரைக்கு நன்றி..

      வாழ்க நலம்...

      நீக்கு
  2. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. தளத்தில் இணைத்தமைக்கு நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் நண்பரே! தங்கள் வரிகளை படிக்கும்போது புஷ்பா தங்கதுரை அவர்களின் வரிகளை படிப்பது போல இரு வரிகளாக அருமை!! எல்லோரும் அறியவேண்டிய அவசியமான விழிப்புணர்வு!! வாழ்த்துக்கள் நன்றி!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஏதோ - நானறிந்தவற்றை என்னளவில் எழுதுகின்றேன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பயனுள்ள படைப்பு ஐயா
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      வலைத்தளத்தில் கண்டேன்.. கருத்துரையும் இட்டேன்..
      தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. அருமை வெற்றி பெற வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. ஆஹா அருமை,
    என் கண்களும் பனித்தன, தங்கள் பதிவில் என் தளமும்,,,,,,,,,,
    நன்றி நன்றி,,,,,,,,, வேறு என்ன சொல்ல,,,,,,,,
    ஆமா என்னம்மா இப்படி பன்றிங்கேளேம்மா,,,,,,,,,
    இப்பயெல்லாம் எழுதினா நாங்க என்ன பன்றது?? ம்ம்,,,,,
    இல்ல சும்மா சொன்னேன், இன்னும் இது போல் எழுதுங்கள் நிறைய, நாங்கள் கற்க,
    போட்டியில் வெற்றிபெற அன்பின் வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      குறுந்தொகைப் பாடல் - தங்கள் தளத்தில் இருந்து கிடைத்தது..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. அன்பினஅ ஜி அருமை நிறைய விடயங்களை தொகுத்து அழகான கட்டுரையை தந்தமைக்கு நன்றி போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      பணிச் சுமைகளுக்கு இடையேயும் - தங்களின் வருகை பிரமிப்பு..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  10. அருமையான பதிவு சார். வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  11. சிறப்பானதோர் கட்டுரை.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..