நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, பிப்ரவரி 20, 2026

திருப்புகழ்

 நாடும் வீடும்

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
பொது

தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ... தனதான

ஏடுமல ருற்ற ஆடல்மத னுய்க்கு
     மேவதுப ழிக்கும் ... விழியாலே

ஏதையும ழிக்கு மாதர்தம யக்கி
     லேமருவி மெத்த ... மருளாகி

நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
     நாரியர்கள் சுற்ற ... மிவைபேணா

ஞானஉணர் வற்று நானெழுபி றப்பும்
     நாடிநர கத்தில் ... விழலாமோ..

ஆடுமர வத்தை யோடியுடல் கொத்தி
     யாடுமொரு பச்சை ... மயில்வீரா

ஆரணமு ரைக்கு மோனகவி டத்தில்
     ஆருமுய நிற்கு ... முருகோனே

வேடுவர்பு னத்தில் நீடுமித ணத்தில்
     மேவியகு றத்தி ... மணவாளா

மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி
     மீளவிடு வித்த ... பெருமாளே..
:- அருணகிரிநாதர் :-
 நன்றி கௌமாரம்

முருகா  முருகா
முருகா  முருகா
***

வியாழன், பிப்ரவரி 19, 2026

ஞானசபை

   


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
 வியாழக்கிழமை

வடலூர் ஞானசபை
உருவான வரலாறு


சித்தர் குழுவில்
கிடைத்த காணொளி


அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெரும் ஜோதி
***

திங்கள், பிப்ரவரி 16, 2026

கதம்ப இட்லி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி
திங்கட்கிழமை

கதம்ப இட்லி


தேவையான பொருள்கள் :-
வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு

பாசிப்பயறு 200 கி
கேரட், பீன்ஸ், சின்ன வெங்காயம், முட்டைக் கோஸ் இலைகள், பூண்டு, இஞ்சி அனைத்துமாக 200 அல்லது 250 கி

மல்லித் தழை சிறிது
கறிவேப்பிலை ஒரு இணுக்கு
கல் உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

ஒருநாள் முன்னதாக பச்சைப் பயறை ஊற வைத்து முளை கட்டி வைக்கவும்..

வழக்கம் போல வீட்டிற்கான இட்லி மாவு தயாராக இருக்கட்டும்..

முளை கட்டி வைத்திருக்கின்ற பச்சைப்  பயறை மிக்ஸியில் இட்டு சுழற்றி எடுத்து -  இட்லி மாவுடன் கலந்து கொள்ளவும்..

கேரட், பீன்ஸ், முட்டைக் கோஸ் இலைகள், சின்ன வெங்காயம், 
பூண்டு இஞ்சி இவற்றையும்
மல்லித் தழை கறிவேப்பிலை இலைகளையும்  மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும்..

இவை அனைத்தும் 250 கிராமிற்கு மிகாமல் இருப்பது நல்லது ....


இவற்றையும் இட்லி மாவுடன் நன்றாகக் கலந்து தேவை எனில் உப்பு சேர்த்து  இட்லித் தட்டில்   ஊற்றி பக்குவமாக அவித்தெடுத்து 
வற மிளகாய் இல்லாத தக்காளிச் சட்னி தேங்காய் சட்னி இவற்றுடன் பரிமாறவும்.

இலை மற்றும் காய் கிழங்குடன் அவிக்கப்பட்ட  உணவாதலால் இது உடலுக்கு மிகவும் இதமானது.. 

பச்சைப் பயறை தோலுடன் அரைத்திருப்பதால் கூடுதலாக நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்..

நம்முடைய நலம்
நம்முடைய கையில்

முருகா முருகா
முருகா முருகா
***

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026

சிவராத்திரி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மாசி
 ஞாயிற்றுக்கிழமை

இன்று மகா சிவராத்திரி


தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம்
ஆயம் ஆய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே..2/50
-: ஸ்ரீ திருஞானசம்பந்தர் :-

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ 
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ 
ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்து நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.. 6/95
-: ஸ்ரீ திருநாவுக்கரசர் :-


பண்ணிடைத் தமிழொப்பாய்
பழத்தினிற் சுவையொப்பாய்
கண்ணிடை மணியொப்பாய்
கடு இருட் சுடரொப்பாய்
மண்ணிடை அடியார்கள்
மனத்திடர் வாராமே
விண்ணிடைக் குருகாவூர்
வெள்ளடை நீயன்றே..7/29
-: ஸ்ரீ சுந்தரர் :-


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே..
-: ஸ்ரீ மாணிக்கவாசகர் :-


கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே..
-: ஸ்ரீ பட்டினத்தடிகள் :-

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

வெள்ளி, பிப்ரவரி 13, 2026

பத்ம மலர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
மாசி
வெள்ளிக்கிழமை


அகல்யா த்ரௌபதி ஸீதா தாரா மண்டோதரி ததா .
பஞ்சகன்யா ஸ்மரேந் நித்யம் மஹாபாதக நாசனம்.

பழியேதும் இல்லாத
பதுமமலர் போற்றி
அழியாத கன்னிகை
ஐவரும் போற்றி..

ஓம் சக்தி ஓம்
***



வியாழன், பிப்ரவரி 12, 2026

புதுநெல்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 வியாழக்கிழமை



இலங்கை
நல்லூர் திருத்தலத்தில்
அறுவடை மகோத்சவம்

காணொளிக்கு
 நன்றி


நற்றுணை வருவாய்
திருவடி சரணம்
நல்லூர் கந்தா
சரணம் சரணம்
***

புதன், பிப்ரவரி 11, 2026

விசாகம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 புதன்கிழமை

தை விசாகம்
கடந்த திங்களன்று..


அன்றைய நாள்
அறுபத்து மூவருள் ஒருவரான
திருநீலகண்ட குயவனாரும் அவரது மனைவியாரும் இளமை நலம் எய்தி சிவ தரிசனம் பெற்ற நாள்...

தஞ்சை கரந்தையில் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் கோயில் திருக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருநீலகண்டர் திருமடத்தில் ஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது..

தீர்த்தவாரியில் கலந்து கொண்டு நீராடும் பேறு எளியேனுக்கும் கிடைத்தது..

இன்றைய பதிவில்
தீர்த்தவாரியின் சில காட்சிகள்..















திருநீலகண்டத்து
குயவனார்க்கடியேன்

ஓம் சிவாய நம
***

செவ்வாய், பிப்ரவரி 10, 2026

வீரட்டம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 செவ்வாய்க்கிழமை

திருக்கண்டியூர்
வீரட்டம்

ஸ்ரீ  மங்களாம்பிகை  உடனாகிய வீரட்டானேசுவரர்  திருக்கோயில்

அகந்தையுடன் இருந்த ஸ்ரீபிரம்ம தேவன் தண்டிக்கப்பட்ட தலம்...

ஸ்ரீ பைரவர் தோற்றமுற்ற திருத்தலம்..

மேற்கு நோக்கிய திருக்கோயில்..

இக்கோயிலின் எதிர்த் திசையில் தான் திவ்ய தேசம்...

ஸ்ரீ பிரம்ம தேவனும் சரஸ்வதியும் தனி சந்நிதியில் விளங்குவது சிறப்பு.











மூலஸ்தானத்தைச் சுற்றியிருக்கின்ற உள்நாழி கண்டறியப்பட்டு கண்ணாடிப் பலகைகளால் மூடப்பட்டுள்ளது



வெளித் திருச்சுற்றில் 
ஸ்ரீ பத்ர காளியம்மன் சந்நிதி


 தஞ்சை -  திருவையாறு வழித்தடத்தில் 7 கிமீ தொலைவு...

ஓம் நம சிவாய
***

திங்கள், பிப்ரவரி 09, 2026

திருக்கண்டியூர் 1

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 திங்கட்கிழமை

திருக்கண்டியூர்
திவ்ய தேசம்

ஸ்ரீ  கமலவல்லித் தாயார் உடனாகிய ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில்



நேற்று காலை 9:30 க்குப் பிறகு 10:00 மணியளவில்
திருக்குட முழுக்கு நடைபெற்றது.. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்திருக்கின்றனர்..


ஸ்ரீ கமல விமானம்

ஸ்ரீ தாயார் சந்நிதி

ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி

ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபூஜை செய்தல்

கோபூஜை


வைபவம் முடிவுற்ற பிறகே நான் அங்கு செல்ல முடிந்தது..

ஸ்ரீ ஆழ்வாராதிகள்

பதிவின் படங்கள்
கூட்டம் குறைந்த பிறகு எடுக்கப்பட்டவை..

ஓம் ஹரி ஓம்
***

ஞாயிறு, பிப்ரவரி 08, 2026

விஸ்வநாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
**

இன்று
தை 
 ஞாயிறு

ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம்


கங்கா தரங்க ரமணீய ஜடா கலாபம்
கௌரி நிரந்தர விபூஷித வாம பாகம்
நாராயண ப்ரிய அனங்க மதாபஹாரம்
வாரணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 1

வாசாம கோசர மநேக குண ஸ்வரூபம்
வாகீச விஷ்ணு ஸுரஸேவித பாதபீடம் 
வாமேந விக்ரஹ வரேண களத்ர வந்தம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 2

பூதாதிபம் புஜகபூஷண பூஷிதாங்கம்
வ்யாக்ரா ஜிநாம் பரதரம் ஜடிலம் த்ரிநேத்ரம்
பாசாங் குசாபய வரப்ரத சூலபாணிம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 3

ஸீதாம்சு சோபித கிரீடவிராஜ மாநம்
பாலேக்ஷணா நலவிசோஷித பஞ்சபாணம் |
நாகாதிபா ரசித பாஸுர கர்ணபூரம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 4

பஞ்சாநநம் துரிதமத்த மதங்க ஜாநாம்
நாகாந்தகம் தநுஜ புங்கவ பந்நகாநாம் 
தாவாநலம் மரணசோக ஜராடவீநாம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 5

தேஜோமயம் ஸகுண நிர்குண மத்விதீய
மானந்த கந்தமபராஜித மப்ரமேயம் 
நாகாத்மகம் ஸகல நிஷ்கலமாத்ம ரூபம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 6

ராகாதி தோஷரஹிதம் ஸ்வஜ நாநுராக
வைராக்ய சாந்தி நிலயம் கிரிஜா ஸஹாயம் 
மாதுர்ய தைர்ய ஸுபகம் கரளா பிராமம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 7

ஆசாம் விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தாம்
பாபே மதிம் ச ஸுநிவார்ய மந: ஸமாதௌ
ஆதாய ஹ்ருத்கமல மத்யகதம் பரேசம்
வாராணஸீ புரபதிம் பஜ விஸ்வநாதம் 8

வாராணஸீபுரபதே: ஸ்தவநம் சிவஸ்ய
வ்யாக்யாத மஷ்டகமிதம் படதே மனுஷ்ய: |
வித்யாம் ச்ரியம் விபுல ஸௌக்ய மனந்தகீர்த்திம்
ஸம்ப்ராப்யதே ஹவிலயே லபதே ச மோக்ஷம் 9

விச்வநாதாஷ்டகமிதம் ய: படே சிவஸந்நிதௌ
சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே 10

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்

சிவாய
திருச்சிற்றம்பலம்
***