நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 12
வெள்ளிக்கிழமை
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மத நால்வாய்
ஐங்கரன் தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்
எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி
நண்ணும் பொற் பாதத்தில் நன்கு..
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும்
கலா மதியை நிகர் வதனமும் கருணை பொழி விழிகளும்
விண் முகில்கள் வெளிறெனக் காட்டிய கரும் கூந்தலும்
சங்கை இல்லாது ஒளிரும் மாங்கல்ய தாரணம் தங்கு
மணி மிடறும் மிக்க சதுர் பெருகு துங்க பாசாங்குசம்
இலங்கு கர தலமும் விரல் அணியும் அரவும்
புங்கவர்க்கு அமுது அருளும் மந்தர குசங்களும்
பொலியும் நவமணி நூபுரம் பூண்ட செஞ் சேவடியை நாளும்
புகழ்ந்துமே போற்றி என வாழ்த்த விடை மேல்
மங்களம் மிகுந்த நின் பதியுடன் வந்து அருள் செய்
வளர் திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி
சிவ சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..
சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்கசல
சுலோசன மாதவி சம்ப்ரம பயோதரி சுமங்கலி
சுலட்சணி சாற்றரும் கருணாகரி
அந்தரி வராகி சாம்பவி அமர தோத்ரி அமலை
செக சால சூத்ரி அகில ஆத்ம காரணி வினோத சய நாரணி
அகண்ட சின்மய பூரணி
சுந்தரி நிரந்தரி துரந்தரி வரை ராச சுகுமாரி
கௌமாரி உத்துங்க கல்யாணி புஷ்ப அஸ்திராம் புய
பாணி தொண்டர்கட்கு அருள் சர்வாணி
வந்தரி மலர்ப் பிரமராதி துதி வேத ஒலி வளர்
திருக் கடவூரில் வாழ் வாமி சுப நேமிபுகழ் நாமி
சிவசாமி மகிழ் வாமி அபிராமி உமையே!..
-: அபிராமிபட்டர் :-
ஓம் சக்தி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
சக்தியைப் பணிந்து சக்தியெல்லாம் பெறுவோம்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் அழகு. படங்களில் அன்னை அபிராமியை கண்டு வணங்கி கொண்டேன். அபிராமி பட்டர் பாடிய பாடலை நானும் பாடி அன்னையே மனதாற வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஓம் சக்தி ஓம்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா...
அன்னையவள் பாதம் பணிகிறோம்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்..
பாமாலை அருமை.
ஓம் சக்தி ஓம்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
அபிராமி பட்டர் அருளிய பாடலை பாடி அபிராமி அன்னையை வணங்கி கொண்டேன்.
பதிலளிநீக்குஓம் சக்தி ஓம்
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சி..
நன்றியம்மா..