நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 29, 2024

சப்த ஸ்தானம் 4


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 16
திங்கட்கிழமை

திருநெய்த்தானம்










மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டு சப்த ஸ்தான வைபவத்தின் போது எடுக்கப்பட்டவை..

இன்றைய பதிவில் -
கீழுள்ள  காணொளிகளில் பல்லக்குகளின் மாண்பினைக் காணலாம்.. 

தில்லை ஸ்தானம் எனப்படுகின்ற திருநெய்த்தானம் கோயிலில் நடைபெற்ற தீப ஆராதனைகள்..

திருவையாறு நண்பர்களால் வழங்கப்பட்டவை.. அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..





ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
    உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம்  ஆனாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
    திரு ஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***