நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 12, 2026

மார்கழி 28

  


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 28

குறளமுதம்

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.. 398

அருளமுதம்

ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த 
திருப்பாவை


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.. 28

ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த 
திருவெம்பாவை


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய். 18

ஸ்ரீ சுந்தரர்  அருளிச் செய்த 
தேவாரம்

திருக் கோளிலி
திருக்குவளை

நீள நினைந்தடி யேனுமை
  நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மட வாளவள்
  வாடி வருந்தாமே
கோளிலி எம்பெரு மான்குண்டை
  யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
ஆளிலை எம்பெரு மானவை
  அட்டித் தரப்பணியே.  7/20/1
நன்றி
பன்னிரு திருமுறை

ஓம் ஹரி ஓம்
நம  சிவாய
***

10 கருத்துகள்:

  1. மார்கழி 28 ஆ, நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஹரஹர மகாதேவா..  ஓம் நமோ நாராயணாய 

    இன்றைய திருப்பாவைப் பாடல்தான் ராஜாஜிக்கு குறையொன்றும் இல்லை பாடலை எழுத தூண்டுகோலாய் இருந்தது போலும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய திருப்பாவைப் பாடல்தான் ராஜாஜி அவர்களுக்கு குறையொன்றும் இல்லை பாடலை எழுத தூண்டுகோலாய் இருந்தது...

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

    நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்..

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. இதில் கூடியிருந்து - என்பதனை, ஊர்கூடித் தேர் இழுத்தல் என்பதாகவும்., கூடியிருந்தால் கோடி நன்மை என்பதைச் சொல்வதாகவும் கூடப் பொருள் கொள்ளலாம் என்று தோன்றும். எல்லோரும்சேர்ந்து செய்தல்...கூட்டுப்பிரார்த்தனை என்றும் கொள்ளலாம் என்றும் எனக்குத் தோன்றும்.

    மாணிக்கவாசகரின் இத்திருவெம்பாவையில் வரும் ஒரு வரியின் பொருளை நான் சமீபத்தில் ஒன்றில் பயன்படுத்தினேன்,

    கீதா

    பதிலளிநீக்கு
  5. "ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப் புடைத்து." நிச்சயமாக.

    திருப்பாவை, பாடி வணங்கினோம்.கண்மூடி தியானிக்கும் கோதை நாச்சியார் படம் அருமை.

    தேவாரம் பாடி திருக்கோளிலி பெருமானை வணங்கினோம்.

    ஓம் நமசிவாய.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..