நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 26
திங்கட்கிழமை
வைகாசி விசாகம்
தத்ததன தானத் ... தனதான
இத்தரணி மீதிற் ... பிறவாதே
எத்தரொடு கூடிக் ... கலவாதே
முத்தமிழை யோதித் ... தளராதே
முத்தியடி யேனுக் ... கருள்வாயே
தத்துவமெய்ஞ் ஞானக் ... குருநாதா
சத்தசொரு பாபுத் ... தமுதோனே
நித்தியக்ரு தாநற் ... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ... பெருமாளே..
- திருப்புகழ் -
எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே.. 46
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. 51
- கந்தர் அனுபூதி -
-: அருணகிரிநாதர் :-
நன்றி கௌமாரம்
முருகா முருகா
முருகா முருகா
சிவாய நம ஓம்
**
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. வைகாசி விசாகதன்று முருகனை காலை எழுந்தவுடன் தரிசித்துக் கொண்டேன்.
/உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. /
முருகா.. முருகா..
முருகா.. முருகா..
முருகா சரணம்
முருகா சரணம்.
முத்துக் குமரா சரணம் 🙏.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முருகா சரணம்
நீக்குமுருகா சரணம்
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா
வைகாசி விசாகத் திருநாள்... எங்கள் வடிவேல் குமரனின் மண நாள்....
பதிலளிநீக்குஅனைவரையும் காப்பாய் முருகா.
முருகா சரணம்
நீக்குமுருகா சரணம்
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
முருகனுக்கு சிறந்தநாளான வைகாசி விசாகம் நாளில் பாடல்பாடி தரிசித்துக்கொண்டோம்.
பதிலளிநீக்குஅனைவர் நலனுக்கும் அவனருளை வேண்டி நிற்போம்.
வெற்றி வேல் முருகா சரணம்.
முருகா சரணம்
நீக்குமுருகா சரணம்
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
முருகா சரணம் , கந்தா சரணம்.
பதிலளிநீக்குதிருப்புகழை பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்
முருகா சரணம்
நீக்குமுருகா சரணம்
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா