நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 31
சனிக்கிழமை
வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு வைகாசி 28 (11/6) புதன்கிழமை அதிகாலை ஐந்து மணியளவிலதஞ்சை கரஎந்தை ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய
வசிஷ்டேஸ்வரர் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் வலம் எழுந்தருளினார்... உடன் ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி அருந்ததி தேவியும் வெட்டி வேர் பல்லக்கில் எழுந்தருளினர்..
கரந்தையில் நகர் வலம் வந்த பிறகு
முதல் தலமாம திரு வெண்ணாறு ஸ்ரீ ஆனந்தவல்லி உடனாகிய தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஸ்ரீ சண்டிகேசர் எதிர்கொண்டு வரவேற்க மாலை மரியாதை மகாதீப ஆராதனை... அடுத்துள்ள ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாள் கோயிலில் இருந்தும் மாலை மரியாதை தீப ஆராதனை செய்யப்பட்டது...
அதனைத் தொடர்ந்து பள்ளியக்ரஹாரம் ஊர் மரியாதையை ஏற்றுக் கொண்டு தென்குடித்திட்டை கோயிலை நோக்கி பல்லக்குகள் புறப்பட்டன..
இணைய வேகம் இன்மையால் பதிவு தாமதம் ஆகியது..
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**
பல்லக்கின் வழியில் பதிவு. பதிவின் வழியில் நாங்களும்! படங்கள் சிறப்பு.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்
தஞ்சை கரஎந்தை ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய
பதிலளிநீக்குவசிஷ்டேஸ்வரர் பல்லக்கில் ஏழூர் வலம் எழுந்தருளிய காட்சிகள் பலவும் தரிசித்தோம்.
அனைவர் நலனையும் அம்மை அப்பர் இருவரும் காக்க வேண்டுவோம்.
தங்கள் அன்பின் வருகையும் மகிழ்வான
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பல்லக்கு படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அழகிய பல்லக்குகளையும், அதில் எழுந்தருளிய இறைவனையும், அம்பாளையும் தரிசித்துக் கொண்டேன். அனைத்து கோவில்களிலும், தீபாராதனை, மாலை, மரியாதைகளுடன் ஏழுர் விழா சிறப்பாக நடைப்பெற்றிருக்கும். கண்டு களித்து எங்களுக்கும் இதை யெல்லாம் காணும்படிக்கு பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.