நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 02, 2025

வெள்ளி

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 19
வெள்ளிக்கிழமை


மகர வார் குழை மேல் அடர்ந்து குமிழ் மீதினில் மறைந்து
வாளைத் துறந்து, மைக் கயலை வென்ற நின் செங்கமல
விழி அருள் வரம் பெற்ற பேர்கள் அன்றோ
செகமுழுதும் ஒற்றைத் தனிக் குடை கவித்து,
மேல் சிங்காதனத்தில் உற்றுச் செங்கோலும்,
மனு நீதி முறைமையும் பெற்று, மிகு திகிரி உலகாண்டு பின்
புகர் முகத்து ஐராவதப் பாகர் ஆகி நிறை புத்தேளிர்
வந்து போற்றிப் போக தேவேந்திரன் எனப் புகழ
விண்ணில் புலோமிசையொடும் சுகிப்பர்
அகர முதல் ஆகி வளர் ஆனந்த ரூபியே
ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
அருள் வாமி அபிராமியே!..


வாச மலர் மரு அளக பாரமும் தண் கிரண மதி முகமும்
அயில் விழிகளும் வள்ள நிகர் முலையும் மான் நடையும்
நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார்
பாச பந்தத்திடை மனம் கலங்கித் தினம் பல வழியும்
எண்ணி எண்ணிப் பழி பாவம் இன்ன தென்று அறியாமல்
மாயப் ப்ரபஞ்ச வாழ்வு உண்மை என்றே
ஆசை மேலிட்டு வீணாக, நாய் போலத் திரிந்து அலைவ
தல்லாமல் உன்றன் அம்புயப் போதெனும் செம் பதம்
துதியாத அசடன் மேல் கருணை வருமோ
மாசிலாது ஓங்கிய குணாகரி பவானி சீர் வளர் திருக்
கடவூரில் வாழ் வாமி சுப நேமி புகழ் நாமி சிவ
சாமிமகிழ் வாமி அபிராமி உமையே!..
அபிராமி திருப்பதிகம்


மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார் சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.. 4
அபிராமிபட்டர்

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

10 கருத்துகள்:

  1. அபிராமியே அன்னையே..  
    அகிலம் முழுவதையும் காத்தருள்வாய்.  
    மழை[பொழிய வைத்து பசுமையையும் 
    தண்மையையும் தந்தருள்வாய்.  
    வெப்பம் தவிர்த்து வெறுப்பு குறைய
    வரமருள்வாய்.
    பணிகின்றோம் உன்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்தனை நன்று

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
    2. நேற்று மாலை இங்கு நல்ல மழை. வெப்பம் குறைந்து இதமாக இருந்தது. தங்கள் பிரார்த்தனைக்கு அன்னை செவி சாய்த்தாள் . நன்றி.

      நீக்கு

    3. மழை பெய்து மண் குளிர வேண்டும்

      தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. அபிராமி திருப்பதிகம் பாடி அன்னையை வணங்கி கொண்டேன். அன்னையின் அருள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைத்திட வேண்டுமாய் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு
  3. வெள்ளி நாளில் பாடல்பாடி அபிராமி அன்னையை வணங்கிக் கொண்டோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றி மாதேவி

      நீக்கு
  4. அபிராமி பதிகத்தை பாடி அன்னையை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..