நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 12, 2025

நிறை நிலா

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 29
 திங்கட்கிழமை

இன்று
சித்ரா பௌர்ணமி

 
சித்ரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தின் பௌர்ணமி 
தினத்தன்று சனாதன மக்களால் கொண்டாடப்படும்  நாளாகும்.. இந்நாளில் விரதம்  மேற்கொள்வதும் உண்டு..

இந்த விழா யம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தருக்காக என்று சொல்கின்றார்கள். சித்திர குப்தர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். 

கோயில்கள் அனைத்திலும் ‌சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 

முருகன் கோயில்களில் பால் குட விழாக்கள் நடத்தப்பட்டு பௌர்ணமி தின சிறப்பு அபிஷேக  தீபாராதனை நிகழும்...

சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை ஆகிய பழ‌ வகைகள் வீட்டு வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும்..


அன்று மாலைப் பொழுதில்
 உற்றார், உறவினர் நண்பர்கள்  சூழ நீர்நிலைகளுக்கு அருகில்
அமர்ந்து  மகிழ்வுடன் சித்ரான்னங்களை உண்பது நமது பாரம்பரியமாகும்..

உள்ளங்கள் மகிழட்டும்
உறவுகள் தழைக்கட்டும்


ஸ்ரீ சித்ரகுப்தர் கணக்கு எழுதுகின்றார் என்றிருக்க
அப்பர் பெருமான் காட்டுகின்ற
கணக்கு விவரம்

தொழுது தூமலர்
  தூவித் துதித்துநின்று
அழுது காமுற்று
  அரற்றுகின் றாரையும்
பொழுது போக்கிப்
  புறக்கணிப் பாரையும்
எழுதுங் கீழ்க்கணக்கு
  இன்னம்பர் ஈசனே..  5/21/8


கடந்த வெள்ளியன்று
ஐயாற்றில் நிகழ்ந்த
தேரோட்டக் காட்சிகள்












படங்கள்
 நன்றி
காவிரிக் கோட்டம்

ஓம் சிவாய நம
**

8 கருத்துகள்:

  1. சித்ரா பௌர்ணமி விவரங்களும் திருவையாறு தேரோட்டப் படங்களும் அருமை, சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. மதுரை சித்ரா பௌர்ணமி திருவிழா சிறப்பாக இருக்கும்.  ஆனாலும் நான் கூட்டத்துக்கு பயந்து ஒதுங்கி நின்று பார்த்தே பழக்கம்.   கூட்டத்தைக் கண்டாலே அலர்ஜி.  அதற்கு பெரியகோவில் திருவஸிழாவில் சிறுவயதில் மாட்டிக்கொண்ட அனுபவமும் காரணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதெல்லாம் கூட்ட நெரிசலில் செல்வதில்லை

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  3. சித்ரா பெளர்ணமி நாளின்சிறப்புக்களுடன், ஐயாற்று தேரோட்டம் படங்களும் கண்டு வணங்கினோம். நன்றி.

    அனைவருக்கும் சித்ரா பெளர்ணமி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு
  4. சித்ரா பெளர்ணமி அன்று குடும்பத்தினர் அனைவரும் மொட்டை மாடியில் நிலா சோறு சாப்பிடுவது உண்டு. சித்தரான்னங்கள் செய்து குடும்பத்தோடு உரையாடி மகிழ்ந்து உண்ணும் பழக்கம் உண்டு.
    சித்ரகுபதருக்கு அவிசு செய்து படைக்கும் பழக்கம் உண்டு.

    திருவையாறு தேரோட்டப்படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..