நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 28, 2024

புள்ளிருக்கு வேளூர்

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 14
ஞாயிற்றுக்கிழமை

தற்சமயம் எனக்குக்
கை விரல்களில் வலி.. 
தட்டச்சு செய்வதில் 
பிரச்னை என்றாலும் நற்பணியாகிய இதைச் செய்வதில் மிக்க மகிழ்ச்சி..
**
ஸ்ரீ தையல் நாயகி சமேத
வைத்தீஸ்வரன் கோயில்
தரிசனம்

மயிலாடுதுறை
சந்திப்பில்




இறைவன்
ஸ்ரீ வைத்தீஸ்வரன்
அம்பிகை
ஸ்ரீ தையல் நாயகி

தீர்த்தம்
சித்தாமிர்தம்
தலவிருட்சம்
வேம்பு 













திறங்கொண்ட அடியார்மேல் தீவினை நோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்மம்  உரைத்த பிரான் அமருமிடம்
மறங்கொண்டங்கு இராவணன் தன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.. 2/43/6
-: திருஞானசம்பந்தர் :-

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத் திண் சிலை கைக்கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. 6/54/8
-: திருநாவுக்கரசர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. படங்கள் அருமை. விரல்களின் வலி சீக்கிரம் சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைக்கு நன்றி..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. புள்ளிருக்கு வேளூரின் கோபுர தரிசனம் கிடைத்தது. ஸ்ரீ வைத்திஸ்வரரையும், ஸ்ரீ தையல் நாயகி அம்மையையும் வணங்கி கொண்டேன். தீராத நோய் தீர்க்கும் எம்பெருமான் பாதம் பற்றி அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    தங்கள் கைவிரல்களின் வலியும் விரைவில் குணமாக வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// தீராத நோய் தீர்க்கும் எம்பெருமான் பாதம் பற்றி அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்..///

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

      நீக்கு
  3. கைவலி விரைவில் குணமாகட்டும்.

    புறம் கண்ட சடாய் என்பான் -ஜடாயுவை தமிழில் எப்படி அழகாக்க் குறிப்பிட்டிருக்கார் பாருங்கள்.. அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புள்ளிருக்கு வேளூர் தலபுராணத்தில் சம்பாதி ஜடாயு வரலாறு சொல்லப்பட்டுள்ளது.. ஞான சம்பந்தப் பெருமானும் பதிகத்தின் பல பாடல்களில் சம்பாதி ஜடாயு இவர்களைப் பாடுகின்றார்..

      விரைவில் வைத்தீஸ்வரன் கோயில் பற்றி சுருக்கமாக என்னளவில் தருகின்றேன்..

      மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி ..

      நீக்கு
  4. சிறப்பான தரிசனம். சிறு வயதில் இந்தக் கோயிலுக்குச் சென்றது. மீண்டும் செல்ல வேண்டும் என்ற ஆசை உண்டு.

    உங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள். கைவிரல் வலி விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  5. நலம் பெற வேண்டுகிறேன் ஜி
    ஓம் நம சிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  6. வைத்தீஸ்வரன் தையல்நாயகி படங்கள் அழகு.

    கைவலியுடன் பகிர்வுகளையும் தருகிறீர்கள் நன்றி.

    வைத்தீஸ்வரன் உங்கள் வலியை போக்கட்டும்.
    அனைவர் நலத்தையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாதேவி அவர்களுக்கு நன்றி..

      தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..

      நீக்கு
  7. வைத்தீஸவரன் , தையல் நாயகி இருவரையும் ஒவ்வொரு கார்த்திகை தினமும் பார்த்த நினைவுகள் வந்து போகிறது.
    இருவரும் உங்கள் விரல் வலியை குணபடுத்துவார்கள்.
    விரைவில் நலபெற இறைவனை வேண்டுகிறேன்.
    பதிகத்தை பாடி வணங்கி கொண்டேன். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க நலம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..