நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 19, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
திரு பவானி

தனதான தானத் தனதான
தனதான தானத் ... தனதான


கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ... கடலேறிப்

பலமாய வாதிற் பிறழாதே 
பதிஞான வாழ்வைத் ... தருவாயே..

மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ... குமரேசா

சிலைவேட சேவற் கொடியோனே
திருவாணி கூடற் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


பூரண கலைகளுடன்
கூடிய  ஞானஒளி எனும் 
அருட்கடலிலே குளித்து

மூவாசைகளைக் கடந்து
உரத்த சப்தத்துடன் கூடிய 
சமய வாதங்களில் ஈடுபட்டுக் கிடக்காமல்

இறைவனைப் பற்றிய சிவஞான 
வாழ்வைத் தந்தருள்வாயாக..

வள்ளி மலையின் குறக் கொடியாகிய  
வள்ளி நாயகியின்
மனதில் கொலுவிருக்கும் 
குமரனே குமரேசனே..

வள்ளிக்காக வில்லைக் கையில் 
கொண்டு வேடன் என வந்தவனே,
 சேவற் கொடி கொண்டவனே.

லக்ஷ்மியும் சரஸ்வதியும்  கூடுகின்ற 
கூடற்துறை பவானியின் பெருமாளே..
**
 

முருகா முருகா
முருகா முருகா
**

இன்று நமது 
நாடாளுமன்றத்திற்கான
வாக்குப் பதிவு..
வாக்களிக்க மறவாதீர்..
தவறாதீர்!..

வாழ்க பாரதம்
வளர்க தமிழகம்!..
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***