நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூன் 18, 2024

கலைக்கூடம் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 4
செவ்வாய்க்கிழமை

முந்தைய பதிவுகள்



தஞ்சை வட்டாரத்தின் - விசேஷங்களில் தவறாது இடம் பெறுகின்ற இனிப்பு - அசோகா!...

அசோகா - என்றால் கவலையற்றது.. மகிழ்ச்சி உடையது எனபது பொருள்..

இப்படியான இனிப்பு உருவானதும் தஞ்சை அரண்மனையில்  தான்..

இன்று உலோக விக்ரகக் கூடம்..

இங்கிருக்கின்ற விக்ரகங்கள் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தின் கீழ் கண்டறியப்பட்டவை..

சில தினங்களுக்கு முன்பு - 





















வாழ்க கலை
வளர்க தஞ்சை
***

திங்கள், ஜூன் 17, 2024

திருத்தவத்துறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 3
திங்கட்கிழமை

-: திருத்தவத்துறை :-

ஸ்ரீ மஹால‌க்ஷ்மி த‌வ‌ம் இத்தலத்தில் செய்த‌தால் திருத்த‌வ‌த்துறை என்று பெய‌ர்


இறைவன்
ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர்

அம்பிகை 
ஸ்ரீமதி நாயகி
 
சிவகங்கை தீர்த்தம் 
தலவிருட்சம் அரசமரம்..

சப்தரிஷிகளும் ஈசனைத் தொழுது தவமிருந்து முக்தி நலம் பெற்ற தலம்..

இவ்வூருக்கான தேவாரத் திருப்பதிகம் நமக்குக் கிடைக்கவில்லை..

ஆயினும்,
அப்பர் பெருமான் திருவூர்த் தொகையுள் இத்தலத்தினை வைத்துப் பாடியருளிய திருப்பதிகம் கிடைத்துள்ளது..

அருணகிரிநாதர்
 அருளிச்செய்த இரண்டு திருப்புகழ் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன..


தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி காலத்தில் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்காபூர் என்ற கொடூரன் இவ்வூரின் அழகைக் கண்டு பிரமித்து - வாழை வனத்துள் புகுந்த மந்தி என, ஊரைச் சேதப்படுத்தி அழித்து
விட்டு - 

அவனது ஆட்களைக் குடியமர்த்தி விட்டுப் போனான்.. 

அது முதற்கொண்டு திருத்தவத்துறை - என்றிருந்த புராதனப் பெயர் - லால்குடி என்று மாறிப் போனது..

இதில்,
இச் சமூகத்தின் சாபக்கேடுகளால் -
இலால்குடி என்பதே சரி என்று எலக்கணம் வேறு!..

அது தொலையட்டும்..


கடந்த சித்ரா பௌர்ணமி அன்று
திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணையின் வண்ணம் ஆதீன நிகழ்வாக திருத்தவத்துறை  ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் திருக்கோயிலில் - மகா அபிஷேகமும், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் சிறப்பாக நடைபெற்றது..

படங்களைப் பதிவேற்றுவதில் மிகுந்த தாமதம் ஏற்பட்டு விட்டது..

அந்த வைபவத்தின் காட்சிகள் 
இன்றைய பதிவில்..

ஒளிப்படங்களை வழங்கியோர்- 
துறைசை ஆதீனம்..
அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..








கயிலாயமலை எடுத்தான் கரங்களோடு சிரங்கள் 
உரம் நெரியக்கால் விரலாற் செற்றோன்
பயில்வாய பராய்த்துறை தென் பாலைத்துறை
பண்டெழுவர் தவத்துறை வெண்டுறை பைம்பொழிற்
குயிலாலந்துறை சோற்றுத் துறை பூந்துறை
பெருந்துறையுங் குரங்காடு துறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றுந் 
துறை அனைத்தும் வணங்குவோமே.. 6/71/11
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

ஞாயிறு, ஜூன் 16, 2024

நீர் மோர்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 2   
ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்

சில தினங்களுக்கு முன்பு 
 Indian Council of Medical Research (ICMR) National Institute of Nutrition (NIN)  வழங்கியுள்ளதாக ஒரு செய்தி
(Revised Dietary Guidelines)..

However, what the country would be shocked to know that the ICMR has advised the country to avoid consuming sugarcane juice. Yes, sugarcane juice is a beverage that the country loves to consume, but it could be risky to consume..


கருப்பஞ்சாற்றில் ஒவ்வொரு 100 மிலியிலும் 13 முதல் 15 grams வரை சர்க்கரைச் சத்து இருப்பதால் - குறைத்துக் கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளனர்..

கரும்புச் சாறு  அருந்துவதன் மூலம், இதயம் மற்றும் நுரையீரல்கள் பலம் அடைகின்றன. வயிற்று புண்களையும் இது சரி செய்கின்றது என்றாலும் இன்றைய சூழலில் மனிதருக்கு அச்சம் ஊட்டுவதாகி விட்டது..

ICMR has suggested that sugarcane juice comprises 13 to 15 grams of sugar in every 100 milliliters. The sugarcane juice contains high sugar levels. Therefore, the ICMR has suggested that the consumption of sugar should be minimized.

மேலும் - 
sugary soft drinks வகைகளையும் packaged fruit juices, energy drinks, and drinks containing alcohol - வகைகளையும் தவிர்க்கும்படி சொல்லப்பட்டுள்ளது..




குறைத்துக் கொள்ள வேண்டியவை ;
Coffee, Tea and other Caffeinated drinks.. 

பரிந்துரைக்கப்பட்டிருப்பவை :
இளநீர்,மோர், எலுமிச்சை சாறு ஆகியன.. எல்லாவற்றுக்கும் மேலாக சுத்தமான குடிநீர்..


இருக்கிற இருப்புக்கு (இருப்பு எனில் கையிருப்பு அல்ல)
இளநீர் எல்லாம் கட்டுப்படி ஆகாது.. 

குரும்பையாய் இருப்பது நாற்பது ரூபாய்.. கொஞ்சம் வழுக்கையாய் இருந்தால் ஐம்பது என்ற அளவில் போய்க் கொண்டிருக்கின்றது எளநி.. எளநீய்!..

என்னை மாதிரி ஆட்களுக்கு நன்னாரி அல்லது வெட்டி வேர் ஊறிய பானைத் தண்ணீர் தான் சிறந்தது.




வீட்டில் தயாரிக்கப்பட்ட மோருடன் சுத்தமான நீர் அருந்தி வெயிலின் தாக்கத்தை எதிர் கொள்வோம்..

இயற்கையே வளம்
இயற்கையே நலம்..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

சனி, ஜூன் 15, 2024

அருள் நிறை ஆனி


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி முதல் நாள்  
சனிக்கிழமை


ஆனி..

தமிழ்ப் பஞ்சாங்கத்தின்படி 
வருடத்தின் மூன்றாவது மாதமாகும்...

சூரியன் மிதுன ராசியில்
விளங்குகின்ற மாதம்..

உத்ராயண புண்ணிய காலத்தின் ஆறாவது மாதம் ஆனி.. 

தேவர்களின் மாலைப் பொழுது என்பதாக ஐதீகம்..

கோயில்களில் திருவிழாக்கள் நிறைந்த மாதம் ஆனி..

இம்மாதத்தின் நிறைநிலா நாள் சிறப்புடையது..


ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவடிப் பேறு பெற்ற நாள் ஆனி மாதத்தின் மக நட்சத்திரம்..


ஆனி உத்திர நாளில் தான் சிவபெருமான் குருந்த மரத்தடியில் மாணிக்கவாசகப் பெருமானுக்கு  உபதேசம் செய்ததாக ஆன்றோர் குறிப்பு..

ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகின்றது..



ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்..


அம்மையார் என்ற புகழுக்குரிய காரைக்கால் புனிதவதியார் ஈசனுக்கு மாம்பழத்துடன் அமுது படைத்த நாள் ஆனி பௌர்ணமி..

காரைக்காலில் ஆனி மாத பௌர்ணமியை ஒட்டி, மாங்கனித் திருவிழா நடைபெறுகின்றது.. 

ஈசன் - விடை வாகனத்தில் வீதி வலம் அருளும் போது அம்மையாரும் உடன் எழுந்தருள்கின்றார்.. அப்போது மக்கள் மாங்கனியை வழங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்..


மேலும் - பல சிவாலயங்களிலும் லிங்கத் திருமேனிக்குப் பழ அபிஷேகம் நிகழ்த்தப்படுகின்றது..


திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை  ஸ்ரீ தாயுமானவர் திருக்கோயிலில் ஆனி பௌர்ணமி நாளில் ஸ்வாமிக்கு வாழைப்பழக் குலைகள் சமர்ப்பித்து வணங்குவர்...



திருச்சிராப்பள்ளி - உறையூரில் மேற்கூரையோ  விமானமோ இல்லாத  கருவறையில் குடி கொண்டிருக்கின்ற  ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு ஆனி பௌர்ணமி அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது.. 


ஆனி மாத பௌர்ணமியில்,   மன்னார்குடி ஸ்ரீ  ராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழா...


ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே
திருஐயாறு அகலாத செம்பொற் சோதீ.. 6/38/1
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூன் 14, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 32
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: பொது :-


தானான தானதனத் ... தனதான

கோடான மேருமலைத் ... தனமானார்
கோமாள மானவலைக் ... குழலாதே

நாடோறு மேன்மைபடைத் ... திடவேதான்
நாயேனை யாளநினைத் ... திடொணாதோ..

ஈடேற ஞானமுரைத் ... தருள்வோனே
ஈராறு தோள்கள்படைத் ... திடுவோனே

மாடேறு மீசர்தமக் ... கினியோனே
மாதானை யாறுமுகப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


மேரு மலையின் சிகரங்களை
ஒத்த தனங்களை உடைய 
மாதர்களின் கொண்டாட்டமான
வலைக்குள் உழலாமல்,

நாளுக்குநாள் சிறப்பும் 
புகழும் பெருகும்படி நாயேனை 
ஆட்கொள்வதற்கு
நினைத்தல் கூடாதோ?..

நான் ஈடேறும்படி எனக்கு
ஞானோபதேசம்  அருளியவனே..

பன்னிரு திருத்தோள்களைக் 
கொண்டவனே..

விடை வாகனத்தில் வருகின்ற
சிவபெருமானுக்கு இனியவனே 

சிறந்த சேனைகளையும்,
ஆறு திருமுகங்களையும் 
உடைய பெருமாளே..
**

முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***