நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூன் 07, 2024

திருப்புகழ்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 25
வெள்ளிக்கிழமை

திருப்புகழ்
-: குன்றக்குடி :-


தனன தனன தனத்தந் ... தனதான

தவள மதிய மெறிக்குந் ... தணலாலே
சரச மதனன் விடுக்குங் ... கணையாலே

கவன மிகவு முரைக்குங் ... குயிலாலே
கருதி மிகவு மயக்கம் ... படவோநான்

பவள நிகரு மிதழ்ப்பைங் ... குறமானின்
பரிய வரையை நிகர்க்குந் ... தனமேவுந்

திவளு மணிகள் கிடக்குந் ... திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


வெண்ணிற சந்திரனின் 
ஒளியெனும்  நெருப்பினாலும்

மன்மதன் விடுக்கின்ற 
பூங்கணையினாலும்

சோகத்தில் கூவுகின்ற 
குயிலின் குரலாலும்,

நான் என் மனதில் மயக்கத்தை 
அடையலாமோ?..

பவள நிற இதழ் கொண்ட 
பசுங் குறத்தி வள்ளி நாயகியின்

திருத்தன பாரங்களில்  
திகழ்கின்ற

மணி மாலைகளில் 
பொருந்துகின்ற திருமார்பனே

மயூரகிரி எனும் குன்றக்குடியில் 
வீற்றிருக்கும் பெருமாளே...
**

முருகா முருகா..
முருகா முருகா..

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய திருப்புகழ் பாடலும் அதன் விளக்கமும் அருமையாக உள்ளது. நாமும் முருகா சரணமென அவன் பாதங்களை போற்றுவோம். அவன் நம் நல்வினைகளுக்கேற்ப நமக்கு நல்லதையே நடத்தித் தர பிரார்த்தனைகள் செய்வோம். அனைத்தையும் நல்லபடியாக அவன் நடத்தித் தருவான் . 🙏. முருகா., முருகா.

    தங்களின் விட்டுப் போன சில பதிவுகளுக்கும் பிறகு நிதானமாக வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. திருப்புகழைப் பாடி துதித்து முருகனின் திருவருளை பெறுவோம்.

    பதிலளிநீக்கு
  3. குன்றகுடி முருகன் திருப்புகழை பாடி வணங்கி கொண்டேன்.
    படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  5. குன்றக்குடி வாழும் பெருமானை வெள்ளி நாளில் தரிசித்தோம்.
    ஓம் முருகா சரணம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..