நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜூன் 22, 2024

க்ருஷ்ணா


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 
சனிக்கிழமை


காவலில் புலனை வைத்துக் 
கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து
நாவலிட்டு உழி தருகின்றோம் 
நமன் தமர் தலைகள் மீதே
மூவுலகு ண்டு  உமிழ்ந்த​ 
முதல்வ நின் நாமம் கற்ற
ஆவலிப் புடைமை கண்டாய் 
அரங்கமா நகர் உளானே.. 872


கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும்  பூம்பொழில் அரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைபன் ஈசன்  கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன்  ஏழையேன் ஏழை யேனே!.. 894

போதெல்லாம் போது கொண்டுன் 
பொன்னடி புனைய மாட்டேன்
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்
காதலால் நெஞ்சமன்பு  
கலந்திலேன் அது தன்னாலே
ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே
எஞ்செய்வான் தோன்றினேனே.. 897


மனத்திலோர் தூய்மை இல்லை 
வாயிலோர் இன்சொல் இல்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் 
தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலையானே  
பொன்னிசூழ் திருஅரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் 
என்னையாளுடைய கோவே.. 901

ஆர்த்துவண் டலம்பும் சோலை 
அணிதிரு அரங்கந் தன்னுள்
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே 
உன்னைக் காணும் மார்க்கமொன்று
அறிய மாட்டா  மனிசரில் துரிசனாய
மூர்க்கனேன் வந்து நின்றேன் 
மூர்க்கனேன் மூர்க்கனேனே.. 903


மெய்யெலாம் போக விட்டு  
விரிகுழ லாரில் பட்டு
பொய்யெலாம் பொதிந்து கொண்ட 
போட்கனேன் வந்து நின்றேன்
ஐயனே அரங்கனே உன் அருள்
என்னும் ஆசை தன்னால்
பொய்யனேன் வந்து நின்றேன் 
பொய்யனேன் பொய்ய னேனே.. 904
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
 

ஓம் ஹரி ஓம்
ஓம் நமோ நாராயணாய
***

4 கருத்துகள்:

  1. சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து....

    பதிலளிநீக்கு
  2. 'அரங்க நகர் உள்ளானே' வணங்கி நிற்கிறோம்.

    ஆலிலை கிருஷ்ணா அழகாக இருக்கிறார்.

    காணொளி கேட்டு அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
  4. சர்வம் கிருஷ்ணார்ப்பணம். படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..