நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 02, 2024

திருமுறை


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 20
ஞாயிற்றுக்கிழமை


பன்னிரு திருமுறைகள் எனப்படுபவை 
அருளாளர்களால் பாடப் பெற்ற திருப்பதிகங்களின்  தொகுப்பாகும்..  

இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன.

பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, 
தில்லைக் கோயில் நிலவறைக்குள் கவனிப்பாரற்றுக் கிடந்த ஓலைச் சுவடிகளை மீட்டு  (பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை)
திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்கள்  தொகுத்தளித்தார்..

இதன்பின் 
 சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டு அநபாயச் சோழரின் காலத்தில் - சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார்..

அது பன்னிரண்டாம் திருமுறை எனப்பட்டது..

சிவநேசச்செல்வர்கள் தமது நாள் வழிபாட்டில் ஒவ்வொரு திருமுறையில் இருந்தும் ஒரு திருப்பாடலை ஓதி வழிபாடு செய்வர்..
 
தேவாரம், திருவாசகம், திரு இசைப்பா, திருப்பல்லாண்டு,
பெரிய் புராணம் எனும் ஐந்து நூல்களில் இருந்து ஐந்து திருப்பாடல்களை மட்டும் பாடுவது பஞ்ச புராணம் எனப்படும்..

திருமுறைகளை நாளும் ஓதுகின்ற ஓதுவார்களுக்கும்
சிவனடியார்களுக்கும் நோய்களை இறக்குகின்ற வல்லமை இருக்கின்றது என்பது தெளிவு.. 

தஞ்சை ராஜராஜேஸ்வரத்தில்
திருப்பதிகம் பாடுவதற்கு நாற்பத்து எட்டு ஓதுவார்களை நியமித்த விவரம் வரலாற்றில் உள்ளது..

மாமன்னர் ராஜராஜ சோழர் காலத்தில் ஆலயங்களில் தேவாரப் பாடல்களைப் பாடுவதற்கு கட்டளைகள் அமைக்கப்பட்டன.. 

இதன்படி
சிவாலயங்கள் தோறும் வழிபாட்டு நேரத்தில் திருமுறைப் பாடல்களைப் பாடுவது வழக்கத்தில் இருந்தது..

இப்போது எப்படி என்று தெரியவில்லை.. 


1984 ல் சிங்கப்பூரில் வாங்கிய பன்னிரு திருமுறை எனும் சிறு நூல் காலப் போக்கில் என்ன ஆயிற்று - என்பது தெரியவில்லை..

அதன் பின் 1987 ல் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூல் ஒன்றை பட்டுக்கோட்டை நூலகத்தில் இருந்து எடுத்து வந்து  - அத்தனை தலத்திற்கும் உரிய திருப்பாடல்கள் சிலவற்றை இரண்டு குறிப்பேடுகளில் எழுதி வைத்திருந்தேன்..  நல்ல நாட்களில் படிப்பதும் வழக்கம்..

இப்போது கைத்தல பேசியில் தருமபுர ஆதீனத்தின் பதிப்பில் அவ்வப்போது இயங்கிக் கொண்டு இருக்கின்றேன்.. 

இந்நிலையில் சென்ற ஆண்டில் மதுரைக்குச் சென்றிருந்த போது ஸ்ரீமதி கோமதி அரசு அவர்களைச் சந்தித்த வேளையில் அவர் வழங்கிய புத்தகங்களுள் ஒன்று - பன்னிரு திருமுறைத் திரட்டு.. இப்போது மேஜையில் உள்ளது..

வெளியில் செல்லும் போது அந்நூலை  எடுத்துச் செல்வதில் பற்பல பிரச்னைகளை உணர்கின்றேன்...

பன்னிரு திருமுறை நூலை பல்வேறு சூழ்நிலைகளையும் கடந்து - தலையில் தாங்கிச் செல்கின்றார் - அடியார் ஒருவர் எனில், அது மிகப் பெரிய விஷயம்..


நன்றி Fb Reels 

சிவனடியார் சொல்கின்ற பாடல்களுள் 
திருமந்திரத் திருப்பாடல் இது..


ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த் தோத்திரங்கள் சொல்லுமே..
சத்தி பேதம் திருமந்திரம்
-: திருமூலர் :-

மேற்கண்ட திருப்பாடல்  அறிவேன்..


அடியார் சொல்கின்ற
திருவாசகத் திருப்பாடல் இது..

கையால் தொழுது உன் கழல் சேவடிகள் 
கழுமத் தழுவிக் கொண்டு
எய்யாது என்றன் தலை மேல் வைத்து 
எம் பெருமான் பெருமான் என்று
ஐயா என்றன் வாயால் அரற்றி அழல் 
சேர் மெழுகு ஒப்ப
ஐயாற்று அரசே ஆசைப்பட்டேன் 
கண்டாய் அம்மானே!..
திருவாசகம் ஆசைப்பத்து
-: மாணிக்கவாசகர் :-
**

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

  1. திருமுறைப் பாடல்கள் விசேட நாட்களில் மட்டும் பாடுகிறார்கள் போல் தெரிகிறது.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
  2. ஓம் நமசிவாய
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..