புதன், ஜூன் 26, 2024

தேங்காய்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 12 
புதன்கிழமை


தேங்காய்..

பழந்தமிழில் தெங்கு எனக் குறிக்கப்படுகின்ற
தென்னையின் பழம் ஆகும்...  

தெங்கம் பழம் என்று நாலடியார் கூறுகின்றது..

இன்றைக்கு தேங்காய் எனப்படும் இதில் இருந்து தான் எண்ணற்ற நலன்களும் நன்மைகளும் நமக்குக் கிடைக்கின்றன..

ஆனால் இதனை மேலை மருத்துவம் ஒத்துக் கொள்பது இல்லை..

சமீப காலங்களில் வெளி மருத்துவங்கள் -  தேங்காய், தேங்காய்ப் பால், தேங்காய் எண்ணெய் ஆகியன ஆபத்தானவை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றன...

இப்போது விளம்பரம் ஒன்றில்-  " சேச்சே.. தலைக்குத் தேய்க்கின்ற எண்ணெய் சமையலுக்கா?.. சமையலுக்கு என தனியான தேங்காய் எண்ணெய்.. " - என்று வருகின்றது...

இனி வரும் காலத்தில் கத்தரிக்காய் பொரியலுக்கு இந்தத் தேங்காய் எண்ணெய்... உருளைக் கிழங்கு வறுவலுக்கு அந்தத் தேங்காய் எண்ணெய்.. என்றெல்லாம் கூச்சல்கள் வரக் கூடும்..

தைப் பற்றி சிந்தித்துக் கொள்ள வேண்டியது அவரவர் பொறுப்பு..


இன்று தென்னங்காயில் இருந்து நாம் பெறுகின்ற தேங்காய்ப் பாலைப் பற்றி சில வரிகள்..

குரும்பை, வழுக்கை,
இளநீர், தேங்காய், நெற்று, கொப்பரை எனப்படும் அங்கங்களுக்கு ஆங்கிலத்தில் சொற்கள் இல்லை..

பாரம்பரிய  சமையலில் பெரும்பங்கு வகிப்பது தேங்காய்..

உணவாக மட்டுமல்லாமல் மருந்தாகவும் திகழ்வது தேங்காய்..


இளநீரும் தேங்காயின் தண்ணீரும் மிக மிக சுத்தமானவை..


கோடை காலத்து வெயிலின் தாக்கத்திற்கு  இளநீர் தான் அருமருந்து...

நல்ல குணம் உடைய மக்களை தென்னைக்கு ஒப்பாகக் கூறுகின்றார் ஔவையார்..

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தரு தலால்..
-: மூதுரை :-

உலோபிகளின் செல்வம் நாய் பெற்ற தேங்காய்க்கு இணையானது என்கின்றது நாலடியார்..

வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.


தேங்காய் பாலில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளன. 

 Vitamin C, E,  மற்றும்  B Complex, Iron, Pottcium மற்றும் Magnesium  போன்ற தாதுக்கள் உள்ளன. 

குறிப்பாக உடலுக்கு நன்மை பயக்கும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை நமது உடலிலின் நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக்குகின்றது, 
தேங்காய்ப் பால் எலும்பின் வளர்ச்சி ஆற்றல் ஆரோக்கியம் இவற்றில்
 பங்களிக்கின்றது..

தேங்காய் பால் அடிக்கடி அருந்துபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ்  அதிகம் சேர்கின்றது.. இதனால் எலும்புருக்கி நோய்  ஏற்படுவதில்லை.. 

மாதத்திற்கு ஒருமுறை   நாள் முழுவதும்  தேங்காய் பாலை மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீங்குகின்றன..
இரத்தம் சுத்தமாகின்றது.  உடல் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றது.. 

தேங்காய்ப் பால் அருந்துகின்ற வழக்கம் உடையவர்களுக்கு  சீக்கிரத்தில் தோல் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை.. தோலின் பளபளப்பு அதிகமாகி வயதான போதும் இளமைத் தோற்றமே நீடிக்கும்..

தேங்காய் பாலை சத்து அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்பு குறைகின்றது...

தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே  தேங்காய் பாலை அடிக்கடி
அருந்துவதால் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம்...


தேங்காய் பால் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதால்  அனைத்து உடல் நலன் ஓங்குகின்றது.. ஓங்கிய உடல் நலத்தில் குறை ஒன்றும்  இருப்பதில்லை... 

இதனால் தான் தென்னையின்  இளங்குருத்தை - தென்னம் பிள்ளை என்றது தமிழ்!..


இப்போது விளங்கியிருக்கும் - தேங்காய் கெட்டது என்று சொல்லப்படுவதன் ரகசியம்!..


நம்முடைய நலம்
நமது கையில்..

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..

பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா 
புனிதா உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன 
குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலையார் கமுகு 
இளவாழை மாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருஆரூர் 
அம்மானே.. 4/20/4
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

செவ்வாய், ஜூன் 25, 2024

கலைக்கூடம் 6


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆனி 11
செவ்வாய்க்கிழமை


தஞ்சையில் கருட சேவைக்கு மறுநாள் வெண்ணெய்த் தாழியன்று கீழ ராஜ வீதியில் நெரிசல்... இருசக்கர, நாற்சக்கர வாகனங்களோடு உள்ளூர் கழிசடைகளும் புழங்கிக் கொண்டிருந்தன...

அரண்மனை அஞ்சலகத்தின் அருகில் சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்த முதியவர்களுடன் மோதினான் கயவன் ஒருவன்...

அப்போது அறிமுகமான பெரியவர் ஒருவர் அரண்மனைக்குச் செல்கின்ற வழியைக் கேட்டார் 

அவர் திரு ஜெகந்நாதன் (87)... விருத்தாசலத்திற்கு அருகில் ஒரு கிராமம்...

அவருக்கு வழி சொல்வதை விட அழைத்துச் சென்று காட்டி விடுவோம் என, நானும் உடன் சென்றேன்.. 

அப்போது எடுக்கப்பட்டவையே கலைக்கூடத்தின் படங்கள்..

அரண்மனையின் ஒரு பகுதியில் இரண்டு மணி நேரம் கழித்த பின்பு பெரியவர் என்னைத் தம்முடன் அழைத்துச் சென்ற இடம் - தஞ்சை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் திருக்கோயிலில் எதிரே ஐயன் குளக்கரையில் அமைந்திருக்கும் தஞ்சை ராஜராஜ சமய சங்கம்..

அங்கே நூற்றுக்கணக்கான அடியார்கள் தங்கியிருந்தனர்... அறச் செயலாக மூன்று நாட்களும் அவர்களுக்கு அங்கே சாப்பாடு... சாப்பாடு எல்லாருக்கும் பொது... 

பெரியவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டு நான் அங்கே அவருடன் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினேன்...
































திரு. ஜெகந்நாதன்


















கலைக்கூட வளாகத்தின் 
வேறு காட்சிகளோடு
 அடுத்தொரு பதிவில் சந்திப்போம்..

வாழ்க கலை
வளர்க தஞ்சை..

சிவாய நம ஓம்
***