நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 15, 2024

தைப்பொங்கல்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஸ்ரீ சோபகிருது வருடம்
மங்களமிகுந்த 
தை மாதத்தின் முதல் நாள்..


உத்ராயண புண்ணிய காலம்..

கீழுள்ள சித்திரங்கள் ஓவியர் ஸ்ரீ மாதவன் அவர்களது கைவண்ணம்..







பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
அன்பின் நல்வாழ்த்துகள்..


தைப் பொங்கல் நாளில் நாம் காணும் 
இத்தனை நலங்களும் 
அன்னை காவிரியாளின் 
அருட்கொடை...

அன்னையைப் புகழ்ந்து 
அருந்தமிழ் மாலை..
**

காவிரி போற்றி
காவிரி போற்றி..

பூ விரித்த காவிரியாள் 
புனல் விரித்தாயே..
புனல் விரித்த வழியெங்கும் 
புகழ் விரித்தாயே..

புகழ் விரித்த வழியெங்கும் 
நலம் வளர்த்தாயே..
நலம் விரித்த நடையெங்கும் 
தமிழ் வளர்த்தாயே..

பா விரித்த பசுந்தமிழோடு 
உடன் பிறந்தாயே
கா விரித்த கலைகளோடு
நடை பயின்றாயே..

கல்லினோடு கசிந்துருகி 
கலை வடித்தாயே..
காற்றுக்குள் ஊற்றாகி 
உயிர் வளர்த்தாயே.. 

சோற்றுக்கும் சுகத்திற்கும் 
வழி வகுத்தாயே..
வற்றாத நிறை வளத்தில் 
எமைத் தொகுத்தாயே..

பாட்டுக்குள் பாட்டு என்று 
பதம்  கொடுத்தாயே..
பாடாத நாவுக்கும் 
நலம் கொடுத்தாயே..

ஏர் முனை வாழ இனிதருள் புரியும் 
புண்ணிய காவிரி பொன்னடி போற்றி..

நீர்த் திரள் எல்லாம் நெல் மணியாக 
நல்லருள் நல்குவை பதம் போற்றி..

பேர் துணையாக பிணி பல நீக்கி பேரிடர் 
தீர்ப்பாய் திருவடி போற்றி..

ஊர் நலம் காக்க பேரருள் கூட்டும் 
காவிரி உந்தன் கழலடி போற்றி..

காவிரி போற்றி
காவிரி போற்றி
***

 ஓம் மஹாலக்ஷ்ம்யை 
நமோ நம:
**
ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

13 கருத்துகள்:

  1. ​கவிதை அருமை. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..

      பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
      அன்பின் நல்வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஓவியப் படங்களும், கவிதையும் அருமை.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

      மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  3. மாதவன் அவர்களின் ஓவியங்களும் கவிதையும் சிறப்பு. ஓவியங்களை மிகவும் ரசித்தேன்.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும், உங்களது தளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லா நாளும் இனிதாக அமைந்திடட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

      மகிழ்ச்சி..
      நன்றி வெங்கட்..

      நீக்கு
  4. தைப் பொங்கல் அழகிய ஓவியப் படங்களுடன் களைகட்டுகிறது.

    அன்னையவளை போற்றி வணங்கி அனைவர் வாழ்வும் இனிதாக இருக்க வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

      தங்கள் பிரார்த்தனைக்கு மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  5. ஓவியம் அருமை. உங்கள் கவிதை அருமை.
    காவிரி அன்னை அனைவருக்கும் நலங்களை அருள வேண்டும்.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // காவிரி அன்னை அனைவருக்கும் நலங்களை அருள வேண்டும்.//

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பின் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. கவிதை நன்று. இனிய தைத்திங்கள் நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. கவிதை மிக அருமை. பொங்கல் மணத்தை விஞ்சிவிட்டது காவித்தாய் வழி வந்த உங்களின் தமிழ் மணம்!

    ஓவியர் மாதவன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை மிக அருமை.

    தைத்திருநாள் நல் வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. ஓவியங்கள் செம. மிகவும் ரசித்துப் பார்த்தேன். என்ன அழகாக வரைந்திருக்கிறார் ஓவியர் மாதவன்!

    கவிதையும் அருமை, துரை அண்ணா

    பொங்கல் நல்வாழ்த்துகள்! துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..