நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 04, 2023

கார்த்திகை 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 18
திங்கட்கிழமை
மூன்றாம் சோம வாரம்
 
திருத்தல தரிசனம்
 
திருப்பயற்றூர்


இறைவன்
ஸ்ரீ முக்திபுரீசர்
பயற்றூர் நாதர்


அம்பிகை
ஸ்ரீ காவியங்கண்ணி
நேத்ராம்பிகை

தல விருட்சம்
சிலந்தி மரம்
தீர்த்தம்
கருணா தீர்த்தம்

பக்தன் ஒருவனுக்காக மிளகு மூட்டைகளை பயறு மூட்டைகளாக மாற்றித் தந்தருளிய திருத்தலம்..

பார்வைக் குறைபாடுகளை 
அம்பாள் தீர்த்து அருள்கின்றனள்..

கண் நோய்களுக்கான 
சிறந்த பிரார்த்தனைத் தலம்..


திருவாரூர் மாவட்டத்தில்  திருச்செங்காட்டங்குடி (3 கிமீ) திருமருகல் தலங்களுக்கு  (5 கிமீ) அருகில் அமைந்துள்ளது..


நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 32

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறொழுகி யோட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல்விதிர்த்து அலக்க நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற் றூர னாரே.. 1

உவந்திட்டங்கு உமையோர் பாகம் வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரமனார்தா மலைசிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கண் மூன்றுங் கனல் எரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந் திருப்பயற் றூர னாரே.. 2

நங்களுக்கு அருள தென்று நான்மறை ஓது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள் தத்துவன் தழலன் தன்னை
எங்களுக் கருள்செய் என்ன நின்றவ னாக அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார் திருப்பயற் றூர னாரே.. 3

பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பரை ஆட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதம்
கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதிய நல்ல
தீர்த்தமும் சடையில் வைத்தார் திருப்பயற் றூர னாரே.. 4

மூவகை மூவர் போலு முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலு நான்மறை ஞானம் எல்லாம்
ஆவகை ஆவர் போலும் ஆதிரை நாளர் போலும்
தேவர்கள் தேவர் போலும் திருப்பயற் றூர னாரே..5

ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய்ச் சோமன் ஆகித்
தீயறா நிருதி வாயுத் திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலும் திருப்பயற் றூர னாரே..6

ஆவியாய் அவியு மாகி அருக்கமாய்ப் பெருக்கம் ஆகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமன் ஆகிக்
காவியங் கண்ணள் ஆகிக் கடல்வண்ணம் ஆகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே..7

தந்தையாய்த் தாயும் ஆகித் தரணியாய்த் தரணியுள் ளார்க்கு
எந்தையும் என்ன நின்ற ஏழுலகு உடனும் ஆகி
எந்தை எம்பிரானே என்றென் றுள்குவார் உள்ளத் தென்றும்
சிந்தையுஞ் சிவமும் ஆவார் திருப்பயற் றூர னாரே..8

புலன்களைப் போக நீக்கிப் புந்தியை ஒருங்க வைத்து
இலங்களைப் போக நின்று இரண்டையு நீக்கி ஒன்றாய்
மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந் திருப்பயற் றூர னாரே..9

மூர்த்திதன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற் பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார் திருப்பயற் றூர னாரே..10
-: திருநாவுக்கரசர் :-


திருநாவுக்கரசர் 
திருவடிகள் போற்றி..

**
நேற்று காலையில் 
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் 
கோயிலில் ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமிக்கு 
மகா அபிஷேகமும் 
மாலையில் சந்தனக் காப்பும் 
படி பூஜையும் நடத்தப்பெற்றது..



ஸ்வாமியே
சரணம் ஐயப்பா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

2 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..