நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 26, 2023

திருக்கார்த்திகை

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 10
ஞாயிற்றுக்கிழமை

திருக்கார்த்திகை நாளாகிய இன்று 
திரு அண்ணாமலைத் திருப்பதிகம்


இறைவன்
ஸ்ரீஅண்ணாமலையார்


அம்பிகை
ஸ்ரீஉண்ணாமுலையாள்
தலவிருட்சம்
மகிழமரம்
தீர்த்தம்
சிவகங்கை

திருத்தலத்தின் பெருமையைச்
சொல்லவும் அரிது..


நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 63

ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்தோள் சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே அணிஅணா மலையு ளானே
நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவி லேனே..1

பண்தனை வென்ற இன்சொற் பாவையோர் பங்கா நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே அணிஅணா மலை யுளானே
தொண்டனேன் உன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே..2

உருவமும் உயிரு மாகி ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றஎம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லால் மற்றொரு மாடி லேனே.. 3


பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணிஅணா மலை  யுளானே
என்பொனே உன்னை யல்லால் ஏதுநான் நினைவி லேனே.. 4

பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமரர் ஏத்தும் அணிஅணா மலை யுளானே
இறைவனே உன்னை யல்லால் யாதுநான் நினைவி லேனே..5

புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுல மலிந்த அண்ணா மலையுளாய் அலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே..6


இரவியு மதியும் விண்ணும் இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந் திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி அணிஅணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே..7

பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல் அணிஅணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலால் திறமி லேனே..8


பாலுநெய் முதலா மிக்க பசுவில் ஐந்தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம் அணிஅணா மலையு ளானே
வாலுடை விடையா உன்றன் மலரடி மறப்பி லேனே.. 9


இரக்கமொன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா மலையுளாய் அமரர் ஏறே
சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பி லேனே..10
-: திருச்சிற்றம்பலம் :-


திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
***
அனைவருக்கும்
திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

14 கருத்துகள்:

  1. அனைவர் வாழ்விலும் ஒளி பரவட்டும்; நன்மை எல்லாம் விளையட்டும்.  திருக்கார்த்திகை தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கார்த்திகை தின நல் வாழ்த்துகள்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. அனைவருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துகள்.
    பதிகம் பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கார்த்திகை தின நல் வாழ்த்துகள்.

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  3. திருக்கார்த்திகை தின வாழ்த்துகள்.
    வாழ்க வையகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கார்த்திகை தின நல் வாழ்த்துகள்.

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி ஜி

      நீக்கு
  4. அனைவருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துகள். வீட்டில் பொரி உருண்டை இன்று உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை அவர்களுக்கு திருக்கார்த்திகை தின நல் வாழ்த்துகள்..

      வீட்டில் பொரி உருண்டை உண்டு..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  5. சிறப்பு...

    தீபத்திருவிழா வாழ்த்துகள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீபத் திருவிழா வாழ்த்துகள்..

      மகிழ்ச்சி..
      நன்றி தனபாலன்..

      நீக்கு
  6. அனைவருக்கும் திருக்கார்த்திகை வாழ்த்துகள்.

    திருவண்ணாமலையானே போற்றி போற்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருக்கார்த்திகை வாழ்த்துகள்.

      திரு அண்ணாமலையானே போற்றி போற்றி..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. இந்த வருஷம் அண்ணாமலையாரின் தீபமும் அர்த்த நாரீசுவரரின் தரிசனமும் கிடைக்கப் பெறவில்லை. தொலைக்காட்சியில் கூடப் பார்க்கலை. எப்படியோ விளக்குகளை ஏற்றிப் பொரி நிவேதனம் செய்து தீபங்களை வைத்து விட்டேன். அதுவே பெரிய விஷயம் என்றாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  8. /// இந்த வருஷம் அண்ணாமலையாரின் தீபமும் அர்த்த நாரீசுவரரின் தரிசனமும் கிடைக்கப் பெற வில்லை. தொலைக் காட்சியில் கூடப் பார்க்கலை.. ///

    சங்கடம் தான்..

    சில தினங்களில் வேறொரு பதிவில் சில படங்களைத் தருகின்றேன்..

    தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் நன்றி அக்கா..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..