நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 03, 2023

வைத்யநாதம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 17 
 வெள்ளிக்கிழமை

இன்று
புள்ளிருக்கு வேளூர்
திருப்புகழ்

ஸ்ரீ கற்பக விநாயகர்
ஸ்ரீ செல்வமுத்துக் குமரன்
ஸ்ரீ தையல் நாயகி
ஸ்ரீ வைத்தீஸ்வரன்

சித்தாமிர்த தீர்த்தம்
வேப்பமரம்

ஸ்ரீ செல்வ முத்துக்குமரன்
தனத்தன தானத் ... தனதான
தனத்தன தானத் ... தனதான
 

உரத்துறை போதத் ... தனியான
உனைச்சிறி தோதத் ... தெரியாது

மரத்துறை போலுற் ... றடியேனும்
மலத்திருள் மூடிக் ... கெடலாமோ

பரத்துறை சீலத் ... தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற் ... றருள்வோனே

வரத்துறை நீதர்க் ... கொருசேயே
வயித்திய நாதப் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-
 

உறுதியான ஞானத்தின்
தனிப் பொருளான

உன்னைப் போற்றி வணங்குதற்கு சிறிதும் அறியாமல்

(புழுதி அடைந்த)
மரக்கட்டை போல் அடியேனும்
மும்மலம் எனும் இருளால் மூடப்பட்டு கெட்டுப் போகலாமோ?..

மேல் நிலையில் நற்குணம் உடையவர்களின் வாழ்வாகியவனே..

உனது திருவடியில் பணிந்து வாழ்வு பெறுவதற்கு அருள்பவனே..

(தருகின்ற) வரங்களில் உறைகின்ற 
 சிவபெருமானின் திருமகனே..

வைத்திய நாதனாகிய பெருமாளே...
**

முருகா முருகா
முருகா முருகா..

ஓம் சிவாய 
திருச்சிற்றம்பலம்
***

14 கருத்துகள்:

  1. மும்மலம் அகற்றும் முத்தமிழ் வித்தகனைப் போற்றுவோம்.  ஓம் முருகா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      முருகா சரணம்..

      நீக்கு
  2. வைத்தியநாதப் பெருமாள் அனைவரையும் நலமாக வைக்கட்டும்.
    பாடலை பாடி முருகனையும், வைத்திய நாதரையும் வணங்கி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      முருகா.. முருகா.

      நீக்கு
  3. செல்வமுத்துக் குமரனை வணங்கிப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமரனை வணங்கிப் போற்றுவோம்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  4. பல வருடங்கள் கழிச்சு பெண், மாப்பிள்ளை ஆகியோரால் ஆகஸ்டில் போனோம். நான் அம்மன் சந்நிதியோடு நின்றுவிட மத்தவங்க போய்ப் பார்த்துட்டு வந்தாங்க. அருமையான தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி அக்கா

      நீக்கு
  5. திருப்புகழும், பொருளும், படங்களும் சிறப்பு, துரை அண்ணா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ .

      நீக்கு
  6. பதிவை ரசித்தேன். அதிலும் உங்கள் கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இதில் நான் கவிதை ஏதும் எழுத வில்லையே..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி நெல்லை..

      முருகா சரணம்

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..